Todays Date:

வா.. நெஞ்சத்தின் அக்கிராசனத்துக்கு!

கிளைகள்
குடைபிடிக்க
கீழே
சாய்ந்திருக்கிறாய்

மலர் விழுந்த சோகம்
மரத்துக்கு!

காணும் பொழுதில்
துருவப் பனியாய்
உறைகிறேன்!

பற்றிப் படர்கிறது
காதல்
மெல்லப் பனிகிறது
மோகம்

உருவாகி
கருவாகி
துளிர்க்கிறது தாகம்!

அலைபோல் புருவம்
நாணம் சுரக்கும்!
கருவிழி அசையும்
காந்தம் பிறக்கும்!

அள்ளிக் கொள்கையில்
வினைச்சொல்
உதிரும்!

கண்களின்
கபளீகரத்தை காண்கையில்
உளிதட்டுகிறது
இதயம்!

அணைந்து பிணைந்து
மேவிக் கணையாகி
காதல் பருகுவோம்
வா!

பருகிச் சுவைத்து
மூர்ச்சை இழுத்து
முடிவிலி காண்போம்
வா!

மொத்தமாய் கவர
வித்தைகள் புரிய

தொடுகையில் உணர
நெடுமையாய் ஆள

சத்தம் தவிர்த்து
பித்தம் நிறைக்க

தேவதை உன்னை
காதலோடு அழைக்கிறேன்
என் நெஞ்சத்தின்
அக்கிராசனத்துக்கு!

-இராமானுஜம் நிர்ஷன்-

விரிவாக படிக்க ……..