Todays Date:

திருக்குறள்

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம் பொருள் இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதும் மேற்கண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும் மயிலப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது. இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார். கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும் முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

திருவள்ளுவரை நாயனார் தேவர்இ தெய்வப்புலவர்இ பெருநாவலர்இ பொய்யில் புலவர் என்றும் சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்தவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர். பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.


1. எட்டுத்தொகை பத்ததுப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு.
2. பதினென்கீழ்க்கணக்கு.
3. ஐம்பெருங்காப்பியங்கள்
4. ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகியவை அவை.


அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் “முப்பால்’’ என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.
“அறம்;இ பொருள்இ இன்பம்’’ ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்’’ எனப் பெயர்பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்’’ என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துப்பாடல்களைக் தன்னுள் அடக்கியது.
இப்பாடல்கள் அனைத்மே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களாலாகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.


குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’’ என்றும் “திருக்குறள்’’ என்றும் இது பெயர் பெற்றது.
“பாயிரம்’’ என்னும் பகுதியுடன் முதலில் “அறத்துப்பால்’’ வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது “கடவுள் வாழ்த்து’’ என்னும் அதிகாரம். தொடர்ந்து வான்சிறப்பு, நீத்தார் பெருமைஇ அறன்வலியுறுத்தல் ஆகிய அதிகாரங்கள்.
அடுத்துவரும் இல்லறவில் என்னும் இயலில் 25 அதிகாரங்கள். அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.


அடுத்துவரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல், ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகார்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும் ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.
கடைசிப்பாலாகிய இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பாலில் இரண்டு இயல்கள் உள்ளன. களவியலில் 7 அதிகாரங்களும்இ கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்இ 133 அதிகாரங்கள்இ 1330 பாடல்கள்.
திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய “அ’’வில் ஆரம்பித்து 1330ம் குறளாகிய


ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்


ஏன்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய “ன்’’ னுடன் முடித்திருக்கிறார்.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால் அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர். திருக்குறள் முப்பால் உத்தரவேதம்இ தெய்வநூல்இ பொதுமறைஇ பொய்யாமொழி, வாயுறை வாழ்த்துஇ தமிழ் மறைஇ திருவள்ளுவம் என்ற பெயர்களும் அதற்குரியவை.


பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ்வாய்ந்ததாக விளங்குவதும்இ அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப்படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.


தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு. அதற்கு துணையாக உள்ளது பொருளியல்வாழ்வு. அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன். மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம். அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழவேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச்செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய
தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.


உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்



7 comments:

ஹேமா said...

வணக்கம் நிர்ஷன்.தளம் திருத்த வேலை செய்கிறீர்களா?எழுத்துப் பிழைகள் காண்கின்றேன். திருக்குறளைப் பற்றிய அருமையான விளக்கம்.இன்றைய தலை முறையினர் இதைப் படித்தால் மிகவும் நல்லது.

இறக்குவானை நிர்ஷன் said...

ஆமாம் ஹேமா. வலைத்தளத்தை மாற்றியமைத்துக்கொண்டிருக்கிறேன். சில பிரச்சினைகள் இருக்கின்றன. மன்னியுங்கள். இன்னும் சில நாட்களில் முழுத்திருத்தமும் செய்துவிடுகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தாருங்கள்.

சிவத்தமிழோன் said...

நெஞ்சுக்கு இனிக்கும் வகையில் சிறப்பாக திருக்குறள் பற்றி எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். கீதை-திருவாசகம்-திருக்குரல் கட்டுரையின் இறுதியில் நீங்கள் ஒப்பிட்டு இருப்பது மிகவும் அழகாகவுள்ளது.கீதை பற்றி மாற்றுக்கருத்துக்களும் உண்டு. கீதையில் உள்ள நல்லவற்றை அறிதலும் அதன் படி ஒழுகுதலும் தவறன்று.
வாழ்த்துக்கள் மீண்டும் ஒருமுறை. மேன்மைகொள் சைவநீதி............வாழ்க தமிழ்!

‘மல்லியப்பு சந்தி’ திலகர் said...

சிறந்த முயற்சி நண்பரே.
வாழத்துக்கள்.
நமது திறமை
நமது முயற்சி
நமது ‘மேடை’
பிறகேன் சினிமா பாடலும்
காட்சியும்……
எனக்கென்னவோ
அது ‘நமது’களை
பாதிக்கிறதோ என தோன்றுகிறது.
காதுக்கே கஸ்டமாக தெரியும்போது
கண்ணுக்கும் அதை கொடுத்துவிட்டால்
கவனம் ‘நமது’ மீது
குறைகிறது…

தாழ்மையான கருத்து…

Mahesh said...

பல புதிய உண்மைகள் திருக்குறளைப் பற்றி.. மிகவும் நன்றி. நீங்கள் திருக்குறளை வெளியிட்டால் நன்றாக இருக்கும். தற்சமயம் நான் agriz.in/thirukural/thirukural.html என்ற இணையத்தளத்தில் திருக்குறளைப் படித்து வருகிறேன்.

Anonymous said...

hello, mr. nirshan unkal muyatchikku enkal vaazhththukkal. naan thirukkuralukku ezhuthuiya puthiya uraiyaiyum unkal valaippuvil pathivu seiya anuppi vaikkirean. coming soon

Anonymous said...

hello, mr. nirshan unkal muyatchikku enkal vaazhththukkal. naan thirukkuralukku ezhuthuiya puthiya uraiyaiyum unkal valaippuvil pathivu seiya anuppi vaikkirean. coming soon