Todays Date:

எம்மை விட்டுப் பிரிந்த தமிழ்ப் பொக்கிஷம் தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவாக



நான் ரொம்பச் சிறியவனாக இருந்த காலத்திலிருந்து என்னை வழிநடத்தவேண்டும் என்று சிரமப்பட்டவர்களில் முகுந்தன் அண்ணாவும் ஒருவர்। யாழ் மண்ணின் மைந்தராகிலும் மலையக ஆலயங்களுக்கும் அறநெறிப்பாடசாலைகளுக்கும் அவர் ஆற்றிய பங்கு சொல்லில் அடங்காதது।

ஏராளமான சமய,தமிழ் நூல்களை எனக்குத் தந்து சமயப்பணியில் ஈடுபடவைத்தவர் அவர்। நீண்டகாலமாக பிரிந்திருக்கும்போதும் முகுந்தன் அண்ணாவின் உதவிகளையும் அறிவுரைகளையும் என்றும் மறக்கமுடியாதவனா இருக்கிறேன்।( இன்னும் நிறைய கூறலாம்)।ஈழமே மனதால் அழுத நாள் சைவச்செம்மல் தங்கம்மா அப்பாக்குட்டியின் இறப்பு। அவரைப்பற்றி பதிவெழுதாமைக்கு காரணத்தை முகுந்தன் அண்ணா வினவியிருந்தார்। அப்போது எனது மாணவர்களுக்காக அம்மையார் பற்றிய பல தகவல்களை நான் திரட்டிக்கொண்டிருந்தேன்। அம்மையாரைப் பற்றி எழுதவேண்டும் என்று பல நாட்கள் நினைத்துக்கொண்டிருந்தாலும் தகவல்பல திரட்ட தாமதமானது। இந்நிலையில் முகுந்தன் அண்ணா அம்மாவைப்பற்றி எழுதிய கட்டுரை ஒன்று எனக்குக் கிடைத்தது। அதனை இங்கு தருகிறேன்।
தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை – யோகர் சுவாமிகள்

துர்க்காதுரந்தரி, சிவத்தமிழ்ச்செல்வி, திருவாசகக் கொண்டல், பண்டிதை, செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் அவர்கள் அம்பிகையின் பாதாரவிந்தங்களை இறுகப்பற்றிப் பிறவாத பேரின்பமுத்தியடைந்தார் என்ற செய்தியறிந்து தாயினைப் பிரிந்த கன்றினைப்போல சொல்லமுடியாதளவு பிரிவுத்துயர் கொண்டேன்;. நல்லூர் சிவயோக சுவாமிகள் கூறிய எப்பவோ முடிந்த காரியம் ஒரு பொல்லாப்பும் இல்லை முழுதும் உண்மை நாமறியோம் என்ற நான்கு மகாவாக்கியங்களின் பொருளை உணர்ந்து – நமக்குள் நாமே எம்மைத் தேற்றி அன்னாருடைய பூதவுடலுக்கு அஞ்சலி செய்ய முடியாது கடல் கடந்து சுவிற்சலாந்து தேசத்தில் வாழும்நிலையில் எம்மனக்கண்முன்னே புன்முறுவல் பூத்த அம்மையாருடைய புகழுடம்புக்கு நான் அஞ்சலி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். அடியேன் கடந்த 30 வருடங்களுக்கு மேற்பட்டகாலம் அம்மையாருடன் தொடர்பு கொண்டிருந்ததை இந்தநேரத்தில் மீட்டுப் பார்த்து-அதனை வெளிப்படுத்த வேண்டியவனாக இருக்கின்றேன்.

1977ம் ஆண்டு கடைசிக் காலங்களில் நாம் தெல்லிப்பழை ஸ்ரீ காசிவிநாயகர் ஆலயத்திற்குப் பக்கத்தில் குடிவந்த காலங்களில் காசிப்பிள்ளையாரிடமும் துர்க்காதேவியம்பாளிடமும் தினமும் சென்று வழிபட்டு வருவதுடன் ஆலயத் தொண்டுகளிலும் ஈடுபட்டுவந்தேன். துர்க்கையம்பாள் ஆலயத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை மாலையிலும் அடுத்தநாள் செவ்வாய்க்கிழமை விசேட பூசைகளுக்காக பல தொண்டுகள் செய்துவந்தோம். அம்மையாரை நாம் எல்லாரும் ரீச்சர் என்றே பாசமாக அன்புபாராட்டி அழைத்து வந்தோம். ஆலயத்தை மிகவும் உன்னத நிலைக்கு இன்று கொண்டுவந்த அவரது அயராத உழைப்பை - அன்னை அம்பிகையிடம் தன்னை அர்ப்பணித்த பாங்கை எடுத்துரைக்கச் சொல்லால் முடியாது. இராச கோபுரம் – சித்திரத்தேர் - தீர்த்தத்தடாகம் அன்னதான மடம் கல்யாண மண்டபம் மட்டுமல்ல அம்பிகையின் அழகிய திருவுருவச் சிலை வார்ப்பு, இன்று கணீரென ஒலித்துக் கொண்டிருக்கும் கண்டாமணி வார்ப்பு – சைவ சித்தாந்த திருமுறை மாநாடு – சண்டிமகாஹோமம் என்பவற்றைத் திறம்பட நடாத்தி முடித்ததும் ஹரிதாஸ்கிரி சுவாமிகள், திருமுருக கிருபானந்தவாரியார் ஆகியோரைத் தரிசிக்கும் பேறு எமக்குக் கிடைத்ததும் அன்னையுடைய அளப்பரிய அடக்கமான சேவையினால் என்றால் மிகையாகாது.

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் வீ. தர்மலிங்கம்; அவர்கள் தனியாக ஆலயத்திற்கு வருகைதந்துவிட்டு வீடு செல்லும்போது(அவர் நிர்வாக சபையில் இருந்தாரா என்பதை நான் சரியாக தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி அவர் அங்கு வருவதைக் கண்டிருக்கின்றேன்) நான் அவரது வாகனத்தில் கோவிலிலிருந்து மில்க்வைற் அதிபர் சிவதர்மவள்ளல் மறைந்த க. கனகராசா அவர்களிடம் போவது வழக்கம். அவரும் அவரது துணைவியாரும் அடிக்கடி ஆலயத்திற்கு வந்துபோவதுண்டு. எனது பெரிய தந்தையார் மறைந்த அ. அமிர்தலிங்கம் அவர்களும் குடும்பத்துடன் ஆலய வழிபாடு செய்யப் போகும்போது நானும் போவதுண்டு. ஆலயத்தில் வசந்தமண்டபத்திலும் தெற்குவாசலிலும் அடிக்கடி தேவாரம் பாடும்பணி எனக்குக் கிடைப்பதுண்டு. செவ்வாய்க்கிழமை மாலையில் வசந்த மண்டப பூசைகளின் பின்னர் தினமும் ரீச்சருடைய அருளுரை இடம்பெறும். அரனையும் அறத்தையும் வலியுறுத்தும் அப்பேச்சுக்கள் மன அழுக்குகளை நீக்கப் பெரிதும் உதவின. அதன்பின் சிலவேளைகளில் ரீச்சர் என்னைத் தேவாரம்பாடும்படி சொல்லிவிட்டு வேறு அவசிய தேவைகளுக்காக அலுவலகத்திற்குச் சென்றுவிடுவதுண்டு.

ஆலயத்தின் தேவைகளுக்காக கொழும்பிலிருக்கும் அடியார்களுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள நாமிருந்த அலுவலகத்திற்கு வருகைதந்து நீண்ட நேரம் காத்திருந்து அனைவருடனும் தொலைபேசியில் பேசி தனது பணிகளைச் செம்மையாகச் செய்த பெருந்தகை அவர். ஏனெனில் அன்றைய நிலையில் தொலைபேசி ஆலயத்திற்கு அண்மையில் எமது காரியாலயத்தில் மாத்திரம் இருந்தது.

மகாஜனாவின் உனை நீ அறி என்ற கல்லூரி வாசகமும், காசிப்பிள்ளையார் கோவில் பிரதம குருக்கள் மறைந்த கணேசலிங்கக்குருக்கள்ஐயா, ம. சி. சிதம்பரப்பிள்ளை, ஆசிரியர் விநாயகரத்தினம், ஆசிரியை கலாதேவி போன்றோரது தொடர்பும்; நான் சமயப் பணியில் ஈடுபட பெரிதும் உதவின. குறிப்பாக கீரிமலைச் சிவநெறிக் கழகம் நடத்திய கதாப்பிரசங்கப் போட்டிகளுக்காக என்னைத் தயார்படுத்திய பெருமை இப்பெரியார்களுக்கே உண்டு. ரீச்சர் காசிப் பிள்ளையார் கோவிற் பணிகளிலும் பாலர் ஞானோதய சபையுடனும் பெரிதும் தொடர்புபட்டிருந்தார்.

1985ல் எமது மூளாய் இந்து இளைஞர் மன்றத் திறப்புவிழாவுக்கு ரீச்சர் வருகைதந்தது மட்டுமல்ல பலதடவைகள் எமது பிள்ளையார் கோவிலுக்கும் வந்து சொற்பொழிவாற்றி எமக்கு நல்லறிவும் தெளிவும் தந்தார்.

சுன்னாகம் திருமகள் அச்சகத்தைப் பொறுப்பெடுத்து பெரிய புராண வசனச் சுருக்கத்தை மறுபிரசுரம் செய்த பெருமை ரீச்சருக்குண்டு.

ஆலயத்தின் நகைகளும் பெறுமதிமிக்க பொருட்களும் கொள்ளையிடப்பட்டபோதும்;, வசந்த மண்டபத்திற்கு அருகிலுள்ள களஞ்சிய அறை படையினரின் எறிகணைத் தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்த பொழுதும், மனவுறுதியுடன் எல்லாம் அவளே பார்த்துக் கொள்வாள் என்று எமக்கு ஆறுதல் சொல்லித் தேற்றிய மனதிடத்தை நினைவிற்கொள்ளவேண்டும். களவுபோன நகைகள் மீள வந்ததே அம்பாளின் அனுக்கிரகம் என்பதை விட ரீச்சரின் அருள்வாக்கு என்றால் மிகையாகாது. ஏனெனில் அம்பாள் வேறு ரீச்சர் வேறாக என்னால் கருத முடியவில்லை. காரணம் ஏற்கனவே சொன்னதுபோல தன்னை அறிந்தால் அது நீயாகிறாய் என்னும் தத்வமஸி என்ற உண்மை புலப்படும்.

நாட்டின் அனர்த்தங்களினால் நாம் இடம்பெயர்ந்து கொழும்பிலிருந்தபோது அங்கு வருகைதரும்போதும் நாம் அம்மையாரைச் சந்தித்து வந்ததுண்டு(திரு. எஸ். கே. பொன்னம்பலம் அவர்கள் வீட்டில்). ரீச்சருடைய பிறந்த நாள் ஒன்றுக்கு கொழும்பிலிருந்து கூட்டணித்தலைவர் மு. சிவசிதம்பரம்;, அ. தங்கத்துரை, வீ. ஆனந்தசங்கரி, மாவை. சேனாதிராசா ஆகியோருடன் நானும் ஒரு வாழ்த்துக் கடிதம் கையொப்பமிட்டு அனுப்பியிருந்தோம். அதற்கு நன்றி தெரிவித்து ரீச்சர் பதிற் கடிதம் எழுதியிருந்தார். கடிதமோ, பணமோ எது வரினும் அவர்களுக்கு உடனுக்குடன் பதில் எழுதும் வழக்கம் கொண்டிருந்தார். (இதனை மிகவும் அழகாக ரீச்சருடைய இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட நீதிபதி. ஆர் ரி. விக்னராஜா அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.)

1997ல் யாழ் மாநகர சபைத் தேர்தல் பணிகளுக்காக யாழ் வந்த சமயம் அம்மையாரைத் தரிசிக்க ஆலயத்துக்கு வந்தவேளையில் என்னை அந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கூறியதற்கு அமைய நான் தேர்தலில் போட்டியிடாது அவரது கட்டளைக்கு அடிபணிந்து நடந்துகொண்டேன். அதன்பின் முதல்வர் சரோஜினி யோகேஸ்வரனின் அகாலமரணத்தின்பின்னர் மாநகர சபையை நடாத்த எவருமில்லாதபோது நாம் மறைந்த முதல்வர் சிவபாலன் மற்றும் இரவிராஜ் அவர்களுடன் சேர்ந்து போய் சந்தித்தபோது நான் உறுப்பினராக வரவிருப்பதை அவருக்கும் தெரிவித்து அவரது ஒப்புதலுடன் மாநகர சபை உறுப்பினரானேன். எனது திருமணத்தை தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் நடத்த தீர்மானித்தபோது அன்றைய நாளில் வேறோரு திருமணம் நடக்க இருந்தபடியால் நல்லூர் துர்க்காமணிமண்டபத்தில் நடத்த ஒழுங்குசெய்து தந்ததுடன் எனது திருமணநாளன்று முழுநேரமும் நல்லூரில் வந்து நின்று எம்மை ஆசீர்வாதம் செய்து வாழ்த்தியதை எப்படி என் வாழ்நாளில் மறக்கமுடியும். எமது கட்சித் தலைவர்கள் வீ. ஆனந்தசங்கரி, இரா. சம்பந்தன்;, ந. இரவிராஜ் ஆகியோருடனும் துர்க்காபுரம்போய் அம்மையாரைச் சந்தித்ததையும் இவ்விடத்தில் நினைவுபடுத்துவது நல்லது. மறைந்த பாராளுமன்ற உறுப்பினரும் தெல்லிப்பழை ப.நோ. கூ. சுங்கத் தலைவருமான சிவமகாராசா அவர்களும் ஆலயத்துடனும் ரீச்சருடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தமை
யாவரும் அறிந்ததே.

தழிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மறைந்த தந்தை செல்வா, ஜீ. ஜீ பொன்னம்பலம் ஆகியோர் மீதும் பெரும்மதிப்ப வைத்திருந்த ரீச்சர் அவர்கள் மறைந்த குமார் பொன்னம்பலம் அவர்களது நினைவாக வெளியிடப்பட்ட நினைவு நூலிலும், எனது பெரியதந்தையார் மறைந்த அ. அமிர்தலிங்கம் அவர்களுடைய நினைவு மலரிலும் தனது செய்தியை தெரிவித்திருப்பதையும் நான் குறிப்பிடவேண்டும்.

கடந்த ஞாயிறு 15.06.2008 காலையில் அதாவது அவர் உயிர்பிரிந்த நாளில் நானும் இலண்டனில் வசிக்கும் எனது பெரிய தாயாரும் (திருமதி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம்) ரீச்சரைப்பற்றிப் பேசியிருந்தோம். தனக்கு சிவத்திரு. சிவபாலன் அவர்கள் கோவில் பிரசாதம் அனுப்பியிருந்ததாகவும் அதில் ரீச்சருடைய உடல்நிலை பற்றி எழுதப்பட்ட கடிதத்தில் தம்பி முகுந்தனுக்கும் அறிவிக்கவும் அவர்தான் எம்மை உங்களுக்கு அறிமுகம் செய்தார் என்றும் குறிப்பிட்டதாகத் தெரிவித்திருந்தா. நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல 30வருடங்களாக சிவத்திரு. சிவபாலன் அவர்களையும் ரீச்சரைச்சந்தித்த காலத்திலிருந்தே தெரியும். நாமனைவரும் ஒரு குடும்பமாக – ஆத்மீகத்தில் - அன்பில் - தொண்டில் மானசீகமான பக்தித் தொடர்பில் பிணைக்கப்பட்டிருந்தோம். அம்மையார் ஈழநாட்டின் நாவலருக்கு அடுத்த ஆறாம் சமயகுரவராகப் போற்றப்பட வேண்டிய பெருமைக்குரியவர். அறுபத்து மூன்று நாயன்மார் வரிசையில் வரும் பெண்ணடியார்கள் மூவரையொத்த பெரும்பணியாற்றியவர். நமது நாட்டில் மாத்திரமல்ல பல வெளிநாடுகளுக்கும் சென்று தமிழ்ப்பணியும் சமயப்பணியும் புரிந்த பெருமைக்குரியவர். அனைவருடனும் எளிமையாகவும், புன்முறுவல் பூத்தமுகமுடையவராய் அன்பொழுகப் பேசி அனைவரது நெஞ்சங்களிலும் என்றும் நீங்காமல் உறைகின்ற பெருமையுடையவர். செல்லும் அனைவருக்கும் போதும் போதும் என வயிறாரச் சோறு போட்ட பெருமையுமுடையவர்.

அன்னாரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவுக்கு எம்முடன் பாசத்தில் பிணைந்திருந்தார். அவரது பணிகளைப்பற்றி பலரும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தான் எங்கே வேறு இடங்களுக்குச் சென்றால் தனது பராமரிப்பில் இருக்கும் பிள்ளைகளை தவிக்க விட்டுவிடுவோமோ என்ற ஆதங்கமும் பொறுப்பும் கொண்டிருந்த ரீச்சர் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் நல்லூர் மணிமண்டபத்திற்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வேளி நிகழ்ச்சிகளைப் பெரும்பாலும் தவிர்த்துக்கொண்டு தனது கடமையைச் செவ்வனேசெய்தார். செஞ்சொற் செல்வர் சிவத்திரு. ஆறுதிருமுருகன் அவர்களைத் தமக்குப்பின்; தனது பொறுப்பை ஒப்படைத்தார் என்று நான் கூறுவதில் பெருமையடைகின்றேன். ஏனெனில் இதுகூட ஒரு குருபரம்பரையையொத்த பணியென நான் கருதுகின்றேன். முற்றிலும் மாறுபட்ட - வாழ்வே கேள்விக்குறியாக இருக்கும் எம் இனத்தின் கண்ணெனத் திகழ்ந்தவர் ரீச்சர் அவர்கள். ஓவ்வோர் செவ்வாய்க்கிழமையும் ஆலய வழிபாட்டில் தமிழ்ப் பண்பாட்டையும், வாழ்வில் எளிமையையும் கடைப்பிடிக்க அவர் கூறும் அறிவுரைகள் - ஏனைய ஆலயங்களுக்கு ஒரு முன்மாதிரி.

எமக்கெல்லாம் உறுதுணையாக வழிகாட்டியாக இருந்த அம்மையாரைப் பிரிந்து இன்று தவிக்கும் துர்க்காபுர மகளிர் இல்லச் சிறுமியருக்கும், (அவர்களது சோகத்தை நாம் ஒருபோதும் தேற்றமுடியாது. வீரகேசரி இணையத்தளத்தில் வெளியான புகைப்படங்களைப் பார்க்கையில் கண்ணீர் மல்கினேன். எமக்கு ரீச்சரின் செய்திகளை விரிவாகத் தந்த வீரகேசரி மற்றும் தினக்குரல், உதயன், தமிழ்நெற், லங்காசிறி, ஈரஅனல் போன்ற இணையத்தளச் செய்தி நிறுவனங்களுக்கு எமது மனம்நிறைந்த நன்றிகள்) தொண்டர் அணியினருக்கும், ஆலய நிர்வாகசபையினருக்கும், தாயாயிருந்து வழிநடத்திய இந்து இளைஞர் சங்கத்தினருக்கும் மற்றும் அம்பிகை அடியார்களுக்கும் எல்லாம்வல்ல ஸ்ரீ துர்க்காதேவியம்பிகை மனதைரியத்தையும், சாந்தியையும் வழங்க மனதாரப் பிரார்த்தித்து ரீச்சரின் ஜீவாத்மா அன்னை துர்க்காதேவியின் பாதாரவிந்தங்களில் நித்தியப் பேரின்பத்தில் ஐக்கியப்பட்டுச் சரணடையப் பிரார்த்தித்து எனது இக்கண்ணீர்க் காணிக்கையைச் சமர்ப்பிக்கின்றேன்.

என்றும் ரீச்சரின் மறவாத நினைவுகளுடன் கலங்கிநிற்கும்
தங்க. முகுந்தன்.

விரிவாக படிக்க ……..

எனக்குப் பிடித்த விவேகானந்தர்!


சிறுவயதிலிருந்தே சுவாமி விவேகானந்தரை மனதளவில் நேசிக்கும் விவேகானந்தப் பிரியன் நான்। அவரது சிந்தனைகள் என் மனதின் ஆழங்களை உணர்வுகளை தொட்டு சிந்தனைகளை துளிர்விடச்செய்தன। என் ஒவ்வொரு மேடைப்பேச்சின்போதும் , ஏன் என்னுடைய மாணவர்களுக்குக் கூட சுவாமியின் கருத்துக்களை தெளிவாக விளக்கியிருக்கிறேன்।


எனக்குக்கிடைத்த நான் சேகரித்த சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை இங்கு தருகிறேன்.

01. நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைக்கு மதம் காரணமல்ல. மதத்தை முறையாக பின்பற்றாமல் போனதுதான் சமுதாய வீழ்ச்சிக்குக் காரணமாகும்.
02. எவனுடைய இதயம் ஏழைகளுக்காக இரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன். மற்றவர்களெல்லாம் துர்ஆத்மாக்களே.
03. எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரை நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை செய்துமுடிப்பீர்கள்.
04. கீழ்த்தரமாக காரியங்களால் எதையும் நிறைவாக சாதித்துவிட முடியாது.
05. தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒருசிலரின் வரலாறே உலக சரித்திரமானது.
06. உன்னை நீயே பலவீனன் என நினைத்துக்கொள்வது மிகப்பெரிய பாவம்.
07. உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை து}ற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.
08. செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
09. "நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"
10. "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!"
11. "நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்."
12. "பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!"
13. "கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்."
14. "உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி."
15. "அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு."
16. "மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்."
17. "சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை."
18. "நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன."
19. "அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."
20. "உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்."
21. "உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன."
22. இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.
23. பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.
24. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
25. இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால், பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும்.
26. அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும். நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான்.
27. ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.
28. பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
29. உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.
30. வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
31. தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
32. இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.
33. வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தளைகளிலிருந்து விடுபடுங்கள்!
34. இளைஞனே, வலிமை, அளவற்ற வலிமை இதுவே இப்போது தேவை.
35. சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!
36. உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.
37. இதை நம்பு. உள்ளத்தில் இதை ஊன்றச் செய். மாண்டவர் மீள்வதில்லை. கழிந்த இரவு வருவதில்லை. வீழ்ந்த அலை எழுவதில்லை. ஒரு முறை பெற்ற உடலை மீண்டும் மனிதன் பெறுவதில்லை. எனவே, ஓ மனிதா இறந்துபோன பழங்கதையை வணங்காதே! வா இங்கு வாழும் நிகழ்காலத்தை வனங்கு. சென்றதை நினைத்து புலம்பாதே. இன்று உள்ளதைக் கண்டு அதில் பங்கு கொள். அழிந்துபோன கரடு முரடான பாதையில் சென்று உனது சக்தியை வீணாக்காதே. உன்னருகே உள்ள புதிய செப்பனிடப்பட்ட நன்கு வகுக்கப்பட்ட ராஜபாதையில் செல். வா! உன்னை அழைக்கிறோம்.
38. எல்லா பேய்களும் நம்முடைய மனத்திலேதான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கி இருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் எங்கிருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும். மூடப்பட்டுள்ள கதவை எப்படி தட்ட வேண்டும், எப்படி தேவையானபடி தாக்கவேண்டும் என்பது மட்டும் நமக்கு தெரிந்து இருந்தால் உலகம் தனது ரகசியங்களை வெளியிடத் தயாராக இருக்கிறது. அத்தகைய வலிமையும் தாக்கும் வேகமும் எல்லோருக்கும் கிடைத்து விடாது. மனதை ஒருமுகப் படுத்துபவனுக்கே இந்த வலிமை கிட்டும். மனித உள்ளத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை.
39. பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.
40. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
41. அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும். நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான்.ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.
42. பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
43. உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.
44. வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
45. தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
46. இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.
47. வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தளைகளிலிருந்து விடுபடுங்கள்!
48. இளைஞனே, வலிமை, அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை.சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!
49. உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.
50. தீண்டாமையை தீவிர கொள்கையாகவும் உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.
51. பெரிய புத்தகங்களை படிப்பதாலும் அவ்வாறு படித்து பேரறிஞர் ஆவதாலும் ஆன்மிக உணர்வைப் பெற முடியாது என்பது நிச்சயம்.
52. சங்கங்கள் ஏற்படித்தி கூட்டங்கள் சேர்த்து எவரும் ஆன்மிக உணர்வை பெற முடியாது. அன்பின் மூலமாகத் தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஆன்மிக உணர்வை செலுத்த முடியும். ஆன்ம ஞானத்தைப் பெற விரும்பும் ஒருவன் தொடக்கத்தில் புற உதவிகளைப் பெற்று சுயபலத்தில் நிற்க வேண்டும். ஆன்ம ஞானம் கிட்டிய பின் பிற உதவிகள் தேவையில்லை.
53. கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.
54. எல்லாப் பெருமையையும், எல்லா ஆற்றலையும், எல்லாத் து}ய்மையையும் ஆன்மா து}ண்டுகிறதே தவிர, ஆன்மாவைத் து}ண்டுவது எதுவும் இல்லை.
55. ஆன்மிக உணர்வை பெறாதவரை நமது நாடு மறுமலர்ச்சி அடையாது. ஆன்மிக வாழ்க்கையில் பேரின்பம் பெறாமல் போனால், புலனின்ப வாழ்க்கையில் திருப்தியடைய முடியாது. அமுதம் கிடைக்காமல் போனால் அதற்க்காகக் சாக்கடை நீரை நாடிச் செல்லமுடியாது.
56. ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.
57. ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச் சிறந்த கருவி, அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும்.எங்கு பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ,அங்கே தேவதைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.எங்கே அவர்கள் மதிக்கப் படவில்லையோ,அங்கே எல்லா காரியங்களும் முயற்சிகளும் நாசமடைகின்றன.எந்த நாட்டில்,எந்த குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ அந்த நாடும் குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை!
58. தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.
59. எல்லாவற்றிலும் பரம் பொருளைப் பார்ப்பதுதான் மனிதனின் லட்சியமாகும். எல்லாவற்றிலும் பார்க்க முடியாவிட்டாலும் நாம் நேசிக்கும் ஒரு பொருளிலாவது பார்க்க வேண்டும். பிறகு இன்னொன்றில் பார்க்க வேண்டும். இப்படியே இந்தக் கருத்தை விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
60. எல்லாவற்றையும் கடவுளாகப் பார்ப்பதற்கு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சமயத்தில் நிச்சயம் அந்த லட்சியத்தை அடைந்துவிடுவோம்.
61. தீமையை எதிர்க்காதீர்கள், அகிம்சையே மிக உயர்ந்த ஒழுக்க லட்சியம் என்று ஆச்சாரியார்கள் உப தேசித்து இருக்கிறார்கள். இந்த உபதேசத்தை நம்மில் சிலர் அப்படியே கடைப்பிடிக்க முயல்வோமானால் சமுதாய அமைப்பே இடிந்து து}ள் து}ளாகி விடும்.
62. அயோக்கியர்கள் நம் சொத்துக்களையும் நம் வாழ்க்கையையும் பறித்துக் கொண்டு தங்கள் விருப்பப்படி நம்மை ஆட்டி வைப்பார்கள். இது நமக்குத் தெரியும். இத்தகைய அகிம்சை சமுதாயத்தில் ஒரேயொரு நாள் கடைப்பிடிக்கப்பட்டாலும் கூட பெரும் நாசமே விளைவாக இருக்கும்.
63. ஆனாலும் தீமையை எதிர்க்காதீர்கள். என்ற உபதேசத்தின் உண்மையை உள்ளுணர்வின் மூலமாக நம் இதய ஆழங்களில் உணரவே செய்கிறோம். இது மிக உயர்ந்த லட்சியமாக நமக்குத் தோன்றுகிறது. என் றாலும் இந்தக் கோட்பாட்டை உபதேசிப்பது என்பது மனித குலத்தின் பெரும் பகுதியை நிந்திப்பதற்கே சமமாகும்.
64. அதுமட்டுமல்ல,தாங்கள் எப்போதும் தவறையே செய்கிறோம் என்ற எண்ணத்தை அது மனிதர்களிடம் உண்டாக்கிவிடும். அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும் அவர்களின் மனசாட்சியில் சந்தேகங்கள் எழுந்த வண்ணமே இருக்கும். இது அவர்களை பலவீனப்படுத்துகிறது.
65. இவ்வாறு தொடர்ந்து தங்களை மறுப்பது, மற்ற பலவீனங்கள் உண்டாக்கும் தீமையை விட அதிக தீமையைத் தரும். எந்த மனிதன் தன்னைத்தானே வெறுக்கத் தொடங்கிவிட்டானோ, அவனுக்கு அழிவின் வாசல் எப்போதோ திறந்துவிட்டது. இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நமது முதல் கடமை நம்மை நாம் வெறுக்காமல் இருப்பதுதான். ஏனென்றால் நாம் முன்னேற வேண்டுமென்றால் முதலில் நமக்கு நம்மிடம் நம்பிக்கை வேண்டும். பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும்.
66. தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடமும் ஒரு போதும் நம்பிக்கை வைக்க முடியாது.
67. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை).
68. "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" "'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.
69. பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!
70. கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
71. உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.
72. அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
73. மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.
74. சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
75. நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
76. அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
77. உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.
78. உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
79. எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ் அந்த நாடும் பாழ்.
80. நமக்குப் பல அனுபவங்களை பெற்றுத்தர இந்த உலகம் படைக்கப்பட்டது. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் நம்மால் அனுபவிக்கப் பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. அதற்காக அது வேண்டும், இது வேண்டும் என யாரிடமும் கேட்காதே. வேண்டுதல் ஒரு பலவீனமாகும். இந்த வேண்டுதல்தான் நம்மை பிச்சைக்காரர்களாக்குகிறது. நாம் அனைவரும் ராஜகுமாரர்கள். பிச்சைக்காரர்கள் அல்ல.
81. இயற்கை என்றும், விதி என்றும் எதுவும் கிடையாது.கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுவே நடக்கும்.
82. கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.
83. ஏதாவது தவறு செய்துவிட்டால், ""ஐயோ! நான் தீயவன் ஆகிவிட்டேனே!'' என்று வருத்தப்பட வேண்டாம். நீ நல்லவன்தான். ஆனால், இன்னும் உன்னை நல்லவனாக்க முயற்சி செய்ய வேண்டும்.
84. உலக மக்கள் இன்று கடவுளை கைகழுவி வருகிறார்கள். காரணம் கேட்டால், "கடவுள் எங்களுக்கு என்ன செய்தார்? அவரால் எங்களுக்கு என்ன பயன்?' என்று கேட்கிறார்கள். நீங்கள் கேட்பதை எல்லாம் செய்வதற்கு கடவுள் ஒன்றும்நகரசபை அதிகாரி அல்ல.
85. மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சமபங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது. நன்மையைப் போல் தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான்.
86. உலக இன்பம் மனிதவாழ்வின் லட்சியமாக இருக்கக்கூடாது. ஞான இன்பம் அடைவதையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். ஞானம் என்பது ஆண்டவனை உணர்வதும், சக மனிதர்களை ஆண்டவனாய் காண்பதுமாகும்.
87. உதவி செய், சண்டை போடாதே, ஒன்றுபடுத்து, அழிக்காதே, சமரசமாய் இரு, சாந்தம் கொள், வேறுபாடு காட்டாதே.
88. உலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள். தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச் சரிப்படுத்த தகுதியானவன்.
89. பலவீனமாக இருக்கிறோமே என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும்.
90. சுடுகாட்டுக்கு அப்பாலும் நம்மைத் தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கமே. மற்றவை யாவும் மரணத்துடன் முடிந்துவிடும்.

விரிவாக படிக்க ……..

அந்த நாள்...!



அதிகாலை மல்லிகையை
பறித்துவந்து அதில் வழிந்த
சொட்டுப் பனித்துளியை
நுனிவிரலில் ஏந்தி
இனிக்கிறது தேன் என்று சொன்ன
அந்த நாள்…


ரயில் பாதையில்நான்
ஓடி விழுந்தபோது
உன் கைக்குட்டையில்எச்சில் தடவி
ஒத்தடம் கொடுத்த
அந்த நாள்…


கரப்பானுக்கு பயந்து
கூரையில் ஏறி
தவறி விழுந்ததாய்
நீ கண்ட கனவை
நள்ளிரவில் தொலைபேசியில் கூறி
என் கனவைகலைத்த நாள்…..

யாரோ ஒருவன்
வீதியில் இறந்துகிடக்கஅருகில்
அவன் மனைவிஅழுவதைப்பார்த்து
என்னைக்கட்டிப்பிடித்து
எப்போதும் என்னுடன் இருப்பாயா என
ஏக்கத்துடன் கேட்ட நாள்…

மாமாவுடன் பேசியபொழுது
இடையில் என்பெயரைக் கூறி
நீ தடுமாறித் தவித்ததைஅதே பயத்துடன்
மழலை மொழியில்கூறிய
அந்த நாள்…

நகம்கடிக்கும் பழக்கத்தைவிடச்சொல்லி
நீ விரல்கடித்துக்கொண்டு
அழுதுத் துடித்த
அந்த நாள்…

எப்போதோ நாம்ஒன்றாய் பயணித்த
பயணச்சீட்டைபத்திரப்படுத்தி
அடுத்தவருடம் அதே தினத்தில்
முத்தம்கொடுத்தாயே
அந்த நாள்…

இவை அத்தனையும்॥
ஏன் இன்னும் எத்தனையோநினைவுகளை
அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன்…

யாரோ வைத்த கண்ணிவெடியில் - நீ
கண்ணிமைக்கும் நேரத்தில்
சிதறிப்போனதைத் தவிர…।

-ஆர்.நிர்ஷன

விரிவாக படிக்க ……..