Todays Date:

மோகம் சுரக்கும் மந்திரம்!









மோகம் சுரக்கும் மந்திரக் கண்களில்
இமைகள் மூடும் சப்தம் கேட்டேன்
காதலின் அந்தம் வரை ருசிக்கத் தூண்டி
வசியப்பட்டுப் போனேன்

கரங்கள் இரண்டும் 
மந்திரக் கோல்கள்
விரல்நுனி பட்டதும் 
விடலையாய் உயிர்க்கிறேன்


தாடை இழுத்துப் பேசும் பொழுதில்
வகுளம் பூவின் 
மருத்துவம் உணர்கிறேன்



இதழ்கள் அவிழ்க்கும் 
பெண்மை நீ
முத்தம் குடிக்கும் 
மிருகம் நான்!


அசைவில் இசைதரும் காரிகை நீ
அதை மீட்டத் துடிக்கும் ரசிகன் நான்!


கடந்து செல்கிறாய்
ஆனந்தத்தின் உச்சியில்
தவழ்கிறது மனது


புன்னகை செய்கிறாய்
பண்டிகை போல
கொண்டாடுகிறது மனது


நம் சந்திப்புகளை
பிரதியிட்டு சேமித்திருக்கிறேன்
பிரசவத்துக்காக காத்திருக்கும்
கனவுகளோடு!

வா!
முதுமையின் எல்லைவரை
இளமையாய் காதலிப்போம் 
வா!

அழகிய தேசம் எதுவும்
வேண்டாம் எமக்கு!

நானும் நீயும் என்றாலே - புது
உலகம் தானே நமக்கு!


-இராமானுஜம் நிர்ஷன்-



விரிவாக படிக்க ……..