Todays Date:

காதலின் ஆட்சி!

ஓயாத கடலுக்கு அருகில்
பேசாத மொழிகளோடு
நாம்!

கரையோரம் நின்றிருக்கிறாய்
பாதங்களை
நுரைகளால் அர்ச்சிக்கின்றன
அலைகள்!

இப்போது பூத்தது போல
எப்போதும்
மலர்ந்திருக்கிறாய்

அதிர்ஷ்டக்க் காற்று…
மோகம் கொண்டு
கூந்தலை
முகர்ந்து
கலைத்துவிடுகிறது

உன் புன்னகையால்
பிரகாசிக்கிறது – என்
முகம்

மெல்லத் துளிர்கிறது
தாபம் - அதை
சொல்லத் துடிக்கிறது
ஆவல்

வார்த்தைகள் கரைந்து
மிஞ்சுகிறது
மௌனம்

உன் மொத்தக் காதலும் - என்
ஜீவனில்
இழையோடுகிறது

நீலவானம்
நீள்வெளிக்கு மத்தியில்
தனியொருத்தியாய்
என்னை ஆள்கிறாய்

அஞ்ஞாதங்களைத் தகர்த்தி
உன்னிடம்
அபயம் வர
பிரியப்படுகிறேன்

உன் பார்வையை ஏந்தி
புன்னகையைப் பருக
தவமிருக்க வேண்டுமடி
கண்மணி!

-இராமானுஜம் நிர்ஷன்-
08.12.2017

விரிவாக படிக்க ……..