tag:blogger.com,1999:blog-4871905554710235202024-03-18T20:56:53.993-07:00மேடைஇது என் இதய மேடை...!இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-487190555471023520.post-29678706620447207162019-01-11T19:58:00.000-08:002019-01-11T19:58:49.656-08:00'வீர இளைஞர்களின் மகாத்மா'<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div>
<strong style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;"><span style="color: #cc0000;">-இராமானுஜம் நிர்ஷன்-</span></strong></div>
<div>
<span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;"><br /></span></div>
<span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">“இளைஞர்களே, எழுந்துநில்லுங்கள். தோல்வியில் துவண்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் சமுதாயத்தை பலமான கரங்களால் மாற்றியமைப்போம். பலவீனமாக இருக்கிறோமே என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும். என்னோடு வாருங்கள். உங்களுக்கு தோள்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று இளைஞர்களுக்கு தன் வீரக்குரலால் அழைப்பு விடுத்தவர் சுவாமி விவேகானந்தர்.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2_dJLSl8tAJ10cLRd2fqO8yrHKWMnaH1FAWOBc45m936jTDrCobMq8hJ9sQDAIrr1xE_uCCiSc9-1GR5lo1j6eHL0BrKVEVt2chvXzF5gumGPALXdWOUd84rt244GbBW6Cnt-wUPSMUc/s1600/Swami-Vivekananda-ili-96-img-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="583" data-original-width="700" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2_dJLSl8tAJ10cLRd2fqO8yrHKWMnaH1FAWOBc45m936jTDrCobMq8hJ9sQDAIrr1xE_uCCiSc9-1GR5lo1j6eHL0BrKVEVt2chvXzF5gumGPALXdWOUd84rt244GbBW6Cnt-wUPSMUc/s320/Swami-Vivekananda-ili-96-img-1.jpg" width="320" /></a><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">தனது இரத்தத்தால் இளைஞர்களுக்கு கடிதம் எழுதி அனைவர் மனதிலும் மகாகாவியம் படைத்து இறந்த பின்னும் குருவாக வாழ்ந்துகொண்டிருக்கும் விவேகானந்தரின் வீரவரலாறு மிகச்சுவையானது. அவர் பட்ட கஷ்டங்கள் நேர்ந்த இன்னல்கள் எல்லாவற்றையும் உடைத்தெரிந்து மின்னிமிளிர்ந்து புதிய பாதைக்கு வழிகாட்டிய பெருந்துறவி.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white;"><span style="font-family: Trebuchet, Trebuchet MS, Arial, sans-serif;"><span style="font-size: 12.9883px;"><br />எத்தனையோ துறவிகள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களில் வீரத்துறவி என்றழைக்கப்படுபவர் விவேகானந்தர் மட்டுமே. உடல், சொல், செயல் அத்தனையிலும் சமுதாயத்துக்காக வாழ்ந்துகாட்டி இன்றும் இளைஞர்களிடையே வீரமகானாக திகழ்ந்துகொண்டிருக்கும் விவேகானந்தரின் 155 ஆவது ஜனன தினம் இன்று அனுட்டிக்கப்படுகிறது.</span></span></span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">நரேந்திரன் என்ற இளமைக்கால பெயர்கொண்ட சுவாமி 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி இந்தியாவின் கல்கத்தாவில் பிறந்தார். சிறுபராயம் முதலே பள்ளிப்படிப்பில் கெட்டிக்காரராக விளங்கிய நரேந்திரனிடம் காணப்பட்ட பிரகாசமான கண்கள் மகான் ஆகப்போவதை முன்னதாகவே சுட்டுவதாய் அமைந்திருந்தன.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">கடவுள் எப்படிப்பட்டவர்? எப்படியிருப்பார்? எப்படிக்காட்சி தருவார்? போன்ற கேள்விகள் நரேந்திரனிடம் இயல்பாகவே காணப்பட்டன. காலப்போக்கில் இந்தக் கேள்விகளுக்கு விடைகண்ட பிறகுதான் மறுவேலை என்ற நிலைக்கு நரேந்திரன் மாறிவிட்டார்.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">அப்போது சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றிக் கேள்விப்பட்ட நரேந்திரன் கடவுளைப் பற்றி அறிவதற்காக அவரிடம் செல்கிறார். நரேந்திரனைக் கண்டவுடனேயே முன்பலகாலம் நட்பிருந்ததுபோல பேசிய இராமகிருஷ்ணர், ‘உனக்காகத்தான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன். ஏன் தாமதமாக வருகிறாய்? என்னோடு வா’ என அணைத்துக்கொள்கிறார். இராமகிருஷ்ணரின் தீர்க்கதரிசனத்தில் நரேந்திரனைப் பற்றி அவர் அறிந்துகொண்டார்.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">அதன் பின்னர் கடவுளைப் பற்றி இராகிருஷ்ணர் கூறிய பல விடயங்கள் நரேந்திரனை சிந்திக்க வைத்தன. சில விடயங்களை நரேந்திரன் ஏற்றுக்கொள்ள மறுத்தார். எனினும் செயல்பாட்டு hPதியான குருவின் பாடத்தில் இறைவனைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் நரேந்திரன் சுவாமி இராமகிருஷ்ணரின் முதற்சீடராவதுடன் விவேகானந்தர் என்ற திருநாமத்தையும் பெறுகிறார்.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">‘எனது மரணத்தின் பின்னர் எதைப்பற்றியும் கவலைப்படாது உலக மக்களின் விடிவுக்காகவும் இறையுணர்வின் மகத்துவத்தை வெளிப்படுத்துவதற்காகவும் பாடுபடுவதற்கு நீயே பொருத்தமானவன்’ என்ற தனது குருவின் வேதவாக்கிற்கிணங்க எல்லாவற்றையும் துறந்து தாய்நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் வீறுகொண்டு சேவைசெய்யத் துணிகிறார் விவேகானந்தர்.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">மகத்தான இறையுணர்வு அனைவரிடத்திலும் உண்டு. அதனை வெளிப்படுத்துவதே மனித வாழ்க்கையின் தத்துவ நோக்கம். வெறும் புத்தகங்களை படித்துக்கொண்டு கற்பனாவுலகத்தில் வாழ்வதில் அந்த இறையுணர்வு கிடைத்துவிடப்போவதில்லை. அந்த மகத்துவமான உணர்வு உணரப்படவேண்டிய ஒன்று. அவ்வாறு உணரப்பட்டவுடன் மனித சேவையே மனதில் முன்னிற்கும் என்ற கோட்பாட்டை அதிகம் வலியுறுத்திய விவேகானந்தர் இந்திய இளைஞர்களை தனது அறப்போராட்டத்தில் இணைவதற்கு அழைத்தார்.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">பாரத நாட்டு மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளைத் தீர்க்க, வெறும் கமண்டலத்துடன் மட்டும் புறப்பட்டு பல்வேறு சேவைகளை செய்யத்தொடங்கினார். குறிப்பாக, மக்கள் சோம்பேறிகளாக இருப்பதையும் அதுவே அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பதையும் உணர்ந்து அதற்கேற்றாற்போல் பல்வேறு வேலைத்திட்டங்களையும் செய்தார். ஆன்மிகம் சார்ந்த மேடைப்பேச்சுகளால் கவரப்பட்ட மக்கள் முற்றிலுமாய் மாறியதில் வெற்றிகண்டார் வீரத்துறவி.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">இந்தியா முழுவதும் சுற்றித்திரிந்து மக்களைப்பற்றி அறிந்துகொண்ட சுவாமி, தனது பயணத்தின் முடிவில் கன்னியாகுமரி சென்று கடல்நடுவே அமைந்த பாறை ஒன்றின் மீது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தியானம் செய்தார். பாரதத்தின் இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம் குறித்து தியானித்ததாக பின்னர் தான் எழுதிய நு}லில் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">அன்னை சாரதையிடம் ஆசிபெற்று 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி சிகாகோவில் இடம்பெற்ற சர்வமத மகாசபையில் இந்தியப் பிரதிநிதி என்ற வகையில் சுவாமி கலந்துகொண்டார். அங்கு ஆவர் ஆற்றிய உரையின் ஆரம்பமும் உரையும் அனைவரையும் ஏகமாக கவர்ந்திழுத்தது. மதத்தின் பெருமையையும் தாய்நாட்டுக்கான தனிமனிதனின் கடப்பாட்டையும் சமூகத்தின்மீதான சேவை நிலையையும் அங்கு தனது சிம்மக்குரலில் அமெரிக்காவில் பரப்பினார்.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">சிகாகோவில் அவர் நிகழ்த்திய உரை பெரும் பிரசித்தி பெற்றதாகும். “பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்” என்று சற்றும் பயமின்றி அவர் பேசினார்.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">“விதை தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும் காற்றும் நீரும் அதைச் சுற்றி போடப்படுகின்றன. விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிவிடுகிறதா? இல்லை. அது செடியாகிறது. தனது வளர்ச்சி விதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும் மண்ணையும் நீரையும் தனதாக்கிக் கொண்டு, தனக்கு வேண்டிய சத்துப் பொருளாக மாற்றி, ஒருசெடியாக வளர்கிறது. மதத்தின் நிலையும் இதுவே. கிறிஸ்தவர் இந்துவாகவோ பௌத்தராகவோ மாற வேண்டியதில்லை. அல்லது இந்து, பௌத்தராகவோ கிறிஸ்தவராகவோ மாற வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக் கொண்டு, தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு, தன் வளர்ச்சி விதியின் படி வளரவேண்டும்” என மதம்சார் கடப்பாட்டையும் விளக்கினார்.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">இன்னும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கியிருந்து வேதாந்தம் பற்றிய பரப்புரைகளில் ஈடுபட்டு நாடு திரும்பிய விவேகானந்தர் கொழும்பிலும் தனது வீர உரையை ஆற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">இன்று உலகமெங்கிலும் கிளைவிரித்துப் பரப்பி சமுக சேவைகளில் முன்னிற்கும் இராமகிருஷ்ண மடங்களின் முதற்கர்த்தா சுவாமி விவேகானந்தரே. கல்கத்தாவில் மக்கள் சேவைக்கென தனது குருவின் பெயரால் இவர் உருவாக்கிய இராமகிருஷ்ண மடம் பின்னர் சேவைவிஸ்தரித்து இன்றும் மக்கள் சேவையில் ஈடுபடுகின்றமை நாம் அறிந்தவிடயம்.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">‘எழுமின். விழிமின். கருதிய கருமம் கைகூடும்வரை அயராது உழைமின்’ என்ற விவேகானந்தரின் மகாவாக்கியம் இன்றும் இளைஞர்களின் வீரவாக்கியமாக உள்ளது.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">இறைபணியுடன் தேசப்பற்றையும் ஊட்டிய சுவாமி 1902 ஆம் ஆண்டு ஜுலை 4 ஆம் திகதி முத்திப்பேறு பெற்றார். மிகக்கடுமையான உழைப்பினால் நோய்வாய்ப்பட்டமையே இவருடை இறப்புக்குக் காரணமாகும்.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">வாழ்ந்தது வெறும் 39 ஆண்டுகளேயாயினும் இந்த வீரத்துரவியின் ஆற்றல்மிகுந்த சமுதாயப் பணிகள் மிகப்பரந்தன. சுவாமியின் ஜனன தினத்தில் அவரது வழிமொழிக்கு ஏற்ப இளைஞர்கள் வழிநடப்பதே நாம் அவருக்கு செய்யும் கௌரவ மரியாதையாகும்.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">சுவாமி விவேகானந்தரின் சிந்தனையிலிருந்து சில:</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">• செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">• நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">• உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">• நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">• உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><span style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;">• ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும். பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.</span><br style="background-color: white; font-family: Trebuchet, "Trebuchet MS", Arial, sans-serif; font-size: 12.9883px;" /><br /><span class="fullpost">
</span></div>
இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-487190555471023520.post-63014575121496654352017-12-07T19:56:00.000-08:002017-12-07T19:56:10.587-08:00காதலின் ஆட்சி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஓயாத கடலுக்கு அருகில்<br />
பேசாத மொழிகளோடு<br />
நாம்!<br /><br />
கரையோரம் நின்றிருக்கிறாய்<br />
பாதங்களை<br />
நுரைகளால் அர்ச்சிக்கின்றன<br />
அலைகள்!<br /><br />
இப்போது பூத்தது போல<br />
எப்போதும்<br />
மலர்ந்திருக்கிறாய்<br /><br />
அதிர்ஷ்டக்க் காற்று…<br />
மோகம் கொண்டு<br />
கூந்தலை<br />
முகர்ந்து<br />
கலைத்துவிடுகிறது<br /><br />
உன் புன்னகையால்<br />
பிரகாசிக்கிறது – என்<br />
முகம்<br /><br />
மெல்லத் துளிர்கிறது<br />
தாபம் - அதை<br />
சொல்லத் துடிக்கிறது<br />
ஆவல்<br />
<br />
வார்த்தைகள் கரைந்து<br />
மிஞ்சுகிறது<br />
மௌனம்<br />
<br />
உன் மொத்தக் காதலும் - என்<br />
ஜீவனில்<br />
இழையோடுகிறது<br /><br />
நீலவானம்<br />
நீள்வெளிக்கு மத்தியில்<br />
தனியொருத்தியாய்<br />
என்னை ஆள்கிறாய்<br /><br />
அஞ்ஞாதங்களைத் தகர்த்தி<br />
உன்னிடம்<br />
அபயம் வர<br />
பிரியப்படுகிறேன்<br /><br />
உன் பார்வையை ஏந்தி<br />
புன்னகையைப் பருக<br />
தவமிருக்க வேண்டுமடி<br />
கண்மணி!<br /><br />
<span style="color: #660000;">-இராமானுஜம் நிர்ஷன்-</span><br />
<span style="color: #660000;">08.12.2017</span><br />
<br />
<span class="fullpost">
</span></div>
இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-487190555471023520.post-73895775425061161672017-03-18T22:21:00.000-07:002017-03-24T22:21:56.185-07:00காவியத்தின் தேவதை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwJuu3Ur5nb4YM8tMgbLlfFSa6WSmS6yn95YeAWGpzVquHp598xC-ng85jBvqdBeQkMqtexSWaRCuLmS3zul-vegZAm0pfB2P4xyIyG6fMEzGBNYChLzjsc9r1ExEZ0-ph5YE3UH477us/s1600/Image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwJuu3Ur5nb4YM8tMgbLlfFSa6WSmS6yn95YeAWGpzVquHp598xC-ng85jBvqdBeQkMqtexSWaRCuLmS3zul-vegZAm0pfB2P4xyIyG6fMEzGBNYChLzjsc9r1ExEZ0-ph5YE3UH477us/s320/Image.jpg" width="320" /></a></div>
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"><br /><br />நீண்ட இரவின்</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">மத்திமத்தில்</span><span class="text_exposed_show" style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"><br />நிலவும்<br />நிழலும்<br />மழையும்…<br /><br />ஏகாந்தத்தில்<br />உன்னை<br />ஏந்திக் காத்திருக்கிறேன்<br /><br />சிற்றெறும்பு வீழ்ந்து<br />இலையதிரும் ஓசை<br />என்னை<br />இயங்கச் செய்கிறது<br /><br />என் மனதின்<br />திறக்கப்படாத காப்பகம்<br />மெல்ல விரிகிறது<br /><br />உனக்கு நினைவிருக்கிறதா?<br /><br />பதின்ம வயதுகளில்<br />அழகைச் சுமந்த<br />நீயும்<br />வேட்கை நிறைந்த<br />நானும்…<br /><br />நீ<br />கண்களால் அபிநயிப்பாய்<br />நான்<br />இமைக்க மறந்து<br />பார்த்திருப்பேன்!<br /><br />நீண்ட மௌனத்தின்பின்<br />முதல் வார்த்தை<br />உதிர்ப்பாய்<br />நான்<br />முழுவதுமாய் தாங்கி<br />சேமித்திருப்பேன்!<br /><br />நாம்<br />பேசாத பொழுதுகளில்<br />பரிமாறிய வார்த்தைகள்<br />இப்போதும்<br />இனிக்கின்றன!<br /><br />அவை - நம்<br />மனதின்<br />மையங்களை இணைத்த<br />மந்திரச் சொற்கள்!<br /><br />காதல் பாடல்களில்<br />கற்பனையாகியிருந்தோம்!<br /><br />சில சந்திப்பு<br />பல கதை<br />சிறுதூர நடைகளில்<br />நாமாகிப்போனோம்!<br /><br />உன்<br />நினைவுக் கடலில்<br />திமில்போல்<br />மிதந்திருக்கிறேன்!<br /><br />இன்னுமின்னும்<br />வாழவேண்டுமென்ற<br />ஆவலைத் தந்தது - உன்<br />காதல்!<br /><br />என் காவியத்தின்<br />தேவதையாய் - உன்னை<br />ஆராதித்திருக்கிறேன்!<br /><br />உன்னை<br />அள்ளிக் கொள்ளவே -<br />என் உடல்<br />உயிர் தாங்குகிறது போலும்!<br /><br />என் வாழ்க்கையின்<br />கிழக்கு நீ<br />இங்கே அஸ்தமனத்துக்கு<br />இடமில்லை!<br /><br />வா!<br />இந்த இரவில்<br />இந்த நிலவில்<br />இந்த மழையில்<br />ஒருவராகியிருப்போம்!<br /><br />-இராமானுஜம் நிர்ஷன் -</span><span class="fullpost">
</span></div>
இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-487190555471023520.post-44175888575793416332017-02-14T22:26:00.000-08:002017-03-24T22:27:35.193-07:00கூட்டு ஒப்பந்தம்: தடைகளை தகர்க்க இளைஞர்கள் முன் வர வேண்டும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<span style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம், தொழில்நலன் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய கூட்டு ஒப்பந்தம் பற்றி இப்போது மிக அரிதாகவே பேசப்படுகிறது.</span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பரபரப்பாக பேசப்படுவதும் நல்லதோ கெட்டதோ அதன் பின்னர் அமைதியாகிவிடுவதும் வழமையாகிவிட்டது.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">மனித வாழ்க்கையோடு நேரடியாக தொடர்புபட்டுள்ள பிரச்சினைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பதன் ஊடாகவே சாதகமான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">அதனை விடுத்து பிரச்சினை சார்ந்த அனைவரும் அமைதியாக இருப்பதானது மாற்றுத் தரப்பினருக்கு வலுவூட்டுவதாகவே அமையும்.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">கூட்டு ஒப்பந்த நேரத்தில் மாத்திரம் பேசுவார்கள், ஆர்ப்பாட்டம் செய்வார்கள், ஊடகங்களால் தேடப்படும் விடயமாக மாறும். அதன் பின்னர் என்னவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என்பதுதான் தற்போதைய நிலை.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தொழிலாளர்களிடையே இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">எனினும் அது சரியா, பிழையா என்பதற்கு அப்பால் அனைவரும் ஒருமித்த மனநிலைக்கு வரவேண்டியது அவசியமாகும். அதற்கு கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் ஒவ்வொரு தனித்தனி தொழிலாளரும் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும்.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">அவ்வாறு விழிப்புணர்வூட்டும் செயற்பாடானது இதுவரை நடைபெறாமை கவலைக்குரியதே.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">கூட்டு ஒப்பந்தமானது ஒன்றரை வருடங்களுக்கு அதிகமாக காலதாமதப்படுத்தப்பட்ட போது அரசியல் பிரமுகர்கள் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வகையில் ஏனையோர் மீது குற்றம் சுமத்திவந்தனர்.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">ஆயிரம் ரூபா சம்பளம் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெற்றுத்தர முடியாது என்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இற்கு தெரியாத விடயமல்ல. இத்தனை காலம் தொழிற்சங்கம் நடத்தி கூட்டு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டு வந்த அவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">அரசியல் இலாபத்துக்காக தேர்தல் நலனுக்காக ஆயிரம் ரூபா பெற்றுத்தருவோம் எனக் கூறிவிட்டார். அதுவே அவருக்கு பெரும் சவாலாகவும் அமைந்தது.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">சாதாரண தொழிலார்கள் தானே எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற மனப்பாங்கு ஈற்றில் சஞ்சலத்தை ஏற்படும் விதமாக மாறியது.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">அதேபோல், தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அரசாங்க பலத்தில் இருந்தாலும் தற்காலிக கொடுப்பனவையே பெற்றுக்கொடுக்க முடிந்தது.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">தொழிலாளர்களின் சம்பளம் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே நிர்ணயிக்கப்படுவதாக இருந்தாலும் கூட முறையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்குமானால் நியாயமான தொகையை பெற்றுக்கொடுத்திருக்க முடியும்.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">இங்கே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தானே ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதாக சொன்னார்கள், அவர்களே பார்த்துக்கொள்ளட்டும் என நழுவிச்செல்லும் மனப்பாங்குடனேயே கூட்டணியினர் செயற்பட்டிருந்தார்கள்.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">ஆக, கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இரு தரப்பிலிருந்தும் அறிக்கை வந்தனவே தவிர அதற்குப் பின்னரான பின்விளைவுகள் குறித்து கரிசனை கொள்வோர் யாருமிலர்.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">நிலுவைப் பணத்தை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், பராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் கூறியிருந்தார்.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">அதற்கு ஏற்புடையதாக இ.தொ.கா. முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் என்ன?</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">குறிப்பிட்ட எண்ணிக்கைக்கும் அதிகமாக கொழுந்து பறிக்கும்படி பல தோட்டங்களிலும் தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதற்கு தொழிற்சங்கங்கள் கூறும் பதில் என்ன?</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">இன்னும் சில தோட்டக்கம்பனிகள் குறைவான வேலைநாட்களையே வழங்குகின்றன. இது குறித்து தொழிற்சங்கங்கங்களுக்கு தெரியுமா?</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">தேயிலை காணிகளை தொழிலாளர்களே நிர்வகிக்கும் முறை பற்றி பேசப்பட்டது. அதன் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கிறது?</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">இது ஒருபுறம் இருக்கட்டும். </span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">நாட்டில் பெரும்பான்மையினருக்கு ஒரு சிறு பிரச்சினை என்றாலும் குழுக்கள் அமைத்து விசாரணை அறிக்கை கோருகிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">ஆனால் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் விடயத்தில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததன் பின்னணி என்ன?</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">நாட்டின் வருமானத்தில் பிரதான வகிபாகம் கொண்டுள்ள தொழிலாளர்களின் நலனில் ஜனாதிபதிக்கு ஏன் அக்கறை இல்லை.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்பட்டாலும் முதலாளிமார் நாட்டுக்கு ஈட்டித்தரும் செலாவணி குறித்தே அதிகம் கவனம் எடுக்கப்படுகிறது. இத்தனை நூற்றாண்டு காலம் உழைத்து உழைத்து அதே மண்ணுக்கு உரமாகிப் போகும் தியாகிகள் குறித்து சாதாரண மனிதனின் மனிதாபிமானத்துடான பார்வை அதிகாரம் மிக்கவர்களுக்கு தெரியாது.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;"><br /></span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரம் இதனை கதைத்து பிரயோசனம் கிடையாது. ஆதலால் இதற்கு சமூக ரீதியாக சிந்திக்கக் கூடிய இளைஞர்கள் முன்வர வேண்டும்.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">நீண்டகால அடிப்படையில் சமூக மாற்றம் குறித்து அக்கறையுடையவர்கள் ஒன்றுதிரளும் பட்சத்தில் சம்பள விவகாரத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">குறிப்பாக சமூக வலைத்தளங்களில் மாற்றத்துக்காக உழைக்கும் இளைஞர்கள் பேதங்களை மறந்து இந்த விடயத்தில் திறந்த கலந்துரைரயாடல்களை மேற்கொள்ள வேண்டும். அதனூடாக காத்திரமான சிந்தனைகளை உருவாக்கி செயற்படுதலே இன்றைய காலத்தின் தேவையாகும்.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;"><br /></span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;">வெறும் சம்பளம் என்று பார்க்காமல் அது எமது மக்களின் வாழ்க்கையை, எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிரதான காரணி என்று நோக்கப்பட்டு ஒரு படையணி உருவாகுமானால் அத்தனை தடைகளையும் உடைப்பது சிரமம் கிடையாது.</span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;"><br /></span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;"><b>-இராமானுஜம் நிர்ஷன்-</b></span></span></div>
<div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px;"><b>நன்றி சூரியகாந்தி - 14.02.2017</b></span></span></div>
<span class="fullpost">
</span></div>
இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-487190555471023520.post-52438075310743245932017-01-20T22:22:00.010-08:002021-02-08T20:53:20.861-08:00வா.. நெஞ்சத்தின் அக்கிராசனத்துக்கு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
கிளைகள் <br />குடைபிடிக்க</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span class="text_exposed_show" style="display: inline; font-family: inherit;">கீழே<br />சாய்ந்திருக்கிறாய்<br /><br />மலர் விழுந்த சோகம்<br />மரத்துக்கு!<br /><br /></span></div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">
<div style="font-family: inherit; margin-bottom: 6px;">
காணும் பொழுதில்<br />துருவப் பனியாய்<br />உறைகிறேன்!<br /><br /></div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
பற்றிப் படர்கிறது<br />காதல்<br />மெல்லப் பனிகிறது<br />மோகம்<br /><br /></div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
உருவாகி<br />கருவாகி<br />துளிர்க்கிறது தாகம்!<br /><br /></div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
அலைபோல் புருவம்<br />நாணம் சுரக்கும்!<br />கருவிழி அசையும்<br />காந்தம் பிறக்கும்!<br /><br /></div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
அள்ளிக் கொள்கையில்<br />வினைச்சொல்<br />உதிரும்!<br /><br /></div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
கண்களின்<br />கபளீகரத்தை காண்கையில்<br />உளிதட்டுகிறது<br />இதயம்!<br /><br /></div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
அணைந்து பிணைந்து<br />மேவிக் கணையாகி<br />காதல் பருகுவோம்<br />வா!<br /><br /></div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
பருகிச் சுவைத்து<br />மூர்ச்சை இழுத்து<br />முடிவிலி காண்போம்<br />வா!<br /><br /></div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
மொத்தமாய் கவர<br />வித்தைகள் புரிய<br /><br /></div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
தொடுகையில் உணர<br />நெடுமையாய் ஆள<br /><br /></div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
சத்தம் தவிர்த்து<br />பித்தம் நிறைக்க<br /><br /></div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
தேவதை உன்னை<br />காதலோடு அழைக்கிறேன்<br />என் நெஞ்சத்தின்<br />அக்கிராசனத்துக்கு!<br /><br /></div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
<b>-இராமானுஜம் நிர்ஷன்-</b></div>
</div>
<span class="fullpost">
</span></div>
இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-487190555471023520.post-51519843743644811312016-08-28T23:00:00.002-07:002016-10-26T22:13:40.420-07:00மோகம் சுரக்கும் மந்திரம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj63e8jAKQ2m_SZm91NnHif9MGvtYp_c4ivVBKFiCVYd5oo7zR3qfe-mH8uZsTdcQSodX6KdSos7J2wGzg7NLg0VoRDwn_plCxwhQlnrbiFhgtqkD31kvv8FgMWlW1D18MsOTSbFRdagsg/s1600/Love.jpg"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj63e8jAKQ2m_SZm91NnHif9MGvtYp_c4ivVBKFiCVYd5oo7zR3qfe-mH8uZsTdcQSodX6KdSos7J2wGzg7NLg0VoRDwn_plCxwhQlnrbiFhgtqkD31kvv8FgMWlW1D18MsOTSbFRdagsg/s320/Love.jpg" /></a><br /><br /><br /><br /><br /><br />மோகம் சுரக்கும் மந்திரக் கண்களில் <br />இமைகள் மூடும் சப்தம் கேட்டேன்<br />காதலின் அந்தம் வரை ருசிக்கத் தூண்டி <br />வசியப்பட்டுப் போனேன்<br /><br />கரங்கள் இரண்டும் <div>
மந்திரக் கோல்கள்<br />விரல்நுனி பட்டதும் </div>
<div>
விடலையாய் உயிர்க்கிறேன்<br /><br /><br />தாடை இழுத்துப் பேசும் பொழுதில்<br />வகுளம் பூவின் </div>
<div>
மருத்துவம் உணர்கிறேன்<br /><br /><br /><br />இதழ்கள் அவிழ்க்கும் </div>
<div>
பெண்மை நீ <br />முத்தம் குடிக்கும் </div>
<div>
மிருகம் நான்!<br /><br /><br />அசைவில் இசைதரும் காரிகை நீ<br />அதை மீட்டத் துடிக்கும் ரசிகன் நான்!<br /><br /><br />கடந்து செல்கிறாய்<br />ஆனந்தத்தின் உச்சியில் <br />தவழ்கிறது மனது<br /><br /><br />புன்னகை செய்கிறாய்<br />பண்டிகை போல <br />கொண்டாடுகிறது மனது<br /><br /><br />நம் சந்திப்புகளை<br />பிரதியிட்டு சேமித்திருக்கிறேன்<br />பிரசவத்துக்காக காத்திருக்கும்<br />கனவுகளோடு!<br /><br />வா!<br />முதுமையின் எல்லைவரை<br />இளமையாய் காதலிப்போம் </div>
<div>
வா!<br /><br />அழகிய தேசம் எதுவும்<br />வேண்டாம் எமக்கு!<br /><br />நானும் நீயும் என்றாலே - புது<br />உலகம் தானே நமக்கு!<br /><br /><b><br />-இராமானுஜம் நிர்ஷன்-</b><br /><br /><br /><span class="fullpost">
</span></div>
</div>
இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-487190555471023520.post-36718252968663927402016-06-25T06:13:00.005-07:002016-06-25T06:13:54.618-07:00அதிபர் இராஜலிங்கம் அவர்கள் எம் உள்ளங்களில் உயர்ந்த இடத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்..!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
(மறைந்த அதிபர் இராஜலிங்கம் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நாள் நாளை (26.06.2016) அனுட்டிக்கப்படுகிறது)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcuKcb5h-m_MSM10yOdnDb5_hquh6J_SX2twXWtpHbUSEsSU5uRWZeLKFYMtgpHtMAI6QSJB4CATg_CxwBLWFW5PD4P_Up0kuaTNEa1KroFRlsDucktV2eFueA2TbrVI4BsfURmNVgg0M/s1600/981e2b31-40af-411b-b64b-db46e0f21e1b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcuKcb5h-m_MSM10yOdnDb5_hquh6J_SX2twXWtpHbUSEsSU5uRWZeLKFYMtgpHtMAI6QSJB4CATg_CxwBLWFW5PD4P_Up0kuaTNEa1KroFRlsDucktV2eFueA2TbrVI4BsfURmNVgg0M/s400/981e2b31-40af-411b-b64b-db46e0f21e1b.jpg" width="277" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னுடைய வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத மாமனிதர் மதிப்புக்குரிய இராஜலிங்கம் அவர்கள். ஆஜானுபாகுவான உடல்வாகு, கம்பீரமான தோற்றம், நிமிர்ந்த நடையுடன் நிகரற்ற ஆற்றலும் பல்திறனும் தன்னகத்தே கொண்டு எத்தனையோ மாணவர்களை இன்று உச்சத்துக்கு அழைத்துச் சென்றிருக்கும் மரியாதைக்குரிய ஆசான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காலம் எத்தனை மாற்றம் கண்டாலும் இராஜலிங்கம் அவர்கள் என்றுமே எம் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார். அவருக்கு எமது உள்ளங்களில் அதியுச்ச இடம் இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தன்னலம் பாராது அனைவரையும் அணைத்துக்கொண்டு பயணித்த அவருடைய தொலைநோக்க சிந்தனையை இப்போதும் எண்ணி வியக்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாதம்பை தமிழ் வித்தியாலயத்தில் அவர் அதிபராக கடமையாற்றியபோது கடைபிடித்த ஒழுக்க விதிகளை ஞாபகத்தில் உள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான்காம் தரத்தில் இறுதியாண்டுப் பரீட்சையில் நான் 999 புள்ளிகளைப் பெற்றபோது மாணவர் மன்றத்தில் என்னை அழைத்து உச்சிமுகர்ந்து பாராட்டினார். அதன் பெறுமதியை எத்தனைகோடி கொடுத்தாலும் மீண்டும் பெற்றுவிட முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதிபர் கொப்பியை முறையாக பேணுவதில் அக்கறையாக இருப்பார். அதன்பெறுமதி தெரியாத சிறுபராயத்தில் அவரை கடிந்துகொண்டதுதான் அதிகம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதிய உணவை மிக அரிதாகவே உட்கொள்வார். அதிகமாக உணவு உட்கொள்ளுதல் உடலுக்கு தீங்கு என அடிக்கடிச் சொல்லுவார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாதம்பை இறப்பர் தொழிற்சாலை சந்தியில் (பிரதான வீதி) உள்ள வடை கடைதான் அப்போதைக்கு அங்கு இருந்த ஒரேயொரு கடை.</div>
<div style="text-align: justify;">
பாடசாலை முடிந்தும் எமக்கு படிப்பித்து விட்டு அந்த வடை கடையில் அவித்த மரவள்ளிக் கிழங்கும் இரண்டு வடையும் வாங்கிச் சாப்பிடுவதே அவரது வழமை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான்தான் எனது வாகனத்தை (ஒரு சின்ன பிரம்புதான்) எடுத்துக்கொண்டு ஓடோடிச் சென்று வாங்கி வருவேன்.</div>
<div style="text-align: justify;">
விடுமுறைக் காலங்களில் கூட வீடு தேடி வந்துவிடுவார். ஒருகோப்பை தேநீருடன் அவர் எமக்கு அள்ளிக்கொடுத்த கல்விச் செல்வத்துக்கு அளவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விடுமுறை நாட்களில் மாதம்பையில் ஒவ்வொருவர் வீடாக தேடிச் சென்று பயிற்றுவிப்பார். அதற்காக எம்மிடம் அவர் பெறுபேற்றை தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாதம்பை பாடசாலையில் அவர் அதிபர் அறையில் இருக்கும்போது திடீரென சென்றுவிட்டால் அவ்வளவுதான். அடியுடன்தான் திரும்பி வர வேண்டும். உள்ளே நுழையும் முன்னர் வலது கையின் ஐந்து விரல்களையும் நேராக நிறுத்தி கையை மடக்கி நெஞ்சுக்கு நேராக வைத்து எக்ஸ்கியுஸ் மீ சேர் என்று சொல்லித்தான் செல்ல வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாதம்பையில் இந்தப் பழக்கத்தை அவர் கடுமையாக கடைபிடிக்கச் செய்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இறக்குவானை பரியோவான் கல்லூரியில் கூட மிகச் சிறப்பாக எம்மை வழிநடத்தினார். யார் யாரெல்லாம் பல்கலைக்கழகங்கள் போவீர்கள்? என்ன பெறுபேறு பெற்றுக்கொள்வீர்கள் என அந்தக்காலத்திலேயே ஆவலைத் தூண்டினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவரிடம் அடிவாங்கிய நாட்களையெல்லாம் மறக்கவே முடியாது. கன்னத்தில் அறைந்தால் இடிவிழுந்தது போல இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னுடைய எழுத்துக்கள் சீராக மாற்றம் பெறுவதற்கு காரணகர்த்தாவே இராஜலிங்கம் அதிபர்தான்.</div>
<div style="text-align: justify;">
விளையாட்டில் அதீத திறமை கொண்டிருந்த அவரிடமிருந்து நாம் நிறையவே கற்றுக்கொண்டோம். கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் முதல்நிலை பெறுபேற்றை பெற்றபோது அவர் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனாலும் அன்பை உடனடியாக வெளிக்காட்டாத மனப்பாங்குடன் நடந்துகொள்வார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயம், மாதம்பை தமிழ் வித்தியாலயம், பரியோவான் கல்லூரி ஆகியவற்றில் அதிபர் இராஜலிங்கம் அவர்களிடம் கற்றவர்கள் அல்லது அவரது வழிகாட்டலில் பயின்றவர்களால் அவரை என்றுமே மறக்க முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பரியோவான் கல்லூரியின் 130 ஆவது அகவை நிறைவில் அதிபர் இராஜலிங்கம் அவர்களின் நினைவாக ஒரு திட்டத்தை முன்வைக்கலாம் என எண்ணியிருக்கிறேன்.<br /></div>
<div style="text-align: justify;">
அதிபர் இராஜலிங்கம் நினைவு சிறுகதைப் போட்டியொன்றை பாடசாலை மட்டத்தில் நடத்தலாம் என்பதே எனது எண்ணம். அதில் சிறப்பாக எழுத்தாக்கம் புரிந்த மாணவர்களுக்கு பணப்பரிசு வழங்கலாம் எனவும் நினைத்தேன்.<br /></div>
<div style="text-align: justify;">
இது தொடர்பில் பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளருடன் கதைத்திருக்கிறேன். அதிபருடன் இதுபற்றி உரையாடவில்லை.</div>
<div style="text-align: justify;">
அதிபரும் பழைய மாணவர் சங்கமும் அனுமதிக்கும் பட்சத்தில் நிச்சயமாக இதனை நடத்தக் கூடியதாக இருக்கும்.<br /></div>
<div style="text-align: justify;">
அதிபர் இராஜலிங்கம் என்றும் எம் உள்ளங்களில் உயர்ந்த இடத்தில் வாழ்ந்துகொண்டிருப்பார். அவரை இந்த சந்தர்ப்பத்தில் நன்றியோடு நினைவுகூருகிறோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><i>-இராமானுஜம் நிர்ஷன்-</i></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<span class="fullpost">
</span></div>
இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-487190555471023520.post-24766390073271582042015-04-10T22:26:00.002-07:002015-04-10T22:36:33.197-07:00கமலினி மீண்டும் பிறப்பாள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmfSo2DewYvrNE7An7nEelg5BgaTqD8Ea-CTr2x_7ox86hTXAnbDxXq_HxcIPCXwkM1jOaaQzdALjjK9jYw9eA8DDs30qlJKAAEDubpAa6KtesTz_hAtdHyFcApB_b-gtgpPya34jUac8/s1600/kamalini.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmfSo2DewYvrNE7An7nEelg5BgaTqD8Ea-CTr2x_7ox86hTXAnbDxXq_HxcIPCXwkM1jOaaQzdALjjK9jYw9eA8DDs30qlJKAAEDubpAa6KtesTz_hAtdHyFcApB_b-gtgpPya34jUac8/s1600/kamalini.jpg" height="400" width="266" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_SmWIzT7m6IuKP0QbuSCdb9XMI7VHU32VYU7OkYwRBmVo7xnfnPplL1fbcQOG1spzs_clZRr7JE8I1Mdm98P6I8mzp6lsnN1HAiNEFfSoM34eOJSE9oJS4cOoN0GajQWUAr_FY5zBEBU/s1600/kam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_SmWIzT7m6IuKP0QbuSCdb9XMI7VHU32VYU7OkYwRBmVo7xnfnPplL1fbcQOG1spzs_clZRr7JE8I1Mdm98P6I8mzp6lsnN1HAiNEFfSoM34eOJSE9oJS4cOoN0GajQWUAr_FY5zBEBU/s1600/kam.jpg" height="400" width="266" /></a></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8000001907349px;">
<br />
<div style="font-size: 12.8000001907349px;">
அந்தச் செய்தி - என்</div>
<div style="font-size: 12.8000001907349px;">
இமைக்கதவுகளை தாழிடச் செய்து</div>
<div style="font-size: 12.8000001907349px;">
கண்ணீருக்கு வழிவிட்டது!</div>
<div style="font-size: 12.8000001907349px;">
<br /></div>
<div style="font-size: 12.8000001907349px;">
ஆயிரம் அசுரபலம்கொண்ட</div>
<div style="font-size: 12.8000001907349px;">
களிறுகளால் குற்றுயிராய்</div>
<div style="font-size: 12.8000001907349px;">
கிடத்தப்பட்டதுபோல<br /><br /></div>
<div style="font-size: 12.8000001907349px;">
காரிருள் சூழ்ந்த</div>
<div style="font-size: 12.8000001907349px;">
பெருவெளியொன்றில்</div>
<div style="font-size: 12.8000001907349px;">
விளையாட்டுக்குக் கூட</div>
<div style="font-size: 12.8000001907349px;">
எழுந்து பறக்க முடியாத</div>
<div style="font-size: 12.8000001907349px;">
ஊனப்பறவையாய் நான்!<br />
<br /></div>
<div style="font-size: 12.8000001907349px;">
ஆயாசமாகிப்போன</div>
<div style="font-size: 12.8000001907349px;">
உடலைச் சுமந்துகொண்டு</div>
<div style="font-size: 12.8000001907349px;">
நினைவுகளோடு பயணிக்கிறேன்..!<br />
<br /></div>
<div style="font-size: 12.8000001907349px;">
தமிழை ஆவர்த்தனமாய்</div>
<div style="font-size: 12.8000001907349px;">
பேசும் அழகு </div>
<div style="font-size: 12.8000001907349px;">
அவளுக்கு!<br />
<br /></div>
<div style="font-size: 12.8000001907349px;">
இயல் - உயிர்</div>
<div style="font-size: 12.8000001907349px;">
இசை - மூச்சு</div>
<div style="font-size: 12.8000001907349px;">
நாடகம் - மெய்</div>
<div style="font-size: 12.8000001907349px;">
அவளுக்கு!<br />
<br /></div>
<div style="font-size: 12.8000001907349px;">
இலகுமொழியில்</div>
<div style="font-size: 12.8000001907349px;">
மழலை கொஞ்சும் பண்பு</div>
<div style="font-size: 12.8000001907349px;">
அவளுக்கு!<br />
<br /></div>
<div style="font-size: 12.8000001907349px;">
எப்போதும் பூத்திருக்கும்</div>
<div style="font-size: 12.8000001907349px;">
மலர் வதனம்</div>
<div style="font-size: 12.8000001907349px;">
அவளுக்கு!<br />
<br /></div>
<div style="font-size: 12.8000001907349px;">
காலம்</div>
<div style="font-size: 12.8000001907349px;">
எத்தனைக் கொடுமையானது?</div>
<div style="font-size: 12.8000001907349px;">
கலையோடு வாழ்ந்த</div>
<div style="font-size: 12.8000001907349px;">
கமலத்தை உதிரச் செய்தது!<br />
<br /></div>
<div style="font-size: 12.8000001907349px;">
காலன்</div>
<div style="font-size: 12.8000001907349px;">
எவ்வளவு பொல்லாதவன்?</div>
<div style="font-size: 12.8000001907349px;">
பாசத்தோடு பழகியவளுக்கு</div>
<div style="font-size: 12.8000001907349px;">
பாசக்கயிறெறிந்தான்!<br />
<br /></div>
<div style="font-size: 12.8000001907349px;">
பிரம்ம கமலமல்ல அவள்</div>
<div style="font-size: 12.8000001907349px;">
ஆண்டுக்கொருமுறை பூப்பதற்கு!</div>
<div style="font-size: 12.8000001907349px;">
<br /></div>
<div style="font-size: 12.8000001907349px;">
இது</div>
<div style="font-size: 12.8000001907349px;">
பேரிடைவெளி!<br />
<br /></div>
<div style="font-size: 12.8000001907349px;">
நினைவுகளைக் கொண்டே</div>
<div style="font-size: 12.8000001907349px;">
நிரப்பமுடியும்</div>
<div style="font-size: 12.8000001907349px;">
அவள் கலைநளினங்களை</div>
<div style="font-size: 12.8000001907349px;">
எண்ணிச் சிலாகித்த</div>
<div style="font-size: 12.8000001907349px;">
மனதில் மௌனம் பரந்திருக்கிறது!<br />
<br /></div>
<div style="font-size: 12.8000001907349px;">
அவள்</div>
<div style="font-size: 12.8000001907349px;">
அமைதியாய் உறங்குகிறாள்..!<br />
<br />
<span style="font-size: 12.8000001907349px;">ஆயிரம் கலைக்கனவுகளை</span></div>
<div style="font-size: 12.8000001907349px;">
அடைகாத்தபடி!<br />
<br /></div>
<div style="font-size: 12.8000001907349px;">
இறைவா - என்</div>
<div style="font-size: 12.8000001907349px;">
கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்!<br />
<br /></div>
<div style="font-size: 12.8000001907349px;">
அவள் மீண்டும்</div>
<div style="font-size: 12.8000001907349px;">
பிறக்க வேண்டும் - என்ற</div>
<div style="font-size: 12.8000001907349px;">
பிரார்த்தனைகளோடு!</div>
<div style="font-size: 12.8000001907349px;">
<br /></div>
<div style="font-size: 12.8000001907349px;">
ஆம்!</div>
<div style="font-size: 12.8000001907349px;">
கமலினி - மீண்டும் பிறப்பாள்!<br />
<br /></div>
<div style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium;">
<b><i><span style="color: #222222; font-family: arial, sans-serif;"><span style="font-size: 12.8000001907349px;">-இராமானுஜம் நிர்ஷன்</span></span><br /><span style="color: #222222; font-family: arial, sans-serif;"><span style="font-size: 12.8000001907349px;">(நன்றி வீரகேசரி -11.04.2015)</span></span></i></b></div>
</div>
<span class="fullpost">
</span></div>
இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-487190555471023520.post-50113375421498108362014-12-01T20:17:00.003-08:002014-12-01T20:17:27.993-08:00மஹிந்தவின் கட்அவுட் - யாவும் கற்பனை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKz2_GYkjnPUliy2eGE7ZX88ZfJJk3PnJB8KtPfqReaSTkNeOgdXjClhGZF4kMWU7-gwE_PBGlfJOYmP3M7r-34FtAqqNcv8g3vQZdAlFtfLPplPKnqRrdxJpQlbjbf52dqOn9LZZoyZ0/s1600/mahinda+cutout.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKz2_GYkjnPUliy2eGE7ZX88ZfJJk3PnJB8KtPfqReaSTkNeOgdXjClhGZF4kMWU7-gwE_PBGlfJOYmP3M7r-34FtAqqNcv8g3vQZdAlFtfLPplPKnqRrdxJpQlbjbf52dqOn9LZZoyZ0/s1600/mahinda+cutout.jpg" height="253" width="320" /></a></div>
<br />
அம்மா: மகனே எவ்விடத்தில போய்க்கொண்டிருக்கிறாய்?<br />
மகன்: மஹிந்த மாமாவுடைய 10 ஆவது கட்அவுட்டை தாண்டியிருக்கேன்மா.<br />
---------------------------------------------------------------------------------------------<br />
நடத்துநர்: மஹிந்தவோட 20 ஆவது கட்அவுட்டில் இறங்குறவங்க இருந்தால் முன்னால வாங்கோ. 15 ஆவது கட்அவுட்டில் ஏறினவங்க டிக்கெட் எடுங்கோ<br />
---------------------------------------------------------------------------------------------<br />
தொலைபேசி விளம்பரம்<br />
தேசத்தில் எங்கிருந்தாலும் விரும்பியவருடன் தொடர்புகொள்ளுங்கள். நாம் எப்போதும் உங்கள் அருகிலேயே இருக்கிறோம் -<br />
மஹிந்தவின் கட்அவுட் போல<br />
----------------------------------------------------------------------------------------------<br />
பொதுமகன்: இலெக்ட்ரிசிட்டி போர்ட் ஆ?<br />
அதிகாரி: ஆமாம். சொல்லுங்கோ.<br />
பொதுமகன்: ஐயா.. இங்கே மின்கம்பத்தில மரம் விழுந்திட்டு. உடனடியா வந்து எடுத்துவிடுங்கோ. இல்லையென்டா பெரும் ஆபத்துதான்.<br />
அதிகாரி: எந்த இடத்தில என்று சரியாச் சொல்லுங்கோ. ஆட்கள அனுப்புறோம்.<br />
பொதுமகன்: மாளிகாவத்தை கோயில் வீதியில மஹிந்தவின் 12 ஆவது கட்அவுட் இருக்கிற மின்கம்பம்<br />
அதிகாரி: ?<br />
-------------------------------------------------------------------------------------------------------<br />
ஆசிரியை: சீகிரியா ஓவியங்கள் எனும் தலைப்பில் சில வரிகள் எழுதுங்கள்<br />
மாணவன்: 01. சீகிரியா ஓவியங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை<br />
02. சீகிரியா குகைக்கு முன்பாக ஜனாதிபதி மஹிந்தவின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.<br />
03. மஹிந்த ராஜபக்ஷ எமது நாட்டின் ஜனாதிபதியாவார்.<br />
04. சீகிரியாவுக்கு செல்லும் வழியெங்கும் அவருடைய ஓவியங்கள் உள்ளன.<br />
ஆசிரியை: ?<br />
-----------------------------------------------------------------------------------------------------------<br />
காதலனின் கவிதை:<br />
பரந்த வயல்வெளியில் காற்று, வெயில், மழை பாராமல் உனக்காக ஒற்றைக்காலில் காத்திருக்கிறேன்.<br />
மஹிந்தவின் கட்அவுட் போல!<br />
------------------------------------------------------------------------------------------------------------------<br />
ரஜினி ஸ்டைல்:<br />
கண்ணா...நான் ஒரு தடவ சொன்னா நூறு கட்அவுட் அடிப்பாங்க. முடிவெடுத்து இறங்கிட்டா நான் கட்அவுட் அடிக்கிறத யாராலும் தடுக்க முடியாது. கண்ணா... இன்னைக்கு செத்தா நாளைக்குப் பாலு. நான் இன்னைக்கு சொல்றேன் நாளைக்குப் பாரு. ஊரெல்லாம் நம்ம கட்அவுட் சும்மா.. அதிருமில்ல!<br /><br />
(யாவும் கற்பனை)<br /><i>கேலிச் சித்திரம்: ஆர்.சி. பிரதீப்</i><br />
<span class="fullpost">
</span></div>
இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-487190555471023520.post-86257825709535423532014-11-16T20:23:00.001-08:002014-11-16T20:47:23.800-08:00நிவேதப்ரியா IX<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<b><span style="color: blue;">"காதல் கண்ணீராய் பூக்கிறது..!"</span></b></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<i><br /></i></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<i>அது பௌர்ணமி நாளொன்று!</i></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<i>நிறைந்த நிலவு உலகை ஆட்கொண்டிருக்க என் மனதை மட்டும் மௌனம் ஆக்கிரமத்திருந்தது.</i></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<i>எழுதத் தொடங்கினேன் அவளுக்காக!</i></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<i>எந்த செம்மைப்படுத்தல்களும் இல்லாமல் அவ்வாறே இங்கு பதிவிடுகிறேன்..!</i></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
என் உயிருக்கு,</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
நீ நலமாயிருக்கிறாயா எனக் கேட்க முடியாது? நீயின்றி நான் வெறும் ஜடம் தான்.<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
நீண்டு நெடிதாகும் இரவுகளில் நிசப்தங்களை சுமப்பதற்குப் பதிலாக உன் நினைவுகளை ஏந்திச் சுகம்காணும் எனக்கு இன்று எழுத நேரம் கிடைத்திருக்கிறது.<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
எத்தனை நாளைக்குத் தான் புகைப்படத்தில் உன் கண்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பது?<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
எத்தனை நாளைக்குத் தான் நீ தந்த கவிதைகளை எழுத்துக் கோர்த்து வாசிப்பது?</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
எங்கோ இருந்துகொண்டு நீ என்னை நினைப்பதை அறிந்துகொள்ளும் என் மனதுக்கு எப்படி சக்தி கிடைக்கிறது என யோசித்ததுண்டு.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
எல்லாம் ஏதோ ஒரு வகை ஈர்ப்பு, வார்த்தைகளில் சொல்ல முடியாது அன்பு, அன்பையும் தாண்டி எங்களை ஆட்படுத்தும் அமானுஷ்யம்!</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
ம்ம்ம்...</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
உன்னோடு பேசும்போது நிறைய சொல்ல வேண்டும், என் அன்பையெல்லாம் சொல்லித் தீர்க்க வேண்டும் என நினைப்பதுண்டு. ஆனாலும் நீ என்ன நினைப்பாயோ என்ற கேள்வி அதற்கு தடைபோட்டு விடுகிறது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
உயிரே,</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
இப்போதெல்லாம் என் வேண்டுதல் என்ன தெரியுமா? இறப்பதற்கு முன் உன்னை ஒருமுறை பார்த்து ஆரத் தழுவிக்கொள்ள வேண்டும், உன் கரங்களை இறுகப்பற்றியவாறு நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பதுதான்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
அலுவலகத்தில் வெள்ளைத் தாள்களை எடுத்து கட்டுரைக்கான குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்வதுண்டு. அவ்வாறு எழுதி வைத்திருந்த பழைய குறிப்புகளை எடுத்துப் பார்த்தபோது ஒவ்வொரு தாளின் வலதுபக்க மேல் மூலையிலும் உன் பெயர் சிறிதாக எழுதப்பட்டிருக்கிறது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
ஆம்! பல சந்தர்ப்பங்களில் என்னை அறியாமலேயே உன்பால் நான் ஈர்க்கப்படுகிறேன்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
நீயும் நானும் வெகுதூரத்தில் இருக்கலாம். ஆனால் நம் மனதுக்கு இடையிலான இடைவெளியில் காற்று கூட புக முடியாது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
உன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்படும்போதெல்லாம்- நீ இறுதியாக என்னை அழைத்த வார்த்தைகள் காது மடல்களில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
நீ உச்சரிக்கும்போது மட்டுமே என் பெயரை நான் ரசிக்கிறேன்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
அநேகமான பொழுதுகளில் அந்த இனிமையான குரலை அசைபோட்டபடியே நித்திரையாகியிருக்கிறேன்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
நீலவானம், தென்றல், மழைத்தூரல், வயல்வெளி, ஒற்றையடிப் பாதை, தனிமரம், மூன்றாம் பிறை, மலைமேடு, சிலா விக்கிரகம், படர்ந்த கற்பாறை, மெல்லிசை என மனதுக்கு இதமான எல்லாமே உன்னை நினைவுபடுத்தத் தவறுவதில்லை.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
ஒருவரைப்போல ஏழு பேர் இந்த உலகத்தில் இருப்பார்களாம். ஆனால் உனக்கு நிகர் நீயே தான்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
இதை எழுதிக்கொண்டிருக்கும் போது என் இதயத்தில் தேங்கிக் கிடக்கும் காதல் கண்ணீராய் பூக்கிறது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
என்ன செய்வது? நம் பிரிவை விதியென்று நொந்துகொள்ள நான் விரும்பவில்லை. நாம் ஒன்றாய் பிரசவித்து வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் நதிகள்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
கடலில் சங்கமிப்போம். அது மரணமானாலும் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்கிறேன்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
நான் உயிர்துறக்கும் தருணத்திலும் உன் மடி போதுமெனக்கு, சிரித்துக்கொண்டே இறந்துவிடலாம்..!</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
-அன்புடன்</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
உன்னவன்.</div>
<span class="fullpost">
</span></div>
இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-487190555471023520.post-29227184800561339632014-11-12T23:53:00.000-08:002016-12-18T23:58:05.266-08:00இனி எனக்கு தனியுலகம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; white-space: pre-wrap;">
வான்மழைக்குப் பதிலாக பெரும்பாறைகள் விழுந்து என்னைப் பதம்பார்ப்பதுபோல உணர்வு. வலிகளைத் தாங்கித் தாங்கிப் பழகிப்போன எனக்கு இதுவொன்றும் புதிதல்ல.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
எனினும் இந்த வலி வித்தியாசமானது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
கண்களை மூடிக்கொள்கிறேன் - </div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
மௌனம் பரந்திருக்கும் இதயத்தில் ஏதோ இனம்புரியாதவொரு அழுத்தம் முழு உடம்பையும் பயமுறுத்துகிறது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
இரத்தம் ஓடும் இடமெல்லாம் அக்கினிப் பாய்ச்சல் போன்று சுடுகிறது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
நான் எதிர்பார்ப்புகளைத் தொலைத்து இரண்டு நாட்களாயிற்று!
என் முழுமையான அன்பை கைவிட்டு பல மணிநேரங்களாயிற்று!
என் காதல் இப்போது என்னிடத்தில் இல்லை!
என் கற்பனைகள் என்னை ஏளனமாய் பார்க்கின்றன!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
நான் எப்போதும் தனிமையாக இருந்ததில்லை. அவள் நினைவுகளைச் சுமந்துகொண்டு பள்ளிப்பருவ மாணவனைப்போல சந்தோஷமாய் சுற்றித்திரிந்திக்கிருறேன்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
நிழலைப்போல தொடர்ந்தவள் - நம்பிக்கை தந்தவள்- வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தியவளை ஆற்று மணலில் கீறிவிட்டு வந்திருக்கிறேன்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
அந்தச் சித்திரமும் அழிந்து இரண்டு நாட்களாயிருக்கும்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
கீழே விழுந்தால் ஏற்படும் வலிக்கும் மனதில் ரணத்தினால் ஏற்படும் வலிக்கும் வித்தியாசம் உண்டு.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
நான் இரண்டாவது வலியால் தவிக்கிறேன். இதற்கு காலம் பதில் சொல்லாது. சொல்லவும் முடியாது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
எந்த வலிக்கும் ஒத்தடமாய் இருந்த அவள் அன்பு, அவள் குரல், அந்தச் சிரிப்பொலியை இனி மீட்டுப்பார்க்க முடியுமே தவிர கேட்டு ஆறுதல் கொள்ள முடியாது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
இது மிக தீர்க்கமான பொழுது - என் தனிமையில் அதுவும் கண்களை மூடிக்கொண்டு என் இதயத்தைப் பார்க்கும் தருணம்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
அவள் நினைவுகளால் நிரப்பப்பட்ட இதயம் துடித்துக்கொண்டிருக்கிறதே தவிர இயக்கத்தில் இல்லை.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
பொய்யானதை நாம் எப்போதும் நம்புவதில்லை. இந்த உடம்பும் ஒரு பொய்தானே? உடல் கூட உயிர் என்ற ஒன்றோடு எத்தனை காலம் தான் இருக்கும்?
அதற்குக் கூட பிரிவு உண்டுதானே?</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
எல்லாம் மாயை.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
அவளைப்போல நானும் இனி மாயையை நம்பப்போவதில்லை.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
பிரிவுக்கான அத்தாட்சிப் பத்திரத்தில் கைச்சாத்திடுவதற்கு நல்லதொரு சான்றிதழ் எனக்கு கிடைத்தாகிவிட்டது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்புக்கும் அரவணைப்புக்கும் இருப்புக்கும் இடம் கிடையாது- இடம் இருக்காது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
அவளையே சுற்றிச்சுற்றி வந்த என் இதயம் இன்னும் கொஞ்ச காலத்தில் ஓய்வெடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
எத்தனையோ வலிகளைச் சுமந்துகொண்டிருக்கும் இதயத்துக்கு ஓய்வுகொடுக்க நானும் ஆசைப்படுகிறேன்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
பழையபடி என் தனிமையோடு பயணிக்கிறேன்..!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
இனி எனக்கு தனியுலகம்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
யாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது. யார் சொல்லியும் நான் எதுவும் கேட்கப்போவதில்லை. கட்டளைகள் - தண்டனைகள் இனியில்லை.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
எங்கோ ஒரு சமூகம் என் சேவைக்காக காத்திருக்கிறது. என் கடமையை நான் செய்யத் துணிகிறேன்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
நான் பொய்யானவன் இல்லை என்பதை அவள் அறிந்துகொள்ள சில காலம் எடுக்கலாம். அது கைகூடி வரும்போது. என் வாழ்க்கை காலாவதியாகியிருக்கும்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
இது - என் எழுத்தின் திறமைய காட்டுவதற்கான, போலியான கடிதம் அல்ல.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
என்னைச் சொல்வதற்கான பதிவு மாத்திரமே.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
இங்கு யாரும் குற்றவாளிகள் அல்லர். </div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 10px; white-space: pre-wrap;">
இந்தப் பதிவில் யாரும் விளிக்கப்படவில்லை. ஆதலால் பதிலை எதிர்பார்க்கவும் இல்லை</div>
<span class="fullpost">
</span></div>
இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-487190555471023520.post-52525612162511433582013-10-15T02:29:00.002-07:002013-10-15T02:30:49.871-07:00தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு திறந்த மடல்..!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">இலங்கையில் மாத்திரமல்லாது சர்வதேச சமூகத்தின் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">வடக்கில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்த தமிழர்களுக்கு சரியான சந்தர்ப்பமும் அமைந்தது.</span><br />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;"><br />தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் அந்த சந்தர்ப்பத்தை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டதுடன் தமது எண்ணப்பாட்டை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டினர்.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">ஆனால் கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் எதனை எதிர்பார்த்தார்களோ அதற்கு மாறான செயற்பாடுகளே தற்போது இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">வடக்கு மாகாண சபையின் கன்னியமர்வுக்கு முன்பாகவே பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">தமிழ்த் தேசியம், சுயாட்சி, சுயநிர்ணயம் என்றெல்லாம் வாக்கு கேட்டவர்கள் பதவி மோகத்துக்காக பிரிந்து நிற்கின்றமை வாக்களித்த மக்களிடையே பெருங்கவலையை உண்டுபண்ணியுள்ளது.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">தேர்தலுக்கு முன்பு வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறி இருந்தது. ஒருவாறாக சி.வி. விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்ட போதிலும் உட்கட்சிகளிடையே முரண்பாடு காணப்பட்டது.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">எது எவ்வாறாயினும் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றது.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">அதற்குப் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள், கூட்டமைப்பினரா இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.</span><br />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளிடையே முரண்பாடான கருத்துக்கள் தோன்றியுள்ளமையும் ஒவ்வொரு கட்சியும் கூட்டமைப்பின் தீர்மானங்களை ஏற்காமல் தன்னிச்சையாக இயங்கும் நிலைமையையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டமையை அங்கத்துவ கட்சிகள் சில ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோன்று முதலமைச்சர் பதவியேற்புக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி மகிந்தவை நேரடியாக சந்தித்துப் பேசியிருந்தமையையும் சில கட்சிகள் விரும்பியிருக்கவில்லை.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">இந்நிலையில் வடக்கு மாகாண சபை அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்குமான பதவிப்பிரமாண நிகழ்வு கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த நிகழ்வை வட மாகாண சபைக்குத் தெரிவான 9 உறுப்பினர்கள் நிராகரித்திருந்தனர்.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">இவ்வாறு நடக்கும் என்று தமிழ் மக்கள் சற்றேனும் நினைத்திருக்கவில்லை. கூட்டமைப்பினர் ஒன்றுபட்டு தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்த்து வைப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த நம்பிக்கைக்கு மாறான நிகழ்வே இடம்பெற்றது.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">அமைச்சு தெரிவுகள் தமிழரசுக் கட்சியின் தனிப்பட்ட முடிவு. அது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல என்றும் அதனை ஏற்றுக்கொள்ளாததால் தாம் நிகழ்வில் பங்கேற்கவில்லை என்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">இதேநேரம் பதவியேற்பு நிகழ்வை நிரகரித்திருந்த உறுப்பினர்கள், 14 ஆம் திகதி திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தனர்.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">ஆயினும் மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பின் வேண்டுகோளின் பிரகாரம், கூட்டமைப்பின் ஒற்றுமை கட்டிக்காக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதற்கமைய பதவிப்பிரமாண நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டது.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">எனினும் அவரது வேண்டுகோளையும் மீறி அதேநாள் காலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">அதேபோன்று புளொட் அமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜி.ரி. லிங்கநாதன் ஆகியோரும் யாழில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">பல்வேறு கட்சிகள் இணைந்த கூட்டணியொன்றில் சிறுசிறு பிணக்குகள் ஏற்பட்டு மறைவது சகஜம்தான். ஆயினும் கூட்டமைப்பை பொறுத்தவரையில் தமக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணாமல் தமது செயற்பாடுகளினூடாக பிரிவின் உச்சகட்டத்தை வெளிக்காட்டுவதை தமிழ் மக்கள் கவலையுடன் நோக்குகிறார்கள்.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் நிலைப்பாட்டை அதன் தலைவர் இரா. சம்பந்தன் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டியது அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அங்கத்துவக் கட்சிகள் புறக்கணித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">பதவி மோகம் கூட்டப்பினரின் நோக்கத்தை கெடுத்துவிட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">வடமாகாண சபைக்குத் தெரிவான உறுப்பினர்களுக்கு பாரிய வரலாற்றுக் கடமைகள் இருக்கின்றன. குறிப்பிட்ட மாகாணமொன்றுக்கு சேவையாற்றுவதற்காக முதன்முதல் தெரிவானதால் பொறுப்புக்கள் நிறைந்திருக்கின்றன. இந்நிலையில் வடமாகாண சபையின் கன்னியமர்வு ஆரம்பமாவதற்கு முன்பாகவே பிளவுகளும் சாடல்களும் ஆரம்பித்துவிட்டன.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">அப்படியாயின் காத்திரமான நீண்டகாலப் பயணத்தினூடாக தமிழ் மக்கள் அடைய விரும்பும் அபிலாஷைகள் தீர்க்கப்படுமா என்ற சந்தேகம் எழுவது நியாயமானது.</span><br />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;"><br />கூட்டமைப்பின் வெற்றியின் பின்னர் அவர்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை சர்வதேசம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வடக்கு மக்களின் ஏக பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள் தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் பிணக்குகளை குறுகிய காலத்தில் பேசித் தீர்மானிக்க முன்வர வேண்டியது காலத்தின் தேவையாகும்.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">கூட்டமைப்பினர் கட்சி ரீதியாக பிளவுபடும் பட்சத்தில் நிச்சயமாக அது தமிழ் மக்களையே பாதிக்கும். அதேபோன்று தென்னிலங்கையிலிருந்து கூச்சலிடும் இனவாத விஷமிகளுக்கும் இந்த விடயம் சாதகமாகிவிடும்.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">அதுமட்டுமல்ல கூட்டமைப்பு ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுப்பதை விரும்பாத சக்திகள் இந்த நிலைப்பாட்டை பயன்படுத்தி அக்கட்சியை மேலும் பலவீனமடையச் செய்ய வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளவும் இடமுண்டு.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">தமிழ்ச் சமூகத்தின் பின்னடைவுக்கு தமிழ்த் தலைமைகளிடையே நீண்டகாலமாக காணப்படும் ஒற்றுமையின்மையும் ஒரு காரணமாகும். ஆக, இனிமேலும் அப்படியொரு இக்கட்டான நிலைக்கு மக்களை தள்ளிவிடாமல் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் கடமை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<span style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">இல்லையேல் இன்னுமொரு வரலாற்றுத் தவறு இடம்பெற்று எதிர்காலத்தில் ஏக்கங்கள் மாத்திரமே மிஞ்சும் நிலை உருவாகக் கூடும். அவ்வாறானதொரு நிலை ஏற்படும் பட்சத்தில் தற்போதைய தமிழ்த் தலைமைகளின் பெயர் கறை படிந்த கறுப்புப் புள்ளியாய் மக்கள் மனதிலும் வரலாற்றிலும் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.</span><br />
<br style="font-family: Latha; font-size: 11.818181991577148px;" />
<strong style="font-family: Latha; font-size: 11.818181991577148px;">-இராமானுஜம் நிர்ஷன்</strong><span class="fullpost">
</span></div>
இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-487190555471023520.post-81893010533717244012013-10-06T22:48:00.001-07:002013-10-06T23:15:34.079-07:00'நடா' என்றொரு ஆளுமை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqJQ5C0wGYFcJUYDk-sF1aFClabShieJaBycXKWJeqPru1JgVJoHSpG_EyWp_BRDVpNr19yM1uDQy8XzF6KubGuAf2cm7ku5koirPseKxzzgifWEr8EaB7j8nUVi4DtoYifDp5AaoB8vg/s1600/1381468_10151753815059724_34040819_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqJQ5C0wGYFcJUYDk-sF1aFClabShieJaBycXKWJeqPru1JgVJoHSpG_EyWp_BRDVpNr19yM1uDQy8XzF6KubGuAf2cm7ku5koirPseKxzzgifWEr8EaB7j8nUVi4DtoYifDp5AaoB8vg/s1600/1381468_10151753815059724_34040819_n.jpg" /></a></div>
<br />
<br />
அது 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதி. வீரகேசரியின் பிரதம ஆசிரியருக்கு நேரடியாக கடிதம் ஒன்றை வரைந்திருந்தேன்.<br />
<br />
பத்திரிகையாளனாக வேண்டும் என்ற எனது இலட்சியம், சிறு பராயம் முதல் எழுத்துத் துறையில் உள்ள ஆர்வம் என்பவற்றைக் குறிப்பிட்டு நான் எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள் ஆகியவற்றையும் இணைத்து நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன்.<br />
<br />
ஒரு மாத காலத்துக்குப் பிறகு எனக்கு அழைப்பு வந்தது. பெண் ஒருவரின் குரல். வீரகேசரியிலிருந்து பேசுவதாகவும் ஆசிரியர் என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் அந்தக் குரல் கூறியது.<br />
<br />
அதன் பிரகாரம் வீரகேசரியின் வாயிலில் சுமார் ஒன்றரை மணிநேரம் காத்திருந்து ஆசிரிய பீடத்துக்கு வந்தேன்.<br />
<br />
மெலிந்த கறுத்த உடல்வாகுடன் அமர்ந்திருந்தார் ஆசிரியர். அவர்தான் நடா சேர் என்பது எனக்குத் தெரியாது.<br />
<br />
அன்றைய பத்திரிகைகள் அனைத்தும் மேசையின் மீதிருந்தது. ஏதோ கிறுக்கல்களுடன் இருந்த தாள்களை உற்றுப்பார்த்தவண்ணம் இருந்தார்.<br />
நான் வந்ததும் அமரச் சொல்லிவிட்டு அவருடைய வேலையில் மும்முரமாக இருந்தார். அவர் எழுதத் தொடங்கும்போதுதான் தெரிந்தது அந்தக் கிறுக்கல்கள்தான் அவருடைய கையெழுத்து என்று..<br />
<br />
மேசையின் ஓரத்தில் இருந்த சுருட்டை எடுத்து மேசையின் கீழே வைத்துவிட்டு என்னிடம் பேசத் தொடங்கினார்.<br />
<br />
"தம்பி, உங்களுடைய கட்டுரைகளை வாசித்தேன். நாலு கட்டுரைகளை எழுதிவிட்டு பத்திரிகையாளனாக வர வேண்டும் என நினைக்க வேண்டாம். நாம் இதை தொழிலாக இங்கே செய்துகொண்டிருக்கிறோம்"<br />
<br />
வார்த்தைகளில் கடும் தொனி தெரிந்தது.<br />
<br />
நான் அமைதியாகவே இருந்தேன். மீண்டும் பேசத் தொடங்கினார்.<br />
எந்த பாடசாலை, கல்வித் தகைமைகள் எல்லாவற்றையும் கேட்டார். அருகில் இருந்த சிங்கள பத்திரிகையொன்றை கொடுத்து வாசிக்கச் சொன்னார். வாசித்தேன்.<br />
<br />
"இங்கே 3 ஆயிரத்து 500 ரூபா சம்பளம் கொடுப்பார்கள். ஊரிலிருந்து வந்து இங்கே தங்கியிருந்து வேறு செலவுகளையும் பார்ப்பதற்கு இந்த வருமானம் போதாது. ஆத்ம திருப்திக்காக வந்து வேலை செய்தாலும் சாப்பிடுவதற்கு பணம் இல்லையென்றால் என்ன செய்வது?<br />
<br />
ம்ம்... என்ன சொல்கிறீர்கள் தம்பி?<br />
<br />
என்ன 3 ஆயிரத்து 500 ரூபா சம்பளமா? இது எந்த வகையில் எனக்குப் போதும்? என மனதில் நினைத்துக்கொண்டேன்.<br />
<br />
'உங்களுடைய அப்பா பிரதம குமாஸ்தாவாக தொழில் புரிவதாக கூறினீர்கள் தானே? அந்த வேலையை நீங்கள் செய்யலாமே?<br />
<br />
நானும் இப்படித்தான் ஆர்வம் காரணமாக வேலை செய்கிறேனே தவிர இங்கே பணம் சம்பாதிக்க முடியாது.<br />
<br />
சரி - இன்னும் 6 மாதங்களின் பின்னர் வாருங்கள். நீங்கள் ரொம்ப சிறு பையனைப் போல தெரிகிறீர்கள். ஆதலால் கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்வோம்.<br />
<br />
அதன்பின்னரும் இதே மன நிலையில் இருந்தால் நிச்சயமாக இங்கே இணைந்துகொள்ளலாம்.<br />
<br />
தொடர்ந்து எழுதுங்கள். உங்களுடைய சிங்கராஜ வனம் கட்டுரை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. எழுத்து நடையில் நிறைய மாற்றம் வேண்டும். எப்போதுமே சுருக்கமாக, எல்லோருக்கும் விளங்கும் வகையில் எழுதுங்கள். தமிழில் எழுதுவதை கஷ்டம் என்று நினைக்க வேண்டாம். தேவையான இடத்தில் பொருத்தமான வார்த்தைகளை பயன்படுத்தும் கலையை வளர்த்துக்கொண்டாலே போதும்.<br />
<br />
மிகுதியை பிறகு பேசலாம். எனக்கு வேலை இருக்கிறது. நீங்கள் போய் வாருங்கள் என்று சொல்லிவிட்டு மேசைக்குக் கீழிருந்த சுருட்டை எடுத்தார்.<br />
நான் எழுந்து செல்லத் தயாரான போது மீண்டும் அழைத்து என்னுடைய பெயரைக் கேட்டார்.<br />
<br />
நான் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.<br />
<br />
அதன்பிறகு 2004 ஆம் ஆண்டு பிற்பகுதியில் வீரகேசரி வார வெளியீட்டின் ஆசிரிய பீடத்தில் இணைந்தேன். அப்போது வார வெளியீட்டின் ஆசிரியராக வி.தேவராஜ் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தார்.<br />
<br />
பிறகு நடா சேரை நான் நீண்ட காலமாக சந்திக்கவில்லை. எனக்கு வேலைகள் பலவற்றை கற்றுக்கொடுத்த சிவலிங்கம் சிவகுமாரன் நடா சேரைப் பற்றி நிறைய சொல்லக் கேட்டிருக்கிறேன்.<br />
<br />
ஒருமுறை சுடரொளி பத்திரிகை நிறுவனத்துக்கு புத்திரசிகாமணி ஐயாவை சந்திக்கச் சென்ற போது அங்கே இருந்தார் நடா சேர்.<br />
<br />
ஆம் அவர் சிறியதொரு அறையில் அமர்ந்து ஆங்கிலப் பத்திரிகையொன்றை வாசித்துக்கொண்டிருந்தார். சுடரொளியின் ஆசிரியபீட ஆலோசகராக அவர் கடமையாற்றிக்கொண்டிருப்பதாக அறிந்தேன்.<br />
<br />
மீண்டும் அவரோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.<br />
<br />
செய்தி என்றால் என்ன? எவ்வாறு செப்பனிடுவது? புதிதாக துறைக்குள் வருபவர்கள் விடும் தவறுகள் என்ன? போன்ற பல்வேறு விடயங்களை பேசினார்.<br />
ஊடக துறையில் உள்ள வெட்டுக் குத்து, எப்படி சமாளிப்பது என்பவற்றையும் சிரித்துக்கொண்டே சொன்னார்.<br />
<br />
தம்பி ஒரு கதை சொல்கிறேன், கேளுங்கள்.<br />
<br />
பத்திரிகையின் செய்தி ஆசிரியர் தன்னுடைய செய்தியாளரை அரசியல் நிகழ்ச்சியொன்றுக்கு செய்தி சேகரிப்புக்காக அனுப்பினாராம். <br />
<br />
நிகழ்வில் யார் யார் வருவார்கள், யார்,யார் பேசுவதை நன்றாக அவதானித்து எழுதிக்கொள்ள வேண்டும், நிகழ்ச்சி தொடர்பாக எவ்வெந்த விடயங்களை கவனிக்க வேண்டும், நேரத்தை எப்படி குறித்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்து அனுப்பினாராம்.<br />
<br />
ஆர்வத்துடன் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் சில மணி நேரங்களுக்குள் பரபரப்பாக ஆசிரியரிடம் ஓடி வந்தாராம்.<br />
<br />
சேர், நீங்கள் சொல்லிக்கொடுத்தது போல் என்னால் செய்தி சேகரிக்க முடியவில்லை என்றாராம்.<br />
<br />
அதற்கு ஆசிரியர் ஏன் என்று வினவினாராம்.<br />
<br />
சேர் நான் நிகழ்ச்சி பற்றிய செய்தி சேகரிக்கத்தான் சென்றேன். அங்கு குண்டு வெடித்துவிட்டது. அப்படி நடந்தால் என்ன செய்வதென்று நீங்கள் சொல்லித்தரவில்லை. ஆதலால் பயத்தோடு ஓடிவந்துவிட்டேன் என்றாராம் செய்தியாளர்.<br />
<br />
செய்தி சேகரிப்பதற்காக களத்துக்கு சென்றுவிட்டால் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். சிறு சிறு விடயங்கள் கூட நமக்கு உதவக் கூடும். இங்கே நான் கதையில் சொன்னது போல இருக்காதீர்கள் என்றார்.<br />
<br />
அப்போது அவருடைய முகத்தில் சிறு புன்முறுவலும் இருந்தது.<br />
ஆற்றலும் பண்பும் மிக்கவர்கள் எவ்வளவு அடக்கமாக பேசுகிறார்கள் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.<br />
<br />
அதற்குப் பிறகு ஊடகவியல் கல்லூரியில் ஒருநாள் அவரை சந்தித்தேன். கதைக்கக் கிடைக்கவில்லை.<br />
<br />
நடா சேர் போன்ற முன்னோரின் கடுமையான உழைப்பு, தூர நோக்கு, தமிழர் செல்நெறியை சிறப்பாக பேணியமை போன்றவை தான் இன்றும் நாம் ஊடகவியலாளர்களாக நின்று நிலைக்க காரணமாயிருக்கிறது.<br />
<br />
நடா சேர் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மனம் உடைந்து போனேன். உண்மையில் தமிழ் ஊடகத்துறைக்கு எப்போதுமே ஈடு செய்ய முடியாத இழப்பு இது.<br />
<br />
நடா சேர் - உங்களோடு பழகிய பொழுதுகளை நான் பெருமையாக நினைக்கிறேன்.<br />
<br />
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். உங்கள் பெயரும் சொல்லித்தந்த அறிவுரைகளும் எப்போதும் எம் மனதில் நிலைத்து நிற்கும்.<br />
<br />
<b>-இராமானுஜம் நிர்ஷன்</b><br />
<span class="fullpost">
</span></div>
இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-487190555471023520.post-18090372655399786052013-09-09T00:07:00.001-07:002013-09-09T00:07:55.320-07:00#VOPL2013: அனைவருக்கும் நன்றி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இலங்கையில் தமிழ் வலைப்பதிவாளர்களை ஒன்றுதிரட்டும் முயற்சி எமது கிரிக்கெட் போட்டியின் வாயிலாக சாத்தியமாகியது. உண்மையில் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களில் கடந்த சனிக்கிழமையும் உள்வாங்கப்பட்டுக்கொண்டது.<br />
<br />
பதிவர்கள் என்றால் கண்டதையும் கேட்டதையும் எழுதித் தீர்க்கும் வேலையற்றவர்கள் என ஆரம்ப காலங்களில் பலராலும் நாம் பார்க்கப்பட்டு வந்தோம். காலம் செல்லச் செல்ல இணைய வெளியில் பதிவர்களின் வருகையும் அவர்களால் முன்வைக்கப்பட்ட காத்திரமான கருத்துக்கள் மற்றும் சமூக ஊடகவியலின் தாக்கம், அசாத்திய வளர்ச்சி காரணமாக இணைய எழுத்துலகின் தவிர்க்க முடியாத பங்காளர்களாக மாற்றமடைந்தார்கள்.<br />
<br />
இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் வலைப்பதிவர் மாநாடு, சந்திப்புகள், போட்டிகள் என அடிக்கடி நடத்தப்பட்டாலும் கூட இலங்கையில் ஏனோ அது தொடர்ச்சியாக நடைபெறவில்லை.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpmos5Wsa4OKZ8B7rHWgu3WeIn3GNkxalxu9oX4Pha7RdY_1_TzIJaQVNP2qbrcHadKu06ZSReNqDrO99FgGljBWtlNHQdyPFkxeEb_pk6didWrGUwoLS8cRCmBsgDNhW7El1JS4Xk23A/s1600/IMG_4460.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpmos5Wsa4OKZ8B7rHWgu3WeIn3GNkxalxu9oX4Pha7RdY_1_TzIJaQVNP2qbrcHadKu06ZSReNqDrO99FgGljBWtlNHQdyPFkxeEb_pk6didWrGUwoLS8cRCmBsgDNhW7El1JS4Xk23A/s400/IMG_4460.JPG" width="400" /></a></div>
<br />
இந்நிலையில் தான் அன்புக்குரிய சகோதரர் புருஜோத்தமன் டுவிட்டரில் வீரகேசரியோடு கிரிக்கெட் விளையாடலாமே என அன்பான அழைப்பினை விடுத்திருந்தார். அதனை சகோதரர் மயூரன் பெரியும் ஆமோதித்திருந்தார்.<br />
சரி முயற்சித்துப்பார்க்கலாம் என அப்போது பதிலளித்திருந்தேன்.<br />
<br />
அதற்குப் பின்னர் எமது செய்திக்குழுவோடு சிறு கலந்துரையாடலுக்குப் பின்னர் முகாமைத்துவத்துடன் பேசிய போது உடனே அனுமதி கிடைத்தது. முழுச் செலவையும் நாமே ஏற்றுக்கொள்கிறோம் என்ற இரட்டிப்பான மகிழ்ச்சியுடன் அடுத்த கட்ட நகர்விற்கு தயாரானோம்.<br />
<br />
கிரிக்கெட் போட்டிக்கு விண்ணப்பிக்குமாறு கோரினோம். கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் எமது விதிமுறைகளுக்கு அமைவாக பதிவர்களை இணைத்துக்கொண்டோம்.<br />
<br />
ஒரு சில பதிவர்கள் எம்மோடு முரண்பட்டுக்கொண்டார்கள். நாம் யாழ்ப்பாணத்தில் போட்டி வைக்கவில்லை என்றும் பிரதேசவாதம் பார்ப்பதாகவும் சமூக இணையங்களில் எழுதினார்கள்.<br />
<br />
நான் அவற்றுக்கு தனிப்பட்ட ரீதியில் பதில் அளித்திருந்தேன்.<br />
<br />
அதன்பிறகு மூன்று அணிகளுக்கும் பெயர்களை வைத்தோம். அதன்போது சிலர் பெயர்கள் பொருத்தமற்றவை என எழுதினார்கள்.<br />
<br />
இலங்கையில் பேஸ்புக்,டுவிட்டர்,யுடியுப் ஆகிய தளங்களையே அதிகமானோர் உபயோகிப்பதால் நாம் அதற்கேற்றவாறு பெயர் வைத்தோம் என்று சொல்லியும் அதை அவர்கள் கேட்கவில்லை.<br />
<br />
அதில் கவலையான விடயம் என்னவென்றால் என்னோடு நெருங்கிப் பழகுபவர்களும் எமக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தமைதான்.<br />
தொடர்ச்சியாக நாம் எமது உள்ளக சந்திப்புகளை மேற்கொண்டோம். காத்திரமான திட்டமொன்றை தீட்டினோம்.<br />
<br />
போட்டிக்கான ஏற்பாடு, விண்ணப்பதாரர்களை ஒழுங்குபடுத்துதல், தொடர்பினை ஏற்படுத்தல் போன்ற பிரதான பொறுப்புகளை தம்பி கவிந்தன் நேர்த்தியாக முடித்துக்கொண்டிருந்தார்.<br />
<br />
மறுபுறம் வெளிவேலைகள், திட்டமிடல்கள் அனைத்தும் தினேஷ் பொறுப்பாக நின்று கவனித்துக்கொண்டார். உள்ளக விடயங்கள், செய்தியாக்கம், விளம்பரம் ஆகிய விடயங்களை தம்பிமார்களான லூசியும் சின்ன பிரசன்னாவும், தர்ஷனும் கவனித்துக்கொண்டார்கள்.<br />
<br />
ஒவ்வொருவரும் அவர்களுடைய பொறுப்பில் கவனமாக இருந்ததால் எனக்கு வேலை இருக்கவில்லை.<br />
<br />
போட்டிக்கான திகதியை நிர்ணயித்து நாள் நெருங்க நெருங்க எமக்குள் பயமும் தொற்றிக்கொண்டது.<br />
<br />
போட்டிக்கு முதல்நாள் மழை...தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருந்தது. எமக்கு பதிவர்களிடமிருந்து அழைப்புகள் வந்தவண்ணமே இருந்தன. எனினும் திட்டமிட்டபடி போட்டியை நடத்துவது என நாம் தீர்மானித்திருந்தோம்.<br />
எமது ஏற்பாட்டுக்குழுவுடன் சின்ன கலந்துரையாடலுக்கு அழைத்து அவரவருக்குரிய பொறுப்புகளை ஒப்படைத்தோம்.<br />
<br />
அடுத்தநாள் விடியல்.. காலை 4 மணி. மழை வருமோ என்ற அச்சத்தில் இறைவனை பிரார்த்தித்துக்கொண்டிருந்த எனக்கு அதிகாலையிலேயே விழுந்தது இடி.<br />
<br />
ஆம்..அவிசாவளையில் அடை மழை. இறைவனை நொந்துகொண்டு பிரசன்னாவுக்கு அழைப்பினை ஏற்படுத்தினேன்.<br />
<br />
தம்பி கொழும்பில் மழையா?<br />
இலேசான தூரல் அண்ணா.. என்ன செய்வோம்?<br />
பார்க்கலாம் என்று அழைப்பினை துண்டித்தேன்.<br />
<br />
அடுத்ததாக நாம் போட்டி நடத்தும் மலே மைதானத்துக்கு அருகில் வசிக்கும் தினேஷ{க்கு அழைப்பினை ஏற்படுத்தினேன்.<br />
<br />
மூன்று மணியளவில் மழை பெய்தது. இப்போது மழை இல்லை. நீங்கள் தைரியமாக வாருங்கள். கடவுள் எம் பக்கம்தான் என்றார்.<br />
<br />
கொட்டும் மழையிலும் காலை 4.40 மணிக்கு பஸ் எடுத்து அலுவலகம் வந்து சேர்ந்தேன். விடியவில்லை, இலேசான தூரல் இருந்தது.<br />
<br />
லூசியஸ், தர்ஷன், பிரசன்னா, சுகிர்தனுடன் மைதானத்துக்கு சென்று வேலைகளை கவனித்தோம்.<br />
<br />
போட்டிக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்த கவிந்தன் அலுவலகத்தில் இருந்து செய்தி தரவேற்றங்களை கவனித்துக்கொண்டார்.<br />
<br />
மழை வரும் என்ற அச்சம் ஆரம்பத்தில் இருந்தபோதிலும் பின்னர் மாற்றமடைந்தது.<br />
<br />
அதிக வெயிலும் இல்லை, மழையும் இல்லை. போட்டி திட்டமிட்டபடி நேர்த்தியாக நடைபெற்ற முடிந்தது.<br />
<br />
வீரகேசரி இணையத்தளத்தின் செய்திப்பிரிவுக்கு பொறுப்பானவன் என்ற வகையிலும் தனிப்பட்ட ரீதியிலும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.<br />
<br />
நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி எமது குழுவின் ஏனைய அங்கத்தவர்களான ருசெய்க், வினோத், விநோதன், சுபா, ஷாரா, கமல், கஜன், ரிசாத், சுகிதரன், சுவேன், பிரஷாந்தன் ஆகியோர் திறம்பட தத்தமது கடமைகளை நிறைவேற்றியிருந்தார்கள்.<br />
<br />
இவர்கள் அனைவருடைய ஒத்துழைப்போடும் நாம் வெற்றிகண்டோம்.<br />
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவர்கள் வந்திருந்தார்கள். ஒருசிலர் தவிர்க்க முடியாத காரணங்களினால் வருகை தராத போதிலும் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றன.<br />
<br />
சிரமம் பாராது வருகை தந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பதிவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எமக்குத் தெரியாமல் ஏதாவது குறைகள் இடம்பெற்றிருக்கலாம் எனினும் எதிர்காலத்தில் அவ்வாறு இடம்பெறாவண்ணம் சிறப்பாக செயற்படுவோம் என கூறிக்கொள்ள விரும்புகிறேன்.<br />
<br />
நாம் ஏற்பாடு செய்த பதிவர் ஒன்றுகூடலில் பெண் வலைப்பதிவாளர்களை இணைத்துக்கொள்ள முடியவில்லை. எதிர்காலத்தில் அவர்களுக்காகவும் நாம் செயற்பட எண்ணியுள்ளோம். அத்தோடு அடுத்த வரும் இவ்வாறானதொரு போட்டியை வெளி மாவட்டத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும் என தனிப்பட்ட ரீதியில் எண்ணம் கொண்டுள்ளேன்.<br />
<br />
காலநிலை உட்பட அனைத்து விடயங்களுமே எமக்கு சாதகமாக அமைந்திருந்தது. இறைவனுக்கு நன்றி. ஏற்பாட்டுக்கு அனுமதியளித்து எம்மை வழிநடத்திய நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்கு நன்றி.<br />
வெற்றிகரமாக இந்தப் போட்டியை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய உங்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்திய நன்றிகளும் வணக்கங்களும்.<br />
<br />
-அன்புடன்<br />
இராமானுஜம் நிர்ஷன்<br />
<div>
<br /></div>
<span class="fullpost">
</span></div>
இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-487190555471023520.post-8685194570149968642013-08-06T00:57:00.000-07:002013-08-06T00:57:02.915-07:00தண்ணீர் கேட்ட மக்களுக்கு கண்ணீர் கொடுத்த தேசம்..!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhV_Ed_cW1gEKEQBmiA3Gh5huBJRMd-ZrEctVmqxoH1bjewRsWiy6CNbZP-ltImy8Way3bhN-nsvaOconZ7ODL7MBKPqee5PC_0iofe_vdUEwR5uuRkCTJt8IAE2bhCr6y2zfSxEnj5UM/s1600/weliveriya001.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhV_Ed_cW1gEKEQBmiA3Gh5huBJRMd-ZrEctVmqxoH1bjewRsWiy6CNbZP-ltImy8Way3bhN-nsvaOconZ7ODL7MBKPqee5PC_0iofe_vdUEwR5uuRkCTJt8IAE2bhCr6y2zfSxEnj5UM/s400/weliveriya001.jpg" width="266" /></a></div>
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsR_3As8cTWdeqjyTGrJYJ6lzUSU-cF5lTmmGKXqgCLOjn1ICDKAlN0xwCnW1XS8alsncyaB6YBN56LyY2NS7touU69WiEmAKpjJEHSdzmSbDx817gE3RmP67MJ0AO0hvt0BuRQPZsBu8/s1600/gota-and-mahinda.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><br /></a><span style="font-family: Latha; font-size: 12px;"><br /></span></div>
<span style="font-family: Latha; font-size: 12px;"><div>
ஜனநாயக சோசலிசக் குடியரசு என்று சொல்லப்படுகின்ற இலங்கைத் திருநாட்டில் அதிகார வர்க்கத்தின் ஆணையின் பிரகாரம் வேலியே பயிரை மேய்ந்த கதை இடம்பெற்றுள்ளது.</div>
</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">ஆம்! வெலிவேரிய சம்பவத்தை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">அன்று ஆகஸ்ட் முதலாம் திகதி.</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">கம்பஹா வெலிவேரிய, ரத்துபஸ்வல பகுதி மக்கள் அரசாங்கத்திடம் தமக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்தது இவர்களது முதலாவது நடவடிக்கை அல்ல.</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்யுமாறு பிரதேச செயலர், அரசாங்க அதிபர் உள்ளிட்டோருக்கு எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதிருந்தபோதுதான் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மக்கள் தீர்மானித்தார்கள்.</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">சுத்தமான குடிநீருக்காக போராடிய மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது இராணுவம். இறுதியில் நடந்தது என்ன? மூன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டன, பலருக்குக் காயம், பலருக்கு உளரீதியான பாதிப்பு, வெறுப்பு என சோகம் நீள்கிறது.</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTkyZ87dQ3W74kkI4sT1xf7ckVcBwyphpi1SKSU1jHAYozyxUpD8Ri3A61viAtY_yKyKYRgKg0kl4T0Bg4cP_UfDBt6Hz-bUWLpLOQIfcV8P2uCAwoT00dZa-0ILr_IPbodguEogtbxOE/s1600/weliveriya002.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="223" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTkyZ87dQ3W74kkI4sT1xf7ckVcBwyphpi1SKSU1jHAYozyxUpD8Ri3A61viAtY_yKyKYRgKg0kl4T0Bg4cP_UfDBt6Hz-bUWLpLOQIfcV8P2uCAwoT00dZa-0ILr_IPbodguEogtbxOE/s400/weliveriya002.jpg" width="400" /></a><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">சம்பவம் தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள்.</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">வெலிவேரிய, கல்மடுவ, ரத்துபஸ்வல, கஹபான ஆகிய பிரதேச மக்கள் நித்திரையின்றித் தவித்தார்கள். அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் இரவு 9 மணிக்குக் கூட ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் கேட்டதாக குறிப்பிடுகிறார்கள்.</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டியது அரச சேவை. அது பொறுப்புள்ள அரச அதிகாரிகளால் தட்டிக்கழிக்கப்படும்போது நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் உரிமையோடு கேட்பதில் எந்தத் தவறும் இல்லை.</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">ஆனால் அவ்வாறு தமக்கான உரிமையை கேட்ட பொதுமக்கள் மீது இராணுவம் ஏவிவிடப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">இலங்கையில் நாய்களை கொல்லக்கூடாது என்ற விடயத்தில் அரசாங்கம் காட்டி வரும் அதீத அக்கறை கூட அப்பாவி மக்கள் விடயத்தில் கவனத்திற்கொள்ளப்படவில்லை.</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">நீதி கேட்டுப் போராடிய மக்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தால் பொலிஸாரை ஈடுபடுத்தாமல் இராணுவம் அங்கு வரவழைக்கப்பட்டதன் காரணம் என்ன?</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">இதற்கான உத்தரவை எங்கிருந்து? யார் பிறப்பித்தார்கள்?</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">சாதாரண பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அது அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறையின் உச்ச பதவியில் இருக்கக் கூடிய ஒருவராலேயே பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறாயின் யார் உத்தரவை பிறப்பித்தார்கள் என்பதை இதுவரை வெளியிடப்படாததன் பின்னணி என்ன?</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">இந்தச் சம்பவத்திலிருந்து அப்பகுதி பொலிஸார் பின்வாங்கியதன் காரணம் என்ன?</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">குற்றங்கள், வன்முறைகளை கட்டுப்படுத்தி பயம் இன்றியும் மக்கள் நம்பிக்கையுடனும் வாழும் சூழலை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட பொலிஸ் திணைக்களம் இவ்விடயத்தில் ஏன் அசமந்தப் போக்கை கடைப்பிடித்தது?</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">சுமைகளைத் தாங்கி இரத்தம் சிந்தி உழைக்கும் அப்பாவி மக்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">அதிகார வர்க்கத்தின் எல்லை மீறிய செயற்பாடாகவே இதனைக் கருத முடியும். உரிமைக்கான போராட்டத்தை துப்பாக்கி முனையால் அடக்க முயல்வதுதான் ஆணையிட்டவர்களின் ஜனநாயகமா?</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">ஆக, ஆயுதம் தரித்தவர்கள் தமது இனத்தையே சுட்டுக்கொல்ல தயங்காதபோது நாட்டில் சிறுபான்மையினத்தவரின் நிலைமை என்ன எனக் கேட்கத் தோன்றுகிறது.</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">வெலிவேரிய மக்களின் வாழ்க்கை வரலாற்றில் கறுப்பு நாளாக ஆகஸ்ட் 1ஆம் திகதி மாறியமைக்கு முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும். அத்தோடு பாரபட்சமின்றி முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டும். </span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsR_3As8cTWdeqjyTGrJYJ6lzUSU-cF5lTmmGKXqgCLOjn1ICDKAlN0xwCnW1XS8alsncyaB6YBN56LyY2NS7touU69WiEmAKpjJEHSdzmSbDx817gE3RmP67MJ0AO0hvt0BuRQPZsBu8/s1600/gota-and-mahinda.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsR_3As8cTWdeqjyTGrJYJ6lzUSU-cF5lTmmGKXqgCLOjn1ICDKAlN0xwCnW1XS8alsncyaB6YBN56LyY2NS7touU69WiEmAKpjJEHSdzmSbDx817gE3RmP67MJ0AO0hvt0BuRQPZsBu8/s400/gota-and-mahinda.jpg" width="400" /></a></div>
<br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள இராணுவம் இவ்வாறு நடந்துகொண்டமைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொறுப்புக்களை தட்டிக்கழிக்காது பதில் தருவார் என்ற நம்பிக்கையில் வெலிவேரிய மக்கள் காத்திருக்கிறார்கள்.</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">வெறுமனே விசாரணைக் குழுவை நியமித்து அறிக்கையை பெற்றுக்கொண்டு அதனை பத்தோடு பதினொன்றாக இறாக்கையில் வைத்து அழகுபார்க்காது நல்லாட்சியின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி இங்கு வெளிப்படுத்த வேண்டும்.</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">இல்லாவிடின் அரசாங்கம் மீதான தப்பபிப்பிராயம் மேலோங்குவதுடன் இது மேலும் பல ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுக்கும் என்பதே உண்மை.</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">இறுதியாக கிடைத்த செய்திகளின் பிரகாரம் அந்த மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது.</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">மூன்று உயிர்களை பலிகொடுத்து குடிநீரை பெற்றுக்கொண்ட கசப்பான வரலாறுடையவர்களாக வெலிவேரிய மக்கள் எதிர்காலத்தில் கணிக்கப்படுவார்கள்.</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><span style="font-family: Latha; font-size: 12px;">எது எவ்வாறாயினும் தண்ணீர் கேட்ட மக்களுக்கு கண்ணீரைப் பரிசளித்த சம்பவம் இலங்கையில் தான் நடந்திருக்கிறது.</span><br style="font-family: Latha; font-size: 12px;" /><br style="font-family: Latha; font-size: 12px;" /><strong style="font-family: Latha; font-size: 12px;">-இராமானுஜம் நிர்ஷன்</strong><span class="fullpost">
</span></div>
இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-487190555471023520.post-42506115847329600642012-01-12T18:39:00.000-08:002012-01-12T18:39:14.637-08:00'நண்பன்' ஒரு பார்வை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">சினிமா ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நண்பன்| திரைப்படம் வெளியாகியுள்ளது.</span><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">ஷங்கர் என்ற பிரமாண்டத்தின் இயக்கம், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, ஹரிஸ் ஜெயராஜ், மதன் கார்க்கி ஆகிய திறமைசாலிகளின் பங்களிப்பு, ஹிந்தியில் மாபெரும் வெற்றியைத் தந்த 3 இடியட்ஸின் ரீமேக் ஆகியன சினியுலகை எதிர்பார்ப்பின் உச்சத்துக்கு இட்டுச்சென்றிருந்தன.</span><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">அமைதியாக ஆரம்பமாகிறது படம். திரையில் விஜய், இலியானா, ஷங்கரின் பெயர்கள் தெரியும்போது ரசிகர்களின் கூச்சல் அரங்கை அதிர வைக்கிறது.</span><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">தமிழகத்தின் முதற்தர பொறியியல் கல்லூரியில் ஜீவா (சேவல்கொடி செந்தில்), ஸ்ரீகாந்த்(வெங்கட் இராமகிருஷ்ணன்) நண்பர்களாகின்றனர். இவர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்து படிக்கும் விஜய் (பஞ்சவன் பாரிவேந்தன்) மூன்றாவது நண்பராக இணைந்து கொள்கிறார். கல்லூரியின் அதிபர் சத்யராஜ் (விருமாண்டி சந்தனம்). அவரது மகள் இலியானா (ரியா–வைத்தியர்).</span><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">கல்லூரியில் அவ்வப்போது இடம்பெறும் குறும்புச் செயல்கள், சில சோகம் நிறைந்த காட்சிகள், விஜய் - இலியானா சந்திப்பு என கலகலப்பாக நகர்கிறது கதை.</span><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">எல்லாம் நன்மைக்கே| என்ற கருப்பொருளை தன்னகத்தே கொண்டு அதனை தன் நண்பர்களுக்கு மத்தியிலும் விதைக்கிறார் விஜய். கல்லூரி அதிபரால் அடிக்கடி கண்டிக்கப்பட்டு தூற்றப்பட்டாலும் முதல்நிலை மாணவன் என்ற பெயரை விஜையே தன்வசப்படுத்திக் கொள்கிறார்.</span><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">பட்டம் பெற்ற பின்னர் யாருக்கும் சொல்லாமல் நண்பர்களைப் பிரிந்து செல்கிறார் விஜய்.</span><div style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">
<img border="0" height="433" src="http://www.virakesari.lk/VIRA/Online_Gallery/nanban/01.jpg" style="cursor: auto;" width="400" /></div>
<span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">நண்பனைத் தேடிச் செல்லும் ஜீவா, ஸ்ரீகாந்த் விஜையை கண்டுபிடித்தார்களா? விஜய் - இலியானாவின் காதல் என்னவானது? போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது திரைக்கதை.</span><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">ரீமேக் என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் கொடுத்திருக்கிறார் ஷங்கர். ஹிந்திப் படத்திலிருந்து விலகி விடாமலும் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப வும் சுவாரஸ்யம் குறையாமல் கதையமைத்ததில் ஷங்கருக்கு ஒரு 'சபாஷ்' போடலாம்.</span><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">கதையின் ஆரம்பம் கல்லூரிக் கால குறும்புகளோடு நகர்கிறது. தமிழுக்கு ஏற்றாற் போல் சத்யராஜ் ஓரிரு இடங்களில் தனக்குரிய தனித்துவத்தை நிரூபிக்கிறார்.</span><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">ஜீவா, ஸ்ரீகாந்த் முழுமையாக கதையுடன் ஒன்றிப்போகிறார்கள். ஸ்ரீகாந்த் தனது ஆசையைப் பெற்றோரிடம் விளக்கும்போது வெளிப்படுத்தும் அளவான நடிப்புத் திறனை பாராட்டத்தான் வேண்டும். அதேபோன்று ஜீவா தனது தந்தையின் உடல்நிலை குறித்து வைத்தியசாலையில் தெரிந்துகொண்டதும் கண் கலங்கும் காட்சி திரையரங்கை மௌனமாக்குகிறது.</span><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">ஸ்ரீவத்சன் (சைலன்சர்) எனும் கதாப்பாத்திரத்தில் சத்யன் கச்சிதமாக தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். (இனி வாய்ப்புகள் அதிகரிக்க இடமுண்டு). விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் இணைந்து வரும் நகைச்சுவைக் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களுக்கு விருந்து.</span><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">இலியானா! அடடா... இந்த இடையை இவ்வளவு நாள் திரையில் பார்க்கவில்லையே என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியவராக ஜொலிக்கிறார். எனினும் ஒருசில இடங்களில் நடிப்பை அதிகமாக வெளிப்படுத்த முயன்று தோற்றுப்போவதாகத்தான் தோன்றுகிறது.</span><div style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">
<img border="0" height="410" src="http://www.virakesari.lk/VIRA/Online_Gallery/nanban/02.jpg" style="cursor: auto;" width="400" /></div>
<span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">வேறொருவருக்கு பட்டம் பெற்றுக்கொடுப்பதற்காக அவரது பெயரில் கல்வி கற்பதற்காக வந்தவரே விஜய் என்பதை நண்பர்கள் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி பல்வேறு கோணங்களில் சிந்திக்கத் தோன்றும். (3 இடியட்ஸ் படத்தை ஏற்கனவே ஹிந்தியில் பார்த்தவர்களுக்கு இது பொருந்தாது).</span><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">அந்தக் கட்டத்தில் கௌரவ வேடமேற்கும் எஸ்.ஜே.சூர்யாவும் தன் பங்குக்குத் திறமையைக் காட்டியிருக்கிறார்.</span><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">இலியானாவின் சகோதரிக்குப் பிரசவம் பார்க்கும் காட்சிகள் பரபரப்பையும் சோகத்தையும் உண்டுபண்ணுகின்றன. இப்படியொரு காட்சி அவசியம்தானா எனவும் சிந்திக்கத் தோன்றும். ஏனென்றால், ''நீதான் பிரசவம் பார்க்க வேண்டும்' என இலியானா கூறியதும் அலறுகிறார் சகோதரி. அது மரண ஓலமாய் ஒலித்து மனதைக் கீறுகிறது.</span><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">பாடல்களில், 'என் பிரண்டப் போல யாரு மச்சான்....' மற்றும் 'அஸ்கு லஸ்கா ....' பாடலும் மனதில் நிறைகின்றன. ஏனைய பாடல்களும் ஓரளவுக்குப் பரவாயில்லை என்றே சொல்லலாம்.</span><div style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">
<img border="0" height="432" src="http://www.virakesari.lk/VIRA/Online_Gallery/nanban/03.jpg" style="cursor: auto;" width="400" /></div>
<span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">சரி, விஜய் என்ற தளபதியைப் பற்றிப் பார்த்தால், </span><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">அடிதடி சண்டைகள் எதுவுமில்லாமல் அடக்கமாக வலம் வருகிறார். படம் முழுவதும் விஜையைச் சுற்றியே நகர்கிறது. வழமையான உதட்டோரச் சிரிப்பு ஓரிரு இடங்களில் வெளிப்படுகிறது. போதைக் காட்சியில் இயல்பான நடிப்பை வெளிக்காட்ட முயற்சித்தமை தெரிகிறது. அதேபோன்று ஒரு சில இடங்களில் கல்லூரி மாணவனாக பொருந்தாமல் போனாலும் கலக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வழமையான விஜய் படங்களை விட மாறுபட்டிருக்கிறது.</span><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">ஷங்கர் என்ற சிற்பி நல்ல கதாப்பாத்திரங்களுக்கு மேலும் மெருகேற்றியிருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.</span><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">ஷங்கரின் இதுவரையான படங்களைப் பார்த்து ரசித்து மாற்றங்களை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ரீமேக் படம் புதிதாக எதுவுமின்றி வெளிவந்துள்ளமை கவலையை உண்டுபண்ணிருக்கலாம். ஆயினும் பாடல் காட்சிகளில் தன் தனித்தன்மையைக் கொண்டுவந்திருக்கிறார்.</span><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><br style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;" /><span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;">ஹிந்தியில் 3 இடியட்ஸ் பார்த்தவர்களுக்கு நண்பன் கொஞ்சம் பழையதாகத் தெரிந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் அமைந்திருக்கிறது. ஏனெனில் கதையின் நகர்விலும் சுவாரஸ்யத்திலும் எதிர்பார்ப்பிலும் எந்தக் குறையையும் ஷங்கர் வைக்கவில்லை.</span><span class="fullpost">
</span><br />
<div>
<span style="background-color: white; font-size: 13px; text-align: -webkit-auto;"><br /></span></div>
<div>
<span style="font-size: x-small;"><b><span style="background-color: white; text-align: -webkit-auto;">-</span><span style="background-color: white; font-family: arial; text-align: -webkit-auto;">இராமானுஜம் நிர்ஷன்</span></b></span></div>
</div>
<iframe width="400" height="315" src="http://www.youtube.com/embed/lNcfGhhhguE" frameborder="0" allowfullscreen></iframe>இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-487190555471023520.post-29463466924774599622012-01-10T01:12:00.000-08:002012-01-10T01:12:33.790-08:00ஒரு நீண்ட பயணத்தின் கதை“எனது துறவறத்தின் முக்கியமான நாட்களை யாழ்ப்பாணத்தில் இனிமையான அனுபவங்களுடன் கழித்திருக்கிறேன். புனிதமான இந்த மண்ணைப்போல அன்பும் பண்பாட்டுப் பாரம்பரியமும் கொண்ட தமிழ் மக்களுடன் பழகக் கிடைத்ததே எனக்கு வித்தியாசமான அனுபவம் தான்” என்கிறார் துறவி இந்திரானந்த.<br><br>
தெற்கிலிருந்து வடக்குக்கு கால்நடையாக யாத்திரை மேற்கொண்டிருந்த துறவியை யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் சந்தித்தோம். எமது செய்திப்பிரிவினருடன் அவர் பகிர்ந்து கொண்ட சில அனுபவங்கள் வியக்கத்தக்கனவாகவும் சில எதிர்வுகூறல்கள் சிந்திக்கத் தூண்டுவனவாகவும் அமைந்திருந்தன.
<br><br>
“நான் காலியைச் சேர்ந்தவன். குருதுகஹதென்ன என்ற இடத்தில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்து வருகிறேன். உலகத்தில் எது உண்மையானது, எது நிரந்தரமானது என்பதை அறிந்துகொண்ட போதுதான் துறவறத்தின் மகிமை புரிந்தது.<br><br>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsxk0lufvz47gb6wLXtCtrVbPfh3rqGgELyYDzhbR3A5iiOGISFkle_y9GiMjIX6QMpv_VkvNSF3JqXZzXcS3lCdOEKj9pe-EBNjdmhyWFs8IHNtpEBBB_eDRAX56v1G2AmetjzI6rujw/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="320" width="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsxk0lufvz47gb6wLXtCtrVbPfh3rqGgELyYDzhbR3A5iiOGISFkle_y9GiMjIX6QMpv_VkvNSF3JqXZzXcS3lCdOEKj9pe-EBNjdmhyWFs8IHNtpEBBB_eDRAX56v1G2AmetjzI6rujw/s320/1.jpg" /></a></div>
1974ஆம் ஆண்டு முழுமையாகத் துறவறம் பூண்டு 1981ஆம் ஆண்டுமுதல் தனிமையில் தியானம் செய்துவருகிறேன். யால, குமன போன்ற காடுகளிலும் ஆற்றுக்கரைகளிலும் தியானம் செய்தேன்.<br><br>
மூன்று மாதங்களுக்கு முன்னர் நாகதீபத்தை அடையவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. வழியில் யாழ்ப்பாணத்தின் வணக்கஸ்தலங்களைப் பார்க்கவேண்டும் என எண்ணினேன். சில வேளைகளில் இது கடவுளின் கட்டளையாகக் கூட இருக்கலாம்.<br><br>
கால்நடையாக வரும்போது இயற்கையின் பாதிப்புகள் நிறைய இருந்தன. எனினும் நான் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. தம்புளை காட்டுவழியே நான் தனியாக வரும்பொழுது கடவுளை மட்டுமே துணைக்கு அழைத்துக்கொண்டேன். பௌத்த விகாரைகளிலும், இந்துக் கோயில்களிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும், பள்ளிவாயில்களிலும் தங்கினேன். சில நாட்கள் சுடுகாடுகளிலும் தங்கியிருந்தேன். என்னைத் தீய சக்திகள் அண்டாதவண்ணம் தியானம் செய்தேன்” என சாந்தமாகக் கூறுகையில் அவருடைய கண்களில் பயணத்தின் அபாயம் தெரிந்தது.<br><br>
“நான் புறப்படும்போது கையில் பணம் இருக்கவில்லை. வழியெங்கும் பிச்சை எடுத்து உண்டு வந்தேன்.<br><br>
கால்நடையாகவே யாழ்ப்பாணத்தை வந்தடைய இரண்டரை மாதங்கள் சென்றன. வள்ளிபுரம், செல்வச் சந்திநிதி, நல்லூர் உட்பட அனைத்துக் கோயில்களுக்கும் யாத்திரை மேற்கொண்டேன்.
<br><br>
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான வரலாறு கொண்டது யாழ்ப்பாணம். புதுமையான பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. தெற்கிலுள்ளவர்களில் பெரும்பாலானோர் இது குறித்து அறிவதில்லை. அத்துடன் இங்குள்ள ஒவ்வொரு வணக்கஸ்தலங்களும் அபூர்வ சக்தியுடையன. அதனை என்னால் உணர முடிகிறது.<br><br>
யாழ்ப்பாணத்து மக்கள் பண்பாடு தெரிந்தவர்கள். என்னோடு அன்பாகப் பேசிப் பழகினார்கள். அவர்களுக்கு சுபீட்சமான எதிர்காலம் அமையவேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்” என சாந்தமாகக் கூறி முடித்தார்.
<br><br>
கையில் பிச்சைப் பாத்திரத்துடனும் கமண்டலத்துடனும் அதிகம் பேசாதவராய் இருந்த அந்தத் துறவி தன் மனதில் தோன்றிய மேலும் சில விடயங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார். அவை ஆச்சரியத்தை உண்டுபண்ணுவதாய் இருந்தன.<br><br>
“2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு பேரழிவொன்று ஏற்படும். அது ஏதோ ஒரு சக்தியால் நிகழும். என்னால் அதை ஊகிக்க முடிகிறது.<br><br>
கடும் புயலாலும் மழை வெள்ளத்தாலும் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பாதிப்படைவார்கள். நான்கு இடங்களில் எரிமலைகள் உருவாகும். அது மேலும் அழிவை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட துர்விடயங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.<br><br>
அதன் பிறகு 700 ஆண்டுகள் நாட்டுக்கு நல்லதாக அமையும். எனினும் பெண்கள் ஆட்சியாகவே இருக்கும். பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களின் விகிதாசரம் குறையும்.<br><br>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEx_wy0JDWl9MCbno24MyH3v6zxF_zeOqHCJGm-ReAjXCwJVVeyso9piol6IJoIcrPh2HISXU01vSOiHz7D01H_gAN12IqnVkRgJo6WxQeYvEzv_HaMfC104TVh_ZziyClOwmuxpELAt4/s1600/2.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="320" width="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEx_wy0JDWl9MCbno24MyH3v6zxF_zeOqHCJGm-ReAjXCwJVVeyso9piol6IJoIcrPh2HISXU01vSOiHz7D01H_gAN12IqnVkRgJo6WxQeYvEzv_HaMfC104TVh_ZziyClOwmuxpELAt4/s320/2.jpg" /></a></div><br><br>
அந்த 700 ஆண்டுகள் கழிந்த பின்னர் தர்மத்துடன் ஆட்சியமைக்கக் கூடிய மன்னன் ஒருவன் வருவான். அவனுடைய ஆட்சியில் மக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்வார்கள். என்னுடைய தியான சக்தியினால் நான் கண்ட விடயங்கள் இவை. இதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் நான் கூறியிருக்கிறேன்” எனக் கூறி எமக்கு நன்றி தெரிவித்து எந்தப் பதிலையும் எதிர்பார்க்காமல் நடக்கத் தொடங்கினார்.<br><br>
<b>-இராமானுஜம் நிர்ஷன்</b>இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-487190555471023520.post-64668880054382925512011-11-24T21:46:00.001-08:002011-11-24T22:38:19.957-08:00மக்களை ஊமைகளாக்கி நடத்தப்படும் விபச்சாரம் (யாழில் ஓர் ஏழைக் கிராமத்தின் அவலக்குரல்)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரி லிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் இருக் கிறது உதயசூரியன் கிராமம். <br />
<br />
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள நம் தமிழ் உற வுகளின் சிறு எண்ணிக்கையிலானோர் வாழ்கின்ற கிராமம் அது.<br />
<br />
சிறு தூறல்களைக் கூட தாங்கிக்கொள் ளாத குடிசைகள், மணலில் விழுந்த இனிப் பையும் விட்டுவைக்க மறுக்கும் பள்ளிக்குச் செல்லாத சிறுவர் கூட்டம், அரை வயிறும் அன்றாட தொழிலும் எனக் காலம் கழிக் கும் பெற்றோர் என நகர்கிறது அவர்களின் வாழ்க்கை.<br />
<br />
அந்த கிராமத் துக்கு அருகில் இனந் தெரியாத குழுவினரால் விபச்சாரம் நடத்தப்படுவதாகவும் இதுகுறித்து கேட் பார் யாருமில்லை என்றும் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் எமக்குக் கூறினார்.<br />
<br />
அங்கு நாம் சென்றபோது எமக்குக் கிடைத்த தகவல்கள் உண்மையிலேயே சமுதாயத்தின் கறுப்புப் புள்ளியை அடை யாளம் காட்டுவதாக இருந்தன.<br />
கிராமத்தை அண்மித்தபோது இராணு வத்தினர் சிலர் 10 முதல் 14 வயது நிரம் பிய சிறுவர்களிடம் ஏதோ விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர்.<br />
<br />
அந்தச் சிறுவர் கள் எங்கிருந்தோ பசுமாடு ஒன்றை திருடி வந்துள்ளனர். அந்தச் சிறார்கள் மாடு வெட்டுவதற்காக ஒரு குழுவினரால் பயன் படுத்தப்படுவதாக இராணுவத்தினர் எமக்குக் கூறினர்.<br />
<br />
மாடு வெட்டுவதற்கு சிறுவர்கள் பயன் படுத்தப்படுவதாக அவர்கள் சுட்டிக் காட் டிய இடம் கிராமத்துக்கு சற்று ஒதுக்குப் புறமாக அமைந்திருந்த கட்டடம்.<br />
நூற்றுக்கணக்கான காகங்கள் அந்தக் கட்டடத்தைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டி ருந்தன. இறைச்சிக்காக நாய்கள்கூட்டம் சண்டையிடும் காட்சியையும் காணக் கூடியதாக இருந்தது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOA48v0yRksGMd4x0Lu3aeHwLkNYI2h3FHYDprtjZb1glChN8yRimOYuohFCDR7Oxxbzjd169S_s9FwXttM87tA9EzV140qfa5xeo0IyVafEgnZgFR8UQJa9hOLeoqjul1ze8mN-OIEYc/s1600/Savagacheri-new.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOA48v0yRksGMd4x0Lu3aeHwLkNYI2h3FHYDprtjZb1glChN8yRimOYuohFCDR7Oxxbzjd169S_s9FwXttM87tA9EzV140qfa5xeo0IyVafEgnZgFR8UQJa9hOLeoqjul1ze8mN-OIEYc/s1600/Savagacheri-new.jpg" /></a></div>
<br />
<br />
இனந்தெரியாத குழுவினரால் விபச்சாரம் நடத்தப்படும் இடம் எனக் கூறப்பட்டது அந்த இடம்தான் என நாம் ஊகித்துக்கொண்டோம்.<br />
அந்தக் கட்டடம் மாடுகள் வெட்டுவதற்காக நகரசøபியனரால் அமைத்துக்கொடுக்கப்பட்டது என கிராமத் து மக்கள் கூறினார்கள். கயிறுகள், கத்திகள் தண்ணீர்த் தொட்டி என அனைத்துமே அதற்கான அடையாளங்களைக் காட்டின.<br />
<br />
இதேநேரம், எமக்கு உதவியாக வந்த அந்தக் கிராமத்துக் குடும்பஸ்தர் கூறிய தகவல்கள் உண்மை நிலையை எடுத்துக்கூறின.<br />
<br />
ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 69 வயதான அந்தக் குடும்பஸ்தர் அங்கு நிஜமாகவே என்ன நடக்கிறது என்பதைக் கூறினார்.<br />
<b><br /></b><br />
<b>"</b>இந்தக் கிராமத்தில உள்ள நிறையப் பேர் நகரசபையிலதான் வேலை செய் யினம். எங்களுக்கு காசு தேவை என்றத சாதகமாகப் பயன்படுத்தும் பலர் இங்க விபச்சாரம் நடப்பதை சொல்ல வேண்டாம் எண்டு சொல்லி பணம் தருவாங்க.<br />
<br />
நாங்க ஏழைகள் எண்டும் எமக்குக் காசு தேவை யெண்டும் அவங்களுக்கு நல்லாத் தெரி யும்.<br />
இரவானதும் பொம்பிளைகளின்ற நடமாட்டமாகவே இருக்கும்.<br />
<br />
இப்படியிருக் கும் திறந்த வெளியில் (கையை காட்டுகிறார்) உறவு வச்சுக் கொள்ளுவினம்.<br />
<br />
கிராமத்து ஆட்கள் யாராவது பார்த்திட்டா பணம் கொடுத்திட்டு போயிடுவினம். சிலர் தாம் "ஆமி' என்று சொல்லுவினம். உண்மை எதுவெண்டு எமக்குத் தெரியாதுதானே?.<br />
<br />
ஒருநாள் இங்க 2 பேர் வந்தினம். சிங்களத்தில பேசிச்சினம். இங்க உள்ள குடிசைக்குள்ள புகுந்து ஒரு பெண்ணை வரச்சொல்லி பலவந்தமா கூப்பிட்டாங்க. கிராமத்து மக்கள் எல்லாம் கூடினதும் அங்கிருந்து போயிட்டாங்கள்.<br />
<br />
இந்த பில்டிங்ல மாடு வெட்டுறது உண்மதான். சின்னப் பொடியன்களுக்கும் நல்ல பழக்கம் உண்டு. அதவிட இந்த விஷயம் தான் அதிகமா நடக்குது. எங் களுக்கு அரசியல்ல யாரையும் தெரியாது. வெளியில சொல்லவும் பயமா கிடக்குது.<br />
இது இவ்வளவும் நான் சொன்னேன் எண்டு தெரிஞ்சா அடுத்த முற நீங்க வரும்போது நான் இருப்பேனோ தெரியேல<b>"</b> என அடுக்கடுக்காச் சொல்லி முடித்தார்.<br />
<br />
அந்த கட்டடத்தைச் சுற்றிப் பார்த்ததில் ஆங்காங்கே உள்ளாடைகள் வீசப்பட்டும் கழிவுப்பொருட்களோடு“ துர்நாற்றமும் வீசிக்கொண்டிருந்தது.<br />
அரசியல் உரிமைகளுக்காக தமிழ்த் தலைமைத்துவங்கள் ஒரு புறம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆயினும் இவ்வாறான ஏழை மக்களின் உரிமை களுக்காகவும் சுதந்திரத்துக்காகவும் குரல்கொடுக்க அப்பகுதி தலைமைத்துவங்கள் முன்வரவில்லை என்பதே கிராமத்து மக்களின் குற்றச்சாட்டு.<br />
<br />
தாங்கள் ஏழைகள், தங்களின் குரலை மதிப்பார் யாருமில்லை என்ற தாழ்வு மனப்பான்மையை அங்குள்ள கிராமத்து மக்கள் நீக்கிக்கொள்ள வேண்டும் என்பது மறுப்பதற்கில்லை.<br />
<br />
அதேநேரம், நீண்டகாலமாக அப்பகுதியில் விபச்சாரம் நடைபெற்று வருவதாகவும் எங்கிருந்தோ பெண்கள் அழைத்துவரப்படுவதாகவும் மக்கள் கூறுகிறார்கள்.<br />
<br />
அந்தக் கட்டடத்திலிருந்து சற்றுத் தூரத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாயின் அது இராணுவத்தினருக்குத் தெரியாமல் உள்ளதா என்பதும் ஒருபுறம் கேள்விக் குறியாக இருக்கிறது.<br />
<br />
ஆரோக்கியமான உடலாயினும் சிறியதொரு நச்சுமுள் ஆயுள்வரை ஆரோக்கியத்தைக் கெடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மரணத்துக்கு இட்டுச்செல்வதைப்போல இந்தப் பிரச்சினையும் சமுதாயத்தின் போக்கை மறுதிசையில் மாற்றிவிடக்கூடிய அபாயம் நிறைந்தது.<br />
<br />
இதுகுறித்து சாவகச்சேரி மாநகரச பையினரும் பொலிஸாரும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டியது அவசியமும் கட்டாயமானதுமாகும்“.அத்துடன்“ பகிரங்கமாக செய்யப்படும் தவறுகள் சுட்டிக்காட்டப்படாவிடின் அப்பகுதி மக்களின் எதிர்காலம் இருள் நிறைந்ததாகவே இருக்கும் என்பது கண்கூடு.<br />
இந்தக் கிராமத்து மக்களின் நலன்கருதி உரிய தரப்பினர் சரியான தீர்வினை முன்வைக்க வேண்டியது இன்றைய காலத்தின் அத்தியாவசியத் தேவையாகும்.<br />
<br />
<b>-இராமானுஜம் நிர்ஷன்</b><br />
<span class="fullpost">
</span></div>இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-487190555471023520.post-49924109816669604462011-04-21T23:35:00.000-07:002011-04-22T00:03:29.800-07:00நிவேதப்ரியா VIII<div>ஆர்ப்பரிப்பான வார்த்தைகள் எதுவுமின்றி மெல்ல மெல்ல எமது உரையாடல் நகர்ந்துகொண்டிருந்தது. நிலவின் ஒளியிடையே மேகங்களும் அப்படித்தான் நடைபோட்டுக்கொண்டிருந்தன.</div><div><br /></div><div>அவளுடன் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் தூங்கிப்போனேன்.</div><div><br /></div><div>அதிகாலையிலும் அவளது அழைப்பு</div><div><br /></div><div><span class="Apple-style-span"><b>“என்ன இன்னும் நித்திரையா”</b></span></div><div><br /></div><div><span class="Apple-style-span">“ஆமாம். தேவி என்னை இறுக அணைத்துக்கொண்டதால் எழ முடியவில்லை”</span></div><div><br /></div><div><span class="Apple-style-span"><b>“என்ன? யார் அந்த தேவி?” </b></span>(வார்த்தையில் கோபம் தெரிந்தது)</div><div><br /></div><div><span class="Apple-style-span">“ம்ம்ம்…அவள் பெயரைச் சொன்னால் கோபிக்கக் கூடாது”</span></div><div><br /></div><div><span class="Apple-style-span"><b>“கேட்டதற்கு பதிலைச் சொல்லுங்கள்”</b></span></div><div><br /></div><div><span class="Apple-style-span">“நித்ரா தேவி”</span></div><div><br /></div><div>மெல்லச் சிணுங்கிக் கொண்டாள்.</div><div><br /></div><div>சந்தோஷமாக ஆரம்பித்தது அன்றைய பொழுது.</div><div><br /></div><div>அடிக்கடி அவளைச் சந்திக்காமலும் இடையிடையே பேசி இன்னல்தராமலும் நாட்கள் கழிந்தன.</div><div><br /></div><div>அவளிடமிருந்து நிறைய நல்ல விடயங்களை கற்றுக்கொண்டேன்.</div><div><br /></div><div>புத்தகத்துக்கு ஒத்தகருத்து நூல் என சிறுவயதில் படித்திருக்கிறேன். ஆனாலும் கொஞ்சம் பக்குவப் பாதைக்குத் திரும்பியவுடன் அதன் உள் அர்த்தங்களைப் புரிந்துகொண்டேன்.</div><div><br /></div><div>நல்லவிடயங்களை சொல்பவையும் புத்தகங்கள் தான் கூடாத விடயங்களை சொல்பவையும் புத்தகங்கள் தான். ஆனால் நல்ல விடயங்களை மாத்திரம் சொல்பவை நூல்கள்.</div><div><br /></div><div>அவள் நல்ல விடயங்களை எனக்குச் சொல்லித்தந்தாள்.</div><div><br /></div><div>ஆசானுக்கு ஒத்த கருத்து குரு என ஆரம்பகாலங்களில் கற்றிருக்கிறேன். ஆனால் காலம் செல்லச் செல்ல அதிலும் உள் அர்த்தம் உண்டு என்பதை அறிந்துகொண்டேன்.</div><div><br /></div><div>ஆசான் என்பவர் இப்படித்தான் வாழ வேண்டும் என நல்வழி காட்டுபவர். குரு என்பவர் இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்ந்துகாட்டுபவர்.</div><div><br /></div><div>ஒருவகையில் எனக்கு அவள் குருவாக இருந்தாள்.</div><div><br /></div><div>எனது பயணம் சரியானதா? இலட்சியத்துக்கான பாதையிலிருந்து விலகியிருக்கிறேனா? யாருக்குத் துன்பம் விளைவித்தேன்? என்ன நல்லது செய்திருக்கிறேன்? என்றெல்லாம் நான் அடிக்கடி தனிமையில் யோசிப்பதுண்டு.</div><div><br /></div><div>(ஒவ்வொரு நாள் நித்திரைக்கு முன்பும் இப்படிச் சிந்திக்க வேண்டும் என்னுடைய குரு எனக்குப் போதித்திருக்கிறார். நான் தினமும் செய்வதில்லை)</div><div><br /></div><div>அப்படிச் சிந்திக்கையில் ப்ரியாவுடனான உறவு நிரந்தரமாக அமையாது என என் ஆழ்மனம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தது.</div><div><br /></div><div>ஒரு பட்சம் முழுவதும் அவளுடனான தொடர்புகளை குறைக்க வேண்டும் என எண்ணினேன்.</div><div><br /></div><div>(பதினைந்து இமைத்தல்கள் அல்லது பதினைந்து நிமிடங்கள் கொண்டது ஒரு காஷ்டை – காஷ்டைகள் முப்பது கொண்டது ஒரு கலை – கலை முப்பது கொண்டது ஒரு முகூர்த்தம் - முகூர்த்தம் என்பது இரண்டு நாழிகை – முகூர்த்தம் முப்பது கொண்டது பகலும் இரவும் கூடிய ஒரு நாள் - நாள் பதினைந்து கொண்டது ஒரு பட்சம்)</div><div><br /></div><div>அவளிடமிருந்து விலகியிருந்த நாட்கள் நான் வாழ்க்கையில் மீட்டுப்பார்க்க விரும்பாதவை.</div><div><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIFpXhL7EeMDDaPp8Rt5NzVuZDAuVkDitpa-CbATSP1JUHIuEDqhbHmDUY7H9qMYkM1Xvv9n-MpoqL2A0GAGsB9Uzq2CiMsqgjJnwJM2K36wnSrgukJmbMH2HzR00wndp21t5AYpO5urY/s1600/alone.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIFpXhL7EeMDDaPp8Rt5NzVuZDAuVkDitpa-CbATSP1JUHIuEDqhbHmDUY7H9qMYkM1Xvv9n-MpoqL2A0GAGsB9Uzq2CiMsqgjJnwJM2K36wnSrgukJmbMH2HzR00wndp21t5AYpO5urY/s320/alone.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5598293501795994098" /></a><br /><br /></div><div>ஓர் இராஜ யானை தனது வலது முன்னங்காலால் என் இதயத்தை மிதிப்பது போல அடிக்கடி துடிப்பு.</div><div><br /></div><div>பல்லாயிரம் ஊசிகளால் என் ஒவ்வொரு கலங்களும் துளையிடப்படுவதாய் உணர்வு.</div><div><br /></div><div>ஆழமாயும் அகலமாயும் இதயம் முழுவதும் இடம்பிடித்து காதலின் அத்தனை அர்த்தங்களையும் என்னுள் விதைத்தவளின் நினைவுகளை ஒரு பட்ச காலத்தில் எப்படிப் புதைப்பது?</div><div><br /></div><div>இமைக் கூடங்களில் சிறையிருக்கும் ஓரப்பார்வையையும் புன்முறுவலையும் நினைத்தமாத்திரத்தில் எங்கே விடுவிப்பது?</div><div><br /></div><div>காதுமடல்களில் அடிக்கடி ஒலிக்கும் நளினக்குரலை எப்படி ஒடுக்குவது?</div><div><br /></div><div>ஆம்..! காலம் பதில்சொல்லும் எனக் காத்திருந்தபோது உண்மையாகவே நாம் பிரிய நேரிட்டது.</div><div><br /></div><div><span class="Apple-style-span">(தொடர்ந்து பேசுவேன்…)</span></div><span class="fullpost"></span>இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-487190555471023520.post-86525529023781488502011-04-07T01:22:00.000-07:002011-04-19T00:18:39.232-07:00நிவேதப்ரியா VII<div>“யாயும் ஞாயும் யார் ஆகியரோ</div><div>எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்!</div><div>யானும் நீயும் எவ்வழி அறிந்தும்</div><div>செம்புலப் பெயல்நீர் போல</div><div>அன்புடை நெஞ்சம் கலந்தனவே”</div><div><br /></div><div>இது குறுந்தொகைப் பாடல்.</div><div><br /></div><div>நான் யாரோ? நீ யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் யார் யாரோ? எந்தவகை உறவும் இல்லாதவர்கள். ஆனாலும் நீயும் நானும் செம்பாட்டு மண்ணில் நீர் கலந்து அந்த மண்ணில் ஒன்றாகி ஒன்றையொன்று பிரிக்க முடியாததுபோல, நம் இருவருடைய அன்பும் ஒன்று கலந்துவிட்டனவே என்கிறது அதன்பொருள்.</div><div><br /></div><div>உண்மையில் எனக்கு நினைவுக்கு வந்த வரிகள் இவை.</div><div><br /></div><div>மலர்ந்த முகமும் தலைசாய்த்ததான ஓரப்பார்வையும் பிடிமானத்தை மேலும் அதிகரித்தன. ஏதேதோ பேசினோம் - பகிர்ந்துகொண்டோம். ஆயினும் முழுமையாக முகத்தையும் கண்களையும் பார்த்துக்கொள்வதற்கு மனம்துடித்ததேயன்றி இலாவகமாய் எதுவும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.</div><div><br /></div><div>சுவைசொட்டும் பள்ளிக்காலங்களையும் விட்டு விலகாத பாழ்ய நினைவுகளையும் அவ்வப்போது பரிமாறிக்கொண்டதில் முழுத் திருப்தி.</div><div><br /></div><div>படித்தவள் - பெருந்தன்மையில்லை</div><div>பண்பானவள் - பொறாமைகளில்லை</div><div>அன்பானவள் - ஆடம்பரங்களில்லை</div><div><br /></div><div>சாந்தமான பார்வைகளால் சங்கேதங்கள் பேசிக்கொண்டிருந்தாள்.</div><div><br /></div><div>கடிகார முள் தடைபட்டாலும் நேரத்தை விஞ்ச முடியாத துர்பாக்கியசாலிகளாய் நிறைய எதிர்பார்ப்புகளோடும் - நிறைவான பொழுதுகளைக் கழித்த திருப்தியோடும் விடைபெற்றுக்கொண்டோம்.</div><div><br /></div><div>பெண்ணுக்குத் தையல் என்றொரு மறுகருத்துண்டு. பிரிந்த உறவுகளை இணைத்தல், உடைந்துபோன மனதை ஒத்தடமாய் மாற்றியமைத்தல் போன்றவற்றை அன்போடு செய்விப்பதால் இந்தப்பெயருண்டு என எங்கோ படித்த ஞாபகம்.</div><div><br /></div><div>மெய்தான்.</div><div><br /></div><div>தொலைத்தொடர்புக் கோபுரத்திலிருந்து பல்திசைகளுக்குச் செல்லும் அலைகள்போல ஆற்றாமை எனும் இயலாமையால் சிதறிப்போன மனதோடு வந்த எனக்கு ஆறுதலாய் அவளும் அந்தச் சந்திப்பும் மாறியிருந்தது.</div><div><br /></div><div><span class="Apple-style-span">காலச்சுவடுகள் தந்த </span></div><div><span class="Apple-style-span">கண்ணீரெல்லாம் </span></div><div><span class="Apple-style-span">நீ பேசும்போது மட்டும் </span></div><div><span class="Apple-style-span">மாயமாகுவதன் மர்மம் என்ன? </span></div><div><span class="Apple-style-span"><br /></span></div><div><span class="Apple-style-span">வெறும் பார்வைகளால் பேசுகையில் </span></div><div><span class="Apple-style-span">நீயும் நானும் ஒரேசமயத்தில் </span></div><div><span class="Apple-style-span">சிரிப்பது எந்த பந்தத்தில்? </span></div><div><br /></div><div>இவை அன்றிரவு என் பாமர உள்ளம் உதிர்த்த வரிகள்.</div><div><br /></div><div><br /></div><div><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjebLeNLlcF9I9FdigLVzH7c0z96PQZFuS9t6x9mpqUB7cRP_yaLMiFFIt9XQSWoCH-OEgtTwJHVfj68tDIYchIw_ObvyaHX3jA8HNLql7QciwFCFwcT1wFSpBUyS2Lr0-mtDw7_1acFq4/s1600/love.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjebLeNLlcF9I9FdigLVzH7c0z96PQZFuS9t6x9mpqUB7cRP_yaLMiFFIt9XQSWoCH-OEgtTwJHVfj68tDIYchIw_ObvyaHX3jA8HNLql7QciwFCFwcT1wFSpBUyS2Lr0-mtDw7_1acFq4/s320/love.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5592754780113461858" /></a><br /><br /></div><div>எப்போதும் இணையமுடியாது எனத் தெரிந்தும் குரங்கு மனது எப்படியெல்லாம் அலைபாய்கிறது? வாழ்க்கையின் விசித்திரங்களில் இதுவும் ஒன்றா?</div><div><br /></div><div>நிலையாமை பற்றிக் கற்றறிந்தும் இந்த விடயத்தில் பக்குவம் என்பக்கம் வராமைக்குக் காரணம் என்ன?</div><div><br /></div><div>இப்படியும் நான் சிந்திக்கையில் அதையும் தாண்டி என் ஜீவனின் ஆனந்த நரம்புகளில் மெல்லிசையாய் ஒலித்துக்கொண்டிருந்தது ப்ரியாவின் பிஞ்சுக் குரல்.</div><div><br /></div><div>என்னைத் தாண்டிய மாற்றுச்சூழலுக்குள் மீண்டும் லயித்துப்போகிறேன்…. அதன்பின்வந்த ஜாமங்கள் எப்படிக் கழிந்ததென்பதை வெளிச்சொல்ல எத்தனிக்கையில் ஓர் அசட்டு வெட்கம் கட்டிப்போடுகிறது.</div><div><br /></div><div>அமைதியாய் இருந்த என்னுடைய தொலைபேசிக் குழந்தை இரவு 11 மணிக்கு அழுதது. அவள் இலக்கத்தைப்பார்த்து இயல்பாய் உதடுகள் புன்முறுவலைப்பிரசவிக்க “ஹெலோ” என்றேன். 30 செக்கன் மௌனத்தின் பிறகு “கனவுபோல் இருக்கிறது” என ஆரம்பித்தாள்…</div><div><br /></div><div><span class="Apple-style-span">(தொடர்ந்து பேசுவேன்…)</span></div><span class="fullpost"></span>இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-487190555471023520.post-21093811746102599972011-01-26T02:23:00.000-08:002011-02-06T22:53:04.927-08:00உண்மை உயிரைப் பறித்தது - சுகிர்தராஜனின் நினைவுக் குறிப்புஅது 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி. அன்றைய தினம் இரவு ஊடகத்துறையினருக்கு மாத்திரமல்லாமல் முழுத் தமிழ்ச் சமூகத்திற்கும் கிடைத்த சோகச் செய்தி ‘திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்கள் துப்பாக்கிப்பிரயோகத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்கள்’ என்பதுதான்.<br /><br />அடுத்ததாக அனைவர் மனதிலும் எழுந்த கேள்வி யார் கொலை செய்தார்கள்?<br /><br />அப்போது தமிழ் ஊடகங்கள் சிலவற்றுக்கு திருகோணமலை செய்தியாளராகப் பணியாற்றியவர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன். மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் துணிவாக செய்திகளை அவர் தந்துகொண்டிருந்த காலப்பகுதியில் அவரிடம் தொடர்புகொண்டு நடந்தவற்றை விபரிக்குமாறு கேட்டோம்.<br /><br />“திருகோணமலை பெரிய கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் இந்த மாணவர் குழாம் மாலை வேளையில் கூடிக் களித்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அங்கு முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத குழுவினர் அவர்கள் மீது கைக்குண்டை எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.<br /><br />அதன்பிறகு அங்கு வந்த கடற்படையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள ஆரம்பித்தனர். அந்தச் சம்பவத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்” என்றார் சுகிர்தராஜன்.<br /><br />உடனடியாக புகைப்படங்களை அனுப்பி வைத்ததுடன் நடந்தவற்றை தெளிவாக எழுதியிருந்தார்.<br /><br />உண்மைகள் வெளிவந்ததால் இந்தச் சம்பவம் அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.<br /><br />ஹர்த்தால், சோக தினம் என அடுத்தடுத்த நாட்கள் கழிந்துகொண்டிருந்தன.<br /><br />இந்நிலையில் அதே மாதம் 24 ஆம் திகதி எமக்கு மற்றுமொரு பேரதிர்ச்சி காத்திருந்தது. “சுகிர்தராஜன் சுட்டுக்கொல்லப்பட்டார்”.<br /><br />நாட்டில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக திறமையான ஊடகவியலாளர்கள் பலரை தமிழ்ச் சமூகம் இழந்திருக்கிறது. அதனால் சமூகம் அடையவிருந்த எழுச்சியில் தொய்வு ஏற்பட்டது என்று சொல்வதில் தவறில்லை.<br /><br />இலங்கை மண் இழந்த ஊடகவியலாளர்களில் சுகிர்தராஜன் என்ற திறமைசாலியை ஊடகச் சமூகம் எளிதில் மறந்துவிடாது.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZw9yex1SbQjCKOGSKgAnEaNMk61RQbUrxDw1WzH4Ad5oGzlyq44R-o4JMj1WQLI6OR9NWaNNyyTdEScnAaECC5i4FzMnWGwCrwFws8b7fQqNaP92M9NQRX2WyCji3u9tJoJCn_CqC8ME/s1600/sugirtharajan+1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 252px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZw9yex1SbQjCKOGSKgAnEaNMk61RQbUrxDw1WzH4Ad5oGzlyq44R-o4JMj1WQLI6OR9NWaNNyyTdEScnAaECC5i4FzMnWGwCrwFws8b7fQqNaP92M9NQRX2WyCji3u9tJoJCn_CqC8ME/s320/sugirtharajan+1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5566439005692096242" /></a><br /><br />பெயருக்காகவும் புகழுக்காகவும் ஊடகத்தொழில் செய்பவர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் தான்சார்ந்த சமுதாயத்துக்காக உழைக்க வேண்டும், இன்னல்படும் உறவுகளுக்குக் கைகொடுத்து உண்மையை உள்ளவாறே உரைக்க வேண்டும் எனக் கொள்கையோடு வாழ்பவர்கள் இன்றும் சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.<br /><br />அவ்வாறு தீர்க்கமான கொள்கையுடைய சுகிர்தராஜனின் இழப்பால் திருகோணமலை மண்ணின் பல்வேறு உண்மைகள் இன்னும் வெளிப்படுத்தப்படாமல் மறைத்திருக்கின்றது என்றே கூறலாம்.<br /><br />ஏனென்றால் அவரது படுகொலையின் பின்னர் ஏனைய ஊடகவியலாளர்கள் உண்மைகளை வெளிக்கொண்டுவரத் தயங்கினார்கள். சுகிர்தராஜனைப் போல இளவயதில் மரணத்தை எதிர்நோக்க பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை.<br /><br />வார்த்தையை வார்த்தையால் எதிர்நோக்க வேண்டும். பலவீனத்தை பலத்தால் எதிர்நோக்குதல் தவறு என அவரது கட்டுரைகளில் அடிக்கடி குறிப்பிட்டதுண்டு.<br /><br />சுகிர்தராஜனைப்போன்ற ஊடகவியலாளர்கள் அரிதாகவே சமூகத்தில் இனங்காணப்படுகிறார்கள்.<br /><br />சுகிர்தராஜனின் வெளிப்படையானதும் நியாயமானதுமான எழுத்துக்களை சகித்துக்கொள்ள முடியாத விஷமிகளால், பேனா முனையால் எதிர்கொள்ள முடியாத தீய சக்திகளால் அவர் ஆயுதமுனையில் கொல்லப்பட்டார்.<br /><br />தனது 37 ஆவது வயதில் குடும்பம், பிள்ளைகள் பரிதவிக்க உயிர்நீத்தமையும், உறவினர்கள் கதறியழுதமையும் கொலைகாரர்களை எந்தவிதத்திலும் பாதித்திராது என்பதை மக்கள் நன்கறிவார்கள்.<br /><br />அந்தச் சோகம் மறைந்துபோகட்டும் ஜனநாய நாடு என்று சொல்லிக்கொள்ளும் இலங்கை அரசாங்கம் கொலையுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்தத்தானே போகிறது என்ற நம்பிக்கை சிலரிடம் காணப்பட்டதையும் மறுப்பதற்கில்லை.<br /><br />இலங்கையில் கடந்த இரு தசாப்தங்களில் 18 இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் எத்தனை பேரின் கொலைகளுக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்?<br /><br />சம்பந்தப்பட்டவர்கள் இந்தக்கேள்விக்குப் பதில்சொல்ல முன்வருவதில்லை. விசாரணைகள் இடம்பெறுவதாகக் கூறியே காலம்கடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.<br /><br />அதேநேரம், உண்மைச் செய்திகளை வெளிக்கொணர்வதில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் மாற்றுத் தரப்புகளிடமிருந்து வரும் சவால்களுக்கும் தீர்வு காணப்படவில்லை.<br /><br />காலம் பதில்சொல்லும் என ஆறுதல்கொண்டு கசப்பான உண்மைகளை மறந்துவிடவும் முடியாமல் சுகிர்தராஜன் பற்றிச் சிந்திக்கையில் எதிர்காலத்தின் மீதான ஏக்கப்பார்வையில் ஜனநாயகம் நிறம்மாறித்தான் தெரிகிறது.<br /><br />-இராமானுஜம் நிர்ஷன்இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-487190555471023520.post-80879420462126530332010-12-21T23:38:00.001-08:002010-12-21T23:38:46.709-08:00விக்கிலீக்ஸ் விவகாரத்தில் தமிழ் அமைப்புக்களின் மௌனம் மக்களுக்குக் கூறும் தகவல் என்ன?அமெரிக்க இராஜதந்திரத் தகவல் பரிமாற்றங்களை அம்பலப்படுத்திவரும் விக்கிலீக்ஸ் இணையத்தளம் பற்றிய பேச்சு உலக நாடுகளை இன்னும் ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கிறது.<br /><br />அமெரிக்கா எனும் தனியொரு வல்லரசு நாடு ஆசிய பிராந்தியத்தில் எந்தளவுக்கு தனது ஆதிக்கத்தைச் செலுத்த எத்தனிக்கிறது என்பதை விக்கிலீக்ஸ் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அதேநேரம் ஏனைய நாடுகள் தங்கள் உள்விவகாரங்கள் கசிந்ததை மறைப்பதற்கு மாற்றுவழிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன.<br /><br />எனினும் தமது நாடு குறித்து வெளியாகியுள்ள தகவல் பற்றி அந்தந்த நாடுகள் கட்டாயமாக பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.<br /><br />இந்நிலையில் விக்கிலீக்ஸ் இலங்கை குறித்து வெளியிட்டு வரும் தகவல்கள் சர்வதேசத்தின் பார்வையை இலங்கை பக்கம் திருப்பியுள்ளது எனலாம்.<br /><br />இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைகள் அவசியம் என ஏற்கனவே விக்கிலீக்ஸ் மூலம் தகவல் கசிந்திருந்தது.<br /><br />அதனைத் தொடர்ந்து அமெரிக்க எதிர்ப்பினையும் மீறி வடகொரியாவிடமிருந்து பெருந்தொகையான ஆயுதங்களை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.<br /><br />இவற்றைவிட கடந்த வியாழக்கிழமை விக்கிலீக்ஸில் வெளியாகிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.<br /><br />இலங்கையில் யுத்த காலத்தின்போதும் அதற்குப் பின்னரும் துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகளும் அரசியல் பிரமுகர்கள் சிலரின் மரணத்தின் திரைமறைவுகளும் வெளிக்கொண்டுவரப்பட்டன.<br /><br />ஆளும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவி மற்றும் பிரதியமைச்சர் பதவிகளை வகிக்கும் முக்கியமாக தமிழ் அரசியல் தலைவர்களின் கீழ் இயங்கியதாகக் கூறப்படும் அமைப்புகளின் செயற்பாடுகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.<br /><br />அதில் முக்கியமானவை வருமாறு,<br /><br />01. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு துணை இராணுவக் குழுக்கள் அரசுடன் இணைந்து செயற்பட்டமை- அதற்காக ஆட்கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டமை<br /><br />02. யாழ். குடாநாட்டில் எந்த அச்சமுமின்றி துணை இராணுவக் குழுக்கள் மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை<br /><br />03. விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டோரை கடத்தியமை – சில சந்தர்ப்பங்களில் கொலை செய்தமை<br /><br />04. துணை இராணுவக் குழுக்களுக்கு அரசாங்கம் நிதி வழங்கியமை<br /><br />05. தமிழ் வர்த்தகர்களிடம் பணம் வசூலிக்க பாதுகாப்பு அமைச்சு ஆதரவு வழங்கியமை<br /><br />06. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலைகளின் பின்னணியில் துணை இராணுவக் குழுக்கள்<br /><br />07. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்ட பொருட்களை முதலில் துணை இராணுவக் குழுக்கள் பெற்றுக்கொள்ளவும் விற்பனை செய்யவும் அனுமதிக்கப்பட்டமை<br /><br />08. துணை இராணுவக் குழுக்கள் முகாம்களில் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை <br /><br />- இவையே இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட விடயங்களில் முக்கியமானவை.<br /><br />அமெரிக்க தூதுவரால் அனுப்பப்பட்ட இத்தகவல்கள் எந்த ஆதாரத்துடன் பெறப்பட்டவை என்பது அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்படவில்லை.<br /><br />எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குறிப்பிட்ட அமைப்புகள் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.<br /><br />இரு நாடுகளுக்கிடையிலான கருத்துப் பரிமாற்றங்கள் இராஜதந்திர ரீதியில் அணுகப்படும் என இலங்கையின் ஊடக மற்றும் தகவல் தொடர்பாடல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் தெரிவித்திருந்தார்.<br /><br />இரகசிய தகவல்கள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் வெளிப்படுத்தப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இத் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்கத் தூதர் பற்றீசியா புட்டெனிஸிடம் தனது கண்டனத்தை வெளியிட்டார்.<br /><br />இலங்கையில் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுவரும் நிலையில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் அரச தரப்பினரை மேலும் சங்கடத்துக்குள்ளாக்கியுள்ளது.<br /><br />எனினும் அந்த அறிக்கையில் துணை இராணுவக் குழுக்கள் என வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு அமைப்புகளிடமிருந்தும் இதுவரை எந்தவொரு மறுப்பும் வெளிவரவில்லை.<br /><br />ஆக, இவர்களின் மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியா? எனச் சிந்திக்கத் தோன்றுகிறது.<br /><br />யுத்த காலத்திலும் அது நிறைவடைந்த பின்னரும் கொழும்பிலும் வடக்கு – கிழக்கு பகுதிகளிலும் ஏராளமானோர் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டனர். மேலும் பலர் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.<br /><br />போர் என்ற வடு ஒருபுறம் வாட்டிவதைக்க மறுபுறம் இவ்வாறான இன்னல்களால் தமிழ்பேசும் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் மக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.<br /><br />குறிப்பாக தமிழ் அமைப்புக்களால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரம் குறித்தான விடயங்கள் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் பல மடங்கு சிந்திக்க வைத்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.<br /><br />இராஜதந்திர தகவல் பரிமாற்றங்கள் வெளிப்படையான மதிப்பீடுகளேயன்றி அவை நாட்டின் கொள்கைகளைப் பிரதிபலிக்கவில்லை என அமெரிக்கா கூறியிருந்தது.<br /><br />எனினும் முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட தமிழ் அமைப்புக்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு உண்டு என்பதை சம்பந்தப்பட்ட அமைப்புகள் உணர வேண்டும். உணர்வார்களா?<br /><br />-இராமானுஜம் நிர்ஷன்இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-487190555471023520.post-32892839399505542272010-12-14T01:33:00.000-08:002010-12-14T01:41:42.458-08:00இலங்கையில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கும் 'Cyber Crime'பேஸ்புக் சமூக வலைப்பின்னலானது உலகநாடுகளில் அடைந்துவரும் வளர்ச்சியைப்போல இலங்கையிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.<br /><br />'சந்திக்கு வந்தால் சுற்றத்தாரைச் சந்திக்கலாம்' எனக் கிராமத்து மொழிவழக்கில் சொல்வார்கள். இப்போது அந்தக்காலம் மாறி 'FB' இற்கு வந்தால் கூட்டத்தோடு குதூகலிக்கலாம்' என்றாகிவிட்டது. <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3R2ARS_23edCSg_QPxf6g-deUDBgHGjdqmBItqJfkKSIEltt0PeHhEHJOF7sIdSoBmOt4naRL9lb6lJG9mNl9hb_q32BMKLUPxi_gtx_MYFo4Oagp4amkgsdg73M9-Og24qhxVtjQsV8/s1600/facebooklogo.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 120px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3R2ARS_23edCSg_QPxf6g-deUDBgHGjdqmBItqJfkKSIEltt0PeHhEHJOF7sIdSoBmOt4naRL9lb6lJG9mNl9hb_q32BMKLUPxi_gtx_MYFo4Oagp4amkgsdg73M9-Og24qhxVtjQsV8/s320/facebooklogo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5550470435237019298" /></a><br /><br />ஒருபுறம் இணைய உலகம் நாளுக்கு நாள் புதிய மலர்ச்சியையும் பரிமாணத்தையும் கண்டுவரும் அதேவேளை, இதற்கு மாற்றாக ஏற்பட்டுவரும் எதிர்விளைவுகளையும் யாராலும் தடுக்க முடிவதில்லை.<br /><br />ஆம்! பேஸ்புக்கானது பிரபலமடைந்துவரும் அதேநேரம் கடவுச்சொல்லை வேட்டையாடும் களமாகவும் மாறிவருகிறது என்கிறார்கள் இணையப் பயன்பாட்டாளர்கள்.<br /><br />பல்வேறு பெயர்களில் அறிமுகமாகும் இணையத் திருடர்கள் புதிய கணக்குகளை உருவாக்கியும் வெவ்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் தனிப்பட்ட நபரின் இரகசியங்களை பெற்றுக்கொள்கிறார்கள். இந்நடவடிக்கை இலங்கையில் படிப்படியாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.<br /><br />இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழு இத்தகவலை உறுதி செய்துள்ளது.<br /><br />இலங்கை அரசாங்கத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (<br />ICTA) கீழ் இயங்கும் இக்குழு இணையத்தில் நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. <br /><br />இணைத்தில் திருட்டுச்செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி திருட்டுத்தனமாக பணம் சம்பாதிப்போரின் எண்ணிக்கையும் நாட்டில் அதிகரித்துள்ளது.<br /><br />பேஸ்புக்கினூடாக இவ்வாறு பணம் சம்பாதிப்பவர்கள் தொடர்பில் இக்குழுவுக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துவருவதாக அதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா வீரகேசரிக்குத் தெரிவிக்கிறார்.<br /><br /><strong>உண்மைச் சம்பவம்</strong><br /><br />இது இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவமொன்று,<br /><br />சுகத் என்ற இளைஞர் பேஸ்புக்கில் அதீத ஆர்வம் கொண்டவர். அவர் அதனை உபயோகப்படுத்திக்கொண்டிருக்கையில் கவிந்த்ரா என்ற பெண் தன்னையும் நண்பர் குழாமில் இணைத்துக்கொள்ளுமாறு அழைப்புமடல் விடுத்துள்ளார்.<br /><br />மற்றுமொரு இளம் பெண்ணின் தொடர்பு கிடைத்த மகிச்சியில் கவிந்த்ராவை இணைத்துக்கொண்ட சுகத் இணையத்தினூடாக தனது தொடர்பாடலை வளர்த்துக்கொண்டுள்ளார்.<br /><br />சில நாட்களின் பின்னர் வீடியோ காட்சியினூடாக முகம்பார்த்துப் பேச வேண்டும் என்ற கவிந்த்ராவின் வேண்டுகோளை ஏற்ற சுகத் பேசுவதற்காகக் காத்திருந்த வேளை அந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்தது.<br /><br />தன்னுடன் வீடியோ காட்சியினூடாகப் பேசவேண்டும் என்றால் இந்தத் தொடுப்பைப் (<br />Link) பயன்படுத்துமாறு கேட்டுள்ளார் கவிந்த்ரா. அந்தத் தொடுப்பை சொடுக்கியவுடன் (Click) அதனூடாக வந்த இணையப்பக்கத்தில் சுகத்தின் மின்னஞ்சல் முகவரியும் கடவுச்சொல்லும் கேட்கப்பட்டுள்ளது. <br /><br />ஆர்வ வெள்ளம் அறிவுக்கரையைத் தாண்டியதால் அவற்றை இணையப்பக்கத்தில் பதிவு செய்தார் சுகத்.<br /><br />அதன்பின்னர் கவிந்த்ராவைக் காணவில்லை. சுகத்தின் பேஸ்புக் கணக்கிற்குள்ளும் நுழைய முடியவில்லை.<br /><br />சுகத்தின் நண்பர் ஒருவர் கூறியதன் பிரகாரம்இரண்டு நாட்களின் பின்னர் சுகத்தின் பேஸ்புக் சுவருக்கு (Wall) வந்த செய்தி இதுதான் " உங்கள் கடவுச்சொல் எங்களிடம் இருக்கிறது. எந்த மாற்றத்தையும் எங்களால் செய்ய முடியும். கடவுச்சொல் வேண்டுமானால் ஸ்கைப் (Skype) தொடர்பாடலில் நவீனுடன் தொடர்பினை ஏற்படுத்தி பணம் செலுத்துங்கள்". <br /><br />இந்தத் தகவலின் பின்னர் சுகத் பாதுகாப்புக்காக இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழுவைத் தொடர்புகொண்டுள்ளார்.<br />இவ்வாறு ஏமாற்றமடைந்தவர்களும் பணம் செலுத்தியவர்களும் இலங்கையில் ஏராளமானோர் இருக்கிறார்கள்.<br /><br />சுகத்தைப் போன்றவர்கள் மட்டுமன்றி பேஸ்புக்கில் வெவ்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தவர்களிடமிருந்து தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகக் கூறுகிறார் ரொஷான் சந்திரகுப்தா.<br /><br />தன்னைத் திருமணம் முடிக்கத் தவறிய ஆண் ஒருவரின் அந்தரங்கப் படங்களை இளம்பெண் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் தரவேற்றம் செய்துள்ள விடயம், ஒரே பெயரில் இன்னுமொரு கணக்கினை ஆரம்பித்து சம்பந்தப்பட்ட நபரின் நண்பர்களை கேளிக்கையாக்கிய சம்பவம், கடவுச்சொல்லைத் திருடி பேஸ்புக் புகைப்படத் தொகுப்பில் நீலப்படங்களை இணைத்துவிட்டமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை நாம் இங்கு உதாரணமாகக் கூறலாம்.<br /><br /><br /><strong>இதிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது?</strong><br /><br />1. அடையாளம் தெரியாத நபர்களின் வேண்டுகோள் மடலை ஏற்றுக்கொள்ளாதீர்கள். <br /><br />2. நீங்கள் அறிந்திராத நபர்களிடமிருந்துவரும் கவர்ச்சியான மின்னஞ்சல்களை சொடுக்கிப் பர்வையிடாதீர்கள்.<br /><br />3. சமூக வலைப்பின்னல்களில் திடீரெனத் தோன்றும் தொடுப்புகளை அகற்றிவிடுங்கள்.<br /><br />4. உங்களுக்கென உள்ள சொந்தத் தகவல்களை தரவேற்றம் செய்யாதீர்கள்<br /><br />இவை அடிப்படையான சில விடயங்களேயன்றி உங்கள் மின்னஞ்சல் கணக்காயினும் பேஸ்புக் அல்லது மாற்றுக் கணக்குகளாயினும் பொது இடங்களில் உபயோகப்படுத்துதலிலும் ஏனைய பாதுகாப்புகளிலும் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டியது அவசியமாகும்.<br /><br />பேஸ்புக் கணக்குகளில் வேட்டையாடும் நபர்களைத் தவிர வலைப்பதிவுகள் மற்றும் ஏனைய தனிப்பட்ட இணையப் பாவனைப் பக்கங்களை முடக்குவதிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.<br />நடைமுறை உலகில் இணையம் தொடர்பான எந்தவொரு தவறான செயற்பாடுகளையும் திருட்டுச் செயல்களையும் 'சைபர் க்ரைம்(Cyber Crime)' என அழைக்கிறார்கள். <br /><br />அமெரிக்க இராஜதந்திர தகவல் பரிமாற்றங்களை உலகுக்கு எடுத்துக்காட்டிய விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் தற்போதைய நடவடிக்கைகளை அடுத்து இச்சொல் இணையப் பாவனையாளர்களிடையே மிகவும் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.<br /><br />ஆகையால் இணைய உலகில் வளர்ச்சியை நோக்கும் அதேவேளை மறுவிளைவுகளையும் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். புதிதாக முளைக்கும் அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்நோக்குவது என்பதில் கவனம்கொள்ள வேண்டும்.<br /><br />இலங்கையில் அவ்வாறானதொரு பிரச்சினைகளுக்கு நீங்கள் முகங்கொடுக்க நேர்ந்தால் <br />slcert@slcert.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு தொடர்புகொண்டு உதவி கோர முடியும். <br /><br />இலங்கையைப் பொருத்தவரையில் கடவுச்சொல் திருட்டு மற்றும் ஏனைய முறைகேடான விடயங்கள் குறித்து அனைவருமே தெளிவாக அறிந்துகொள்ளவில்லை.<br /><br />நிகழ்கால உலகில் இளம்பராயத்தினர் இணைய உலகிற்குள் வெகுசீக்கரமாகவே உள்வாங்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர் இணையத்துக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.<br /><br />ஆக, எது எவ்வாறாயினும் எமது பாதுகாப்பு எமது கரங்களிலேயே தங்கியுள்ளது. உலகமயமாக்கலிலும் தொடர்பாடலிலும் கொஞ்சம் கொஞ்சமாக பாரியதொரு மாற்றத்தைக் கண்டுவரும் இணையத்தின் அபார வளர்ச்சியின் போக்கில் எமது பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வுகொள்ள வேண்டும்.<br /><br />-இராமானுஜம் நிர்ஷன்இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-487190555471023520.post-31136109809529352412010-11-20T00:54:00.000-08:002010-11-20T00:57:20.913-08:00சித்தனின் ‘கிழித்துப்போடு’“சிந்தை தெளிவாக்கு – அல்லால்
<br />இதைச் செத்த உடலாக்கு
<br />பந்தத்தைப் போக்கிவிடு – அல்லால்
<br />உயிர் பாரத்தை நீக்கிவிடு”
<br />
<br />என தேவியிடம் விண்ணப்பித்தான் கவித்தலைவன் பாரதி.
<br />
<br />“என்னுடைய சிந்தனைகள் அனைத்தையும் தூய்மைக்கிவிடு. நிலையில்லாத இந்த உலகம், உறவுகள் மீதான என் பந்தத்தைப் போக்கிவிடு. இவையிரண்டும் இல்லையேல் என் உயிரை நீ எடுத்துக்கொள்” என்கிறான்.
<br />
<br />உயிர் வேறு, உடல் வேறு என்பதை அறிவதற்கும், நிலையற்ற வாழ்வில் நிலையியல் எது என்பதை வேறுபடுத்திக்கொள்வதற்கும் காலம் தேவைப்படுகிறது.
<br />
<br />சிலர் பக்குவத்தினூடாகவும் சிலர் பண்படுத்தலினூடாகவும் சிலர் அனுபவித்தினூடாகவும் சிலர் கல்வியினூடாகவும் இதனை அறிந்துகொள்கிறார்கள்.
<br />
<br />அவ்வாறு உலகத்தைப் பற்றியும் நிலை,நிலையாமை பற்றியும் விளக்கிக் கூறுவதுதான் “சித்தன் பதில்கள்”.
<br />
<br />வீரகேசரி வார வெளியீட்டில் பிரதி ஞாயிறுதோறும் வெளிவரும் சித்தன் கேள்வி பதில்கள் வாசகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துக்கொண்ட பகுதியாகும்.
<br />
<br />அந்தப் பகுதியில் முக்கியமான விடயங்கள் தொகுக்கப்பட்டு ‘கிழித்துப்போடு’ எனும் தலைப்பேற்று நூலாக வெளியிடப்படவுள்ளது.
<br />
<br />நூலின் அறிமுக விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (21.11.2010) மாலை 4 மணிக்கு கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.<div>
<br />
<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzBc5IWztsY_uQppi-dS8bn7W4OwAnctxKD8-Tan5dNpKPNiPRPHV3q6P-TLJeSyrvB3Pz6G3Zx9u5Rb8vl7Dp_qEE3h6gQmqM5PqCbiR3Fj1un3NU4hKlbglI5f6xVa307jEM4m5Q0c0/s1600/siththan.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 262px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzBc5IWztsY_uQppi-dS8bn7W4OwAnctxKD8-Tan5dNpKPNiPRPHV3q6P-TLJeSyrvB3Pz6G3Zx9u5Rb8vl7Dp_qEE3h6gQmqM5PqCbiR3Fj1un3NU4hKlbglI5f6xVa307jEM4m5Q0c0/s320/siththan.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5541553051911330690" /></a>
<br /><span style="font-weight:bold;"><span class="Apple-style-span" >
<br />
<br />அரசியல் சாயம் கலக்காமல் தனித்துவமாக நடைபெறவுள்ள இந்த அறிமுகவிழாவுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
<br /></div>இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-487190555471023520.post-4007562564923794542010-07-16T23:18:00.000-07:002010-07-16T23:24:52.997-07:00நிவேதப்ரியா VIஅந்தி மங்கிய வேளையிலும் இளமையாகத் தெரிந்த சூரியன். சாரல் மழை. மனதோடு பேசிய தென்றல்…<br /><br />வெளிச்சூழல் எத்தனையோ இன்பமாகவும் வெளிச்சமாகவும் இருந்தது.<br />மனம் மட்டும் இருளுக்குள் தள்ளப்பட்டதாயும் நரம்புகள் சுருக்கிட்டு அவ்வப்போது வெதும்பிப் புடைப்பதாயும் மாறியிருந்தன.<br /><br />மாலை 6 மணி.<br /><br />தூரத்தே தெரியும் கடல். அலையலையாய் குவிந்து கரையை மோதியதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருவகையில் அந்த அலைகளும் என் மனதைப் போலவே ஒத்திருந்தன.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0iW48XpKQk-FVzlCxguM8t9s1LsW8T90UtJHUIHa8VOYKK13HS94EYgxMRhyphenhyphenGLGYEIokYJGlXIf4yOFK1Gj2xQbHhPOI0tNSY7evBHHF4pfwsDfLZXIG0Nyr_S71mRZ2JPR5MnBRJCsU/s1600/beach.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0iW48XpKQk-FVzlCxguM8t9s1LsW8T90UtJHUIHa8VOYKK13HS94EYgxMRhyphenhyphenGLGYEIokYJGlXIf4yOFK1Gj2xQbHhPOI0tNSY7evBHHF4pfwsDfLZXIG0Nyr_S71mRZ2JPR5MnBRJCsU/s320/beach.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5494756770089952834" /></a><br /><br />கடலில் முதல் அலை காதலி என்றும் பின்வரும் அலை காதலன் என்றும் பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன.<br /><br />காதலியை விரட்டிவருமாம் காதலன் அலை. காதலி முன்னால் ஓடிவந்து கரையோடு ஒதுங்கிவிடுமாம். கவலையுற்ற காதலன் அலை கவலையுடன் மனமில்லாமல் திரும்பிச் செல்லுமாம்.<br /><br />இப்படிச் செல்கிறது கதை.<br /><br />இராஜராஜசோழனின் கதையில் தீவுப் பெண் பூங்குழலிக்கு கடல் தான் கம்பளம். அந்தக் கடலில் படகுசெலுத்தி எத்தனை ஆனந்தம் கண்டிருப்பாள்? படகில் படுத்தவாறு வானில் பரந்திருந்த நட்சத்திரங்களையும் கடலில் தெரியும் நிலவு முகத்தையும் பார்த்துப்பார்த்தே பசிபோக்கியவள் அவள்….<br /><br />இதுவும் மனதில் வந்துபோகிறது…<br /><br />அசையாத பொருளை நீண்டநேரம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அசையும் பொருளை, அதுவும் வித்தியாசமான கோணங்களில் - ஒரு சமயம் தள்ளாடி மறுசமயம் துள்ளியோடிவரும் அலைகளை எத்தனை தடவையும் பார்த்துக்கொண்டிருக்கலாம்.<br /><br />இப்படியும் யோசிக்கிறேன்….<br /><br />வான்மீகி இராமாயணத்தைப் பற்றிப் பேசும் கம்பர் இப்படி அவைக்கு அடங்குகிறார்.<br /><br />“வான்மீகியால் எழுதப்பட்ட இராமாயணம் ஒரு பரந்த பாற்கடல். அதனை கொஞ்சம் கொஞ்சமாகப் பருக முயலும் சிறுபூனை நான்”<br /><br />இதுவும் என் எண்ணத்தில் உதிக்கிறது….<br /><br />இவ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்கும்போது சுதாகரித்தவனாய் மணியைப் பார்க்கிறேன். 6.38 ஆகியிருந்தது.<br /><br />ப்ரியா வரும் நேரம்தான் - எண்ணிச் சிலாகிக்கையில் அங்கே வந்திருந்தாள்.<br /><br />நிமிர்ந்து பார்க்காத பார்வையும் பேசாத மொழிகளும் அவளைக் கட்டிப்போட்டிருக்க, சலங்கைகளின் ஒருமித்த ஸ்ருதியோடு நடந்து வந்தவளைக் காணுகையில் ஏற்பட்ட கொள்ளை இன்பத்தையும் புத்துணர்ச்சியையும் புதுச் சுவையையும் வார்த்தையால் எப்படி வர்ணிப்பது?<br /><br />தூரத்தே தெரிந்த கடல் கண்ணிலிருந்து மறைந்தது.<br /><br />இளவேனிற் காலத்தில் தூய மழைத்துளியெடுத்து பூவிதழ்கொண்டு செதுக்கிய புதுச்சிற்பமாய் அவள் மட்டும் கண்ணுக்குள்ளும் எனக்குள்ளும்…!<br /><br />ஒரே நேரத்தில் ‘ஹாய்’ சொன்னதிலும் அதே நேரத்தில் ‘நலமா’ என்றதிலும் நமக்குள் இருந்த ஒற்றுமை எண்ணங்கள் கொட்டியதை அவளும் உணராமலில்லை.<br /><br />நா கூச பேசத்தொடங்கி - ஆரம்பம் முதல் - அந்த நாளின் அந்திநேரம் வரை நடந்ததெல்லாம் பேசினோம்.<br /><br />பார்க்கப் பார்க்க கண்ணில் சுவை கொட்டும் அவள் இனிமையானவள்.<br /><br /><br />“வலிநிறைந்த சுவடுகளைச் சுமந்தவனாய்<br />நான் உன் முன்….<br /><br />கண்களுக்குள் என்னைப் பார்க்கிறேன்<br /><br />நீ இமைத்து மூடுகிறாய்..!<br /><br />என் வலிகளுக்கு<br /><br />அதைவிட ஒத்தடம் ஏது?”<br /><br /><span style="color: rgb(0, 0, 153);">(</span><span style="color: rgb(0, 0, 153);">தொடர்ந்து</span><span style="color: rgb(0, 0, 153);"> </span><span style="color: rgb(0, 0, 153);">பேசுவேன்</span><span style="color: rgb(0, 0, 153);">…)</span>இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com6