Todays Date:

என்னைத் தொலைத்த நான்..!



மெழுகுவர்த்தியில் அவள்
முகம்பார்த்துப் பின்
பேனை பிடித்து – அந்த
மனோகரத்தை வரையும்
வேலையில்லாதவன் நான் ..!

கண்திரை மூடும்போதும்
நித்திரை வேண்டாமென
நித்தம் உன்
நினைவில் வாடிய
ஜீவனில்லா ஜடம் நான் ..!


அல்லிப்பூவின் இதழ்கொண்டு
வெள்ளைமணலில் பெயர்செதுக்கி
கடலைத்தூற்றி
கரையை அணைத்த
பைத்தியக்காரன் நான் ..!

மனோகரத் தோற்றத்துக்கு
மணிமணியாய் வார்த்தை தேடி
தமிழில் வார்த்தை கொஞ்சம் என
ஒருவரியில் பொய்சொன்ன
பொல்லாதவன் நான் ..!

துணையாய் இருப்பாயென நம்பி
தோள்கொடுத்த
தோழனை தூக்கியெறிந்து
தனிமையில் தவித்த
துரதிர்ஷ்டசாலி நான் ..!

நெஞ்சம் செய்யும்
கபளீகரத்தில்
தாயின் நெருடலை
தொல்லையென்றொதுக்கிய
துர்மனக்காரன் நான் ..!

மொத்தத்தில்
காதலுக்காக
வாழ்வை இழந்து
காதலிக்காக
என்னை இழந்த
உதாரணவாதி நான் ..!



-இராமானுஜம் நிர்ஷன்
இறக்குவானை.

14 comments:

கிரி said...

நிர்ஷன் ரொம்ப நாளா ஆளை காணோம் எங்க போனீங்க !

இறக்குவானை நிர்ஷன் said...

கொஞ்சம் வேலை.சில பிரச்சினைகள். அதுதான் வரமுடியவில்லை கிரி.

நன்றிகள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நிர்ஷன் தொடர்ந்து எழுத வேண்டும்.
தங்கள் வலைப்பக்கம் மிளிர்கிறது!

அன்புடன்.
ஜோதிபாரதி.

ஹேமா said...

காதல் கை கூடும் என்று நம்பி இருப்பதையெல்லாவற்றையும் இழக்கிறோம்.அந்தக் காதலே துரோகமாகும்போது....!அருமை.

நன்றி நிர்ஷன் இலங்கை வரும்போது நிச்சயம் வருவேன் உங்களைச் சந்திக்க.நான் ஏற்கனவே 3 தடவைகள் இறக்குவானை வந்திருக்கிறேன்.அழகான பசுமையான அதைவிடப் பழக இனிமையான் கள்ளமில்லா மனிதர்கள் வாழுமிடம் இறக்குவானை.

Unknown said...

அருமையான வெளிப்பாடுகொண்ட கவிதை நிர்ஷன்.

ஆமா..
என்ன காதல் தோல்வியோ?

இறக்குவானை நிர்ஷன் said...

//ஜோதிபாரதி said...
நிர்ஷன் தொடர்ந்து எழுத வேண்டும்.
தங்கள் வலைப்பக்கம் மிளிர்கிறது!

அன்புடன்.
ஜோதிபாரதி
//

வாருங்கள் ஜோதிபாரதி. நீண்ட நாட்களுக்குப் பிறகு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இறக்குவானை நிர்ஷன் said...

//ஹேமா said...
காதல் கை கூடும் என்று நம்பி இருப்பதையெல்லாவற்றையும் இழக்கிறோம்.அந்தக் காதலே துரோகமாகும்போது....!அருமை.

நன்றி நிர்ஷன் இலங்கை வரும்போது நிச்சயம் வருவேன் உங்களைச் சந்திக்க.நான் ஏற்கனவே 3 தடவைகள் இறக்குவானை வந்திருக்கிறேன்.அழகான பசுமையான அதைவிடப் பழக இனிமையான் கள்ளமில்லா மனிதர்கள் வாழுமிடம் இறக்குவானை.
//

உங்கள் வருகையை நான் எதிர்பார்த்திருக்கிறேன்.

நன்றி ஹேமா.

இறக்குவானை நிர்ஷன் said...

//Bava said...
அருமையான வெளிப்பாடுகொண்ட கவிதை நிர்ஷன்.

ஆமா..
என்ன காதல் தோல்வியோ?
//

ஆஹா..
வெறும் கற்பனை தான் பவா.
நன்றி.

சிவத்தமிழோன் said...

கவிதையை இரசித்து சுவைத்தேன்.

இறக்குவானை நிர்ஷன் said...

// சிவத்தமிழோன் said...
கவிதையை இரசித்து சுவைத்தேன்.
//

நன்றி சிவத்தமிழோன்.

Anonymous said...

Nn,
nice.

ennai poruthavarai ithu natpukum porunthum. unmaiyana natpukaga ivatrai ilantha palarum irukirarhal.

Fm.
Nithu

தமிழன்-கறுப்பி... said...

பல நாட்களுக்கு பிறகு பின்னூட்டமிடுகிறேன் என்பது மன்னிக்க கூடிய தவறுதானே நிர்ஷன்...:)

புதிய தளம், புதிய வேகம் இரண்டும் நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்க நிர்ஷன்...

வாழ்த்துக்கள்...!

இறக்குவானை நிர்ஷன் said...

// Anonymous said...
Nn,
nice.

ennai poruthavarai ithu natpukum porunthum. unmaiyana natpukaga ivatrai ilantha palarum irukirarhal.

Fm.
Nithu
//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நிது.

இறக்குவானை நிர்ஷன் said...

// தமிழன்... said...
பல நாட்களுக்கு பிறகு பின்னூட்டமிடுகிறேன் என்பது மன்னிக்க கூடிய தவறுதானே நிர்ஷன்...:)

புதிய தளம், புதிய வேகம் இரண்டும் நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்க நிர்ஷன்...

வாழ்த்துக்கள்...!
//

நீங்கள் இருக்கிறீர்களா தமிழன்? எங்கே போனீர்கள்?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி்கள்.